Sunday, March 7, 2010

தஞ்சாவூர்

* 1.ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ரூ.2.5 லட்சத்தில் திருப்பணி

கும்பகோணம்: ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில் தரை தளம் அமைக்கும் பணியை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரவழிபாட்டுக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பவளக்கொடி உடனாய ஆபத்சகாயேஸ்வரர் கோவி ல் உள்ளது. சுக்கிரீவனால் பூஜை செய்யப்பட்டதும், திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த சொர்ண பை ரவர் உள்ளது. நாரதரால் சாபம் பெற்ற அனுமன் சாபம் நீங்கி இசை இன்பம் பெற்ற தலம்.


சித்திரை ஐந்து, ஆறு, ஏழாம் தேதிகளில் சூரியபூஜை நடக்கிறது. கர்ப்பிணி ஒருவருக்கு இறைவன் அப்பெண்ணின் தாயாராக மாறி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. வழிபடுவோரின் ஆபத்தை நீக்குவதால் ஆபத்சகாயேஸ்வரர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிறப்புகள் பலபெற்ற இத்தலத்தில் வெளிப்பிரகாரம் கவனிப்பாரின்றி புல், பூண்டுகள் மண்டி கிடந்த நிலையில் வாரவழிபாட்டு மன்றத்தினர் பிரகார தரை தளம் அமைக்க முடிவு செய்தனர். அதன்பேரில் வாரவழிபாட்டு மன்ற கவுரவத்தலைவர் மோகன், தலைவர் மாசிலாம ணி, செயலாளர் அன்பாலயா மே �கன், உறுப்பினர்கள் ராஜேந்திரன், முருகவேலு, சண்முகம் ஆ கியோர் ஆடுதுறை பகுதி மக்களுடன் இணைந்து 2.5 லட்சம் ரூ பாய் மதிப்பில் இப்பணியை தெ �டங்கி செய்து வருகின்றனர். 16 ஆயிரம் சதுரஅடியில் சிமெண்ட் தரைதளம் அமைக்கப்படுகிறது.


இத்தலத்தில் கந்தபுராண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மோகன் வரவேற்றார். பக்திப்பாடல்களை ராஜகோபால் பாடினார். முன்னதாக செல்வராஜன் துவக்க உரை நிகழ்த்தினார். ஞானசம்மந்தம் கந்தபுராணத்தில் தேவர் புலம்பனுபடலம், அயிராணி சோகப்படலம், மகாசாத்தப்படலம் என சொற்பொழிவு நிகழ்த்தினார். மோகன் மகிழ்வுரை நிகழ்த்தினார். பின், சந்தானம் தலைமையில் கூட்டுவழிபாடும், சிறப்பு அன்னதானமும் நடந்தது.
Top
* 2.திருவையாறில் வரும் 14ம்தேதிஇளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல்

திருவையாறு:திருவையாறில் இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வரும் 14ம்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.திருவையாறு வசந்த மகால் திருமண மண்டபத்தில் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கிராம கமிட்டியும், பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி கமிட்டியும் அமைப்பதற் கான தேர்தல் வரும் 14ம் தேதி தொடங்கி 18ம்தேதி வரை நடக்கிறது. தேர்தல் அலுவலகராக ஜெகதீஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக


கிருஷ்ணாமோகன்ரெட்டி, தேவக்குமார், பாலமுருகன் ஆகியோர் செயல்படுகின்றனர். வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங் கப்பட்டுள்ளன. தேர்தல் 14ம்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 வரை நடைபெறும். ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் வேட்பாளர் வாங்கியுள்ள ஓட்டுகள் விவரம் தெரிவிக்கப்படும். கிராம கமிட்டிக்கு 5 பேரும், பேரூராட்சி கமிட்டிக்கு 10 பேரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் நடக்கும் 5 நாட் களில் கிராமக் கமிட்டிக்கு 120 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகளிலும் உள்ளவர் கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஏற்பாடுகளை இளைஞர் காங்., மாநில பொதுச் செயாலாளர் மாத்தூர் ராம்மோகன், வட்டாரத் தலைவர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் சாமிநாதன், முன்னாள் தலைவர் ஆறுமுக கொன்னமுண்டார், மாவட்ட சேவாதள தலைவர் கருப்பையன், சந்தானகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தருமராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Top
* 3.வரும் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும் :அதிமுக கூட்டத்தில் ஆவேசம்


கும்பகோணம்:வரும் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும் என்று நடிகர் ஆனந்தராஜ் பேசினார்.நாச்சியார்கோவில் வடக்குவீதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பாரதிமோகன், இளமதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் பேசினர்.


நடிகர் ஆனந்தராஜ் பேசியதாவது:இல்லற வாழ்க்கையை துறந்து துறவறம் மேற்கொள்ளும் சாமியார்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.,தான் ஆட்சி அமைக்கும். டி.வி கொடுப்பதையும், ஒரு ரூபாய் அரிசியையும் சொல்லி தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு காண்கிறது.ஆனால் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கும், அனைத்து பொருட்களும் விஷம்போல் உயர்ந்து வருவதற்கும் தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இலவச கலர் டி.வியை கொடுத்துள்ளது. ஆனால் மாதம்


தோறும் கேபிள் டிவிக்கு ஒரு வீட்டிற்கு ரூ.100 வீதம் 6 ஆயிரம் கோடி ரூபாய் மாறன் குடும்பத்திற்கு செல்கிறது.தமிழர்களையும், தமிழ் மொழியையும் பற்றி கருணாநிதிக்கு உண்மையிலேயே கவலை இல்லை. அவருடைய கவலையெல்லாம் கனிமொழியை பற்றித்தான். அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வராமல் தடுத்தவர் கருணாநிதி தான். அவர் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்திருந்தால் இலங்கையில் ஒரு தமிழன் கூட இறந்திருக்க மாட்டான். அ.தி.மு.க.,வை அழித்துவிட வேண்டுமென கருணாநிதி திட்டம் போடுகிறார். அ.தி.மு.க.,வை யாராலும் அசைக்க முடியாது. வரும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும். மக்களுடன் முதலில் கூட்டணி அமைத்தவர் ஜெயலலிதா தான். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Top

பொது

* 1.மனிதநேய சிந்தனை மாணவர்களுக்கு தேவை: மாஜி துணைவேந்தர் பேச்சு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் குழும கல்வி நிறுவனங்களின் நிறுவன நாள் விழா நடந்தது.இணை வேந்தர் நாகராஜன் வரவேற்றார். துணை வேந்தர் ஜெயச்சந்திரன் அறிமுக உரையாற்றினார். கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள் தங்கவேல், நித்யானந்தம், சங்கர்ஜி, லட்சுமணன் ஆகியோர் ஆண்டறிக்கை படித்தனர்.பரிசுகளை வழங்கி திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜெயராமரெட்டி பேசியதாவது: நல்ல கல்வியாளர்கள், மாணவர்களால் இந்நிறுவனம் நிகர்நிலைப் பல்கலை.,யாக உயர்ந்துள்ளது. அனைத்து வசதிகளும் இங்கு ஒரே இடத்தில் கிடைப்பதால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது.


இந்தியா அனைத்து துறையிலும் அறிவுசார்ந்த நாடு. விவசாயம், தொழில் நுட்பம், உற்பத்திகள், சேவை போன்ற பலவற்றில் தன்னிறைவு பெற்று வருகிறது. இச்சமுதாயத்தை மேலும் சீரமைக்கும் பொறுப்பு மாணவர்களிடம்தான் உள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியாவில் கிராமங்கள், நகரங்களுக்கு இடையேயான வித்தியாசம் மிகச்சிறிய கோடுகள் போன்றதாகும். நகரில் கிடைக்கும் அனைத்து திறனமைப்புகள், தரம், தொழில் நுட்பங்கள் கிராமங்களிலும் கிடைக்கும். கல்வியறிவற்றவர்கள் இல்லாத நிலை ஏற்படும். விவசாயம், உற்பத்தி, தொழிற்சாலைகள், தொழில் நுட்பங்கள், சுகாதாரம் போன்றவைகளில் சீரான முன்னேற்றம் ஏற்படுவதால், நாம் உயர்ந்த வளர்ச்சியை பெற்று வருகிறோம்.


உலகில் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் இந்தியா இரண்டாவது இடத்திலும், உயர் தொழில் நுட்பத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ளோம். அறிவுசார் தொழில் நுட்பம், கல்வி, பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இணையாக உள்ளோம். உள்கட்டமைப்பு, மருத்துவம், வெளிநாடுகளுடனான தொடர்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவைகளிலும் நாம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ளோம். உயர்கல்வியில் குறிப்பாக தொழில் நுட்பக்கல்வியில் மாணவர்கள் மிகச்சிறந்து விளங்க வேண்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.சி.எஸ்., என்.ஐ.டி., போன்றவைகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் போட்டியிட வேண்டும். வரும் காலங்கள் போட்டி நிறைந்தது. அதில், தங்களை தக்கவைத்துக் கொள்ள ஒழுக்கம், சிறந்த கல்வி, தொடர் பயிற்சி, மனிதநேயமுள்ள சிந்தனை, திட்டமிட்ட உழைப்பு போன்ற அவசியம் தேவை. இதில், சிறந்தவர்கள் வளமான இந்தியாவை உருவாக்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார். பதிவாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Top
* 2.தஞ்சையில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாநாடு துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மூன்றாவது மாநில மாநாடு நேற்று துவங்கியது. மாநிலத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். தஞ்சை மா வட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணிய சர்மா தேசியக்கொடியேற்றினார். முன்னாள் மாநில செயலாளர் மாலி சம்மேளன கொடியேற்றினார். மாநில அமைப்பு செயலாளர் லட்சம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். வரவேற்புக்குழு செயலாளர் பிரின்ஸ் வரவேற்றார்.


ஏ.ஐ.டி.யு.சி., மூத்த தலைவர் ஏ.எம்.கோபு பேசியதாவது:தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் நடக்கும் போது நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். தற்போது பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இந்தளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு யார் காரணம் என சிந்திக்க வேண்டும். மக்களின் வரிப்பணம், மக்கள் சேமித்த நிதியாதாரங்களால் பி.எஸ்.என்.எல்., ஆஸ்தி உருவானது. இந்த ஆஸ்தியின் மூலம் பெரிய கட்டுமானங்கள் உருவானது. ஆனால், இன்று இதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிக்கும் மடங்களாக இது மாறிவிட்டது. இதனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நலிவடைந்துபோயுள்ளது.


நாங்கள் யாரையும் பொதுவாக குற்றம் சாட்டவில்லை. இந்நிறுவனம் துவங்கிய நோக்கம், லட்சியம் நிறைவேறாமல் மக்களும், தொழிலாளர்களும் இன்று பெரிதும் பாதிக்கப்படும் நிலை, ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு லட்சம் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்ற நிலையை நாம் எதிர்நோக்கி உள்ளோம். பார்லிமென்ட்டில் முன்பு இடதுசாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை மத்திய அரசுக்கு இருந்தது. அந்நிலை மாறி இடதுசாரிகளின் தேவை நமக்கு இல்லை என்ற மத்திய அரசு எண்ணுகிறது. தட்டிக்கேட்க ஆட்கள் இன்றி பி.எஸ்.என்.எல்., போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அரசால் பாதிப்புக்கு உள்ளாகிறது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பொருளாதார சீரழிவு, பெரும் சருக்கல் இந்தியாவில் இடதுசாரிகள், தேசபக்தி கொண்டவர்கள் பிடிவாதத்தால் ஏற்படவில்லை. நவீன இந்தியாவில் இடதுசாரிகள், தேசபக்தி கொண்டவர்கள், தொழிலாளர்கள் ஒன்று கூடி இருக்க வேண்டும். அந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மக்களும், தொழிலாளர்களும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.ஒன்பதாம் தேதி வரை நடக்கும் மாநாட்டில் இன்று (8ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர்கள் ஓ.பி.குப்தா, என்.டி.சஜ்வானி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
Top
* 3.நகராட்சி பள்ளியில் கல்விக்குழு கூட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வார்டு கல்விக்குழு கூட்டம் நடந்தது.நகராட்சித் தலைவரும் பள்ளி வார்டு கல்விக் குழுத் தலைவருமான தேன்மொழி தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை பௌலின், ஆசிரியர் பயிற்றுனர் வெங்கட்ராஜ் ஆகியோர் பள்ளி முன் னேற்றம், அனைவருக் கும் கல்வி இயக்க செயல் பாடு குறித்து விளக்கினர். குழு உறுப்பினர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Top
* 4.கணவரின் 2வது திருமண முயற்சியைதடுத்து நிறுத்தக்கோரி எஸ்.பி.,யிடம் மனு

தஞ்சாவூர்: கணவருக்கு 2வது திருமணம் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெண் குழந்தையுடன் வந்த பெண் தஞ்சை எஸ்.பி., செந்தில்வேலனிடம் மனு கொடுத்தார்.ஒரத்தநாடு வடக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் மங்கையர்க்கரசி (32). இவர் தஞ்சை எஸ்.பி., அலுவலகத்திற்கு தனது பெண் குழந்தை கிருஷ்ணவேணியுடன் வந்து, எஸ்.பி., செந்தில்வேலனை சந்தித்து மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கும் புதுக்கோட்டை அருகே முதலிப்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சீர்வரிசைகள் தரப்பட்டது.


எங்களுக்கு பிறந்த பெண் குழந்தை தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறது. தற்போது அவர் வெளி நாடு செல்ல வேண்டும் என்பதற்காக எனது தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி வற்புறுத்தி வந்தார். பணம் கேட்டு கொடுமை செய்ததால் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தேன். இந்நிலையில் எனது கணவர் அய்யப்பனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
Top
* 5.செ.புதூர் ஆயர்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம்: செ.புதூர் ஆயர்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள செ. புதூர் கடைவீதியில் ஆயர்துறை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கடந்த 25 ஆண்டுகளுக்கு பின் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் திருப்பணி வேலைகள் முடிந்து கடந்த இரண்டாம் தேதி விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் நடந்தது.


தொடர்ந்து 10 மணிக்கு கடங்கள் புறப்பட்டு விமான கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், அன்னை கருணை இல்லம் அம்பலவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருநீலக்குடி எஸ்.ஐ. மீனா மற்றும் போலீஸார், செ.புதூர் உயர்நிலைப்பள்ளி ஜெ.ஆர்.சி. மற்றும் சாரண மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவாச்சாரியார்கள் பிச்சுமணி, சுப்ரமணியன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆகம பாராயணம் நடந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை செ.புதூர் கிராமவாசிகள், மார்கழி மாத தனூர்பூஜை உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Top
* 6.பள்ளிவாசலில் மிலாது நபி விழா

கும்பகோணம்:தஞ்சை மாவட்ட சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பில் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில் மிலாதுநபி விழா நடந்தது.மாவட்ட பேரவை தலைவர் ஷம்சுத்தீன் பைஜி தலைமை வகித்தார். பள்ளிவாசல் இமாம் முகமதுபைஜி பாகவி கிராத் ஓதினார். சையது முஸ்தபாபைஜி உத்தம நபியின் உதயதினம் பற்றிபுகழ் கீதம் பாடினார்.பேரவை மாநிலத் துணைச் செயலாளர் அப்துல்காதிர் வரவேற்றார். பள்ளிவாசல் தலைவர் முகமதுஜியாவுதீன், செயலாளர் அல்லாபக்ஷ், மாவட்ட முஸ்லிம் கல்வி சங்கத் தலைவர் ஜிர்ஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவை மாநில பொது செயலாளர் மேலை நாசர், குடந்தை வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஜபர் சாதிக் நூரி ஹழரத், திருவிடைமருதூர் வட்டார தலைவர் முகமது முஸ்தபா தாவூதி ஹழரத், ஜாமியா இலாகியா அரபிக் கல்லூரி நிறுவனர் நூரானி ஷாஹ்பைஜி ஹழரத் ஆகியோர் பேசினர்.அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் ஜகாங்கீர், நகர பொருளாளர் அப்துல்சமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரவை மாவட்ட செயலாளர் நஜ்முதீன் நன்றி கூறினார்.
Top
* 7.4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வணிகவரி பணியாளர் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர்:வணிக வரித்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.தமிழக அரசின் வருவாயில் 70 சதவீதத்தை வசூ லித்து தரும் வணிகவரித்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.


வணிக வரித்துறைக்கு அரசு தேர்வாணையம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை பெற வணிகவரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட வணிகவரித்துறையில் கூடுலாக பதிவேடுகளிலும் பதிவுகள் மேற்கொள்வதை கைவிட வேண்டும்.2010ம் ஆண்டிற்கான உதவி வணிகவரி அலுவலர், வணிகவரி அலுவலர்,உதவி ஆணையர் ஆகிய பதவி உயர்வு பட்டியல்களை உரிய காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 25ம்தேதி மாவட்ட தலை நகரங்களில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஏப்ரல் 10ம்தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில முன்னாள் செயலாளர் துரைசிங், மாநில பொதுச் செயலாளர் அரங்கநாதன், பொருளாளர் ஜனார்த்தனன், துணைத் தலைவர்கள் வெற்றிராஜன், மணிபாரதி, லட்சுமணன், துரைராஜ், செயலாளர்கள் முருகன், மதியழகன், செல்வக்குமார், ஜெயராஜராஜஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட தலைவர் திருஞானம் நன்றி கூறினார்.
Top
* 8.தஞ்சபுரீஸ்வரர் கோயிலில்மகா சிவராத்திரி பெருவிழா

தஞ்சாவூர்:தஞ்சை வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி 1008 கலசாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது.தஞ்சை வெண்ணாற்றங்கரையில் குபேரன் வழிபட்ட தலமான ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சிவராத்திரி விழா வரும் 13ம்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் 11ம்தேதி காலை முதல் பூர்வாங்க பூஜைகள் நடக் கிறது. மறுநாள் மஹா யாகம் நடக்கிறது.13ம்தேதி காலை 8 மணி முதல் இரவு 7 வரை மஹா யாகம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனையும், பின்னர் கடம் புறப்பாடும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு முதல் கால மகா அபிஷேகம், தொடர்ந்து நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4 மணிக்கு முறையே 2, 3, 4ம்கால அபிஷேகங்கள் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் சிவாஜி, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே, பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Top
* 9.அரசுப் பணிகளில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். முதல் அலுவலக உதவியாளர் வரையிலான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் தீர்மானம்

தஞ்சாவூர்:அரசுப் பணிகளில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். முதல் அலுவலக உதவியாளர் வரையிலான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் கழக சி மற்றும் டி பிரிவு மாவட்டக் கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாவட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் தரும கருணாநிதி வரவேற்றார். துணைத் தலைவர்கள் சண்முகய்யா, பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் மோகன், அமைப்பு செயலாளர் அருள்சாமி, சத்திரம் நிர்வாகப் பணியாளர் சங்க செயலாளர் சிவகாசி, மாவட்டத் தலைவர்கள் சுப்பையா, காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் துன்பப்படும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.


அரசுப் பணிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.6வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனுக்கு நீட்டிப்பு வழங்காமல் அறிக்கையை பெற்று அரசு அலுவலர்களுக்கு விடுபட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்.தொழில் வரியை ரத்து செய்தும் அரசு அலுவலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையில் காலம் தாழ்த்தாமல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Top
* 10.தஞ்சை அரசு ஜூவல்ஸ் டிரெண்டியில் திறப்பு விழா: சலுகை மேலும் நீட்டிப்பு

தஞ்சாவூர்:தஞ்சை நகரில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் அரசு ஜூவல்ஸ் டிரெண்டியில் திறப்புவிழா சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு குழும நிறுவனத்தின் புதுவரவான அரசு ஜூவல்ஸ் டிரெண்டி ஹால்மார்க் கோல்ட் அண்டு வைர நகை மாளிகையில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திறப்புவிழா சலுகை வரும் 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


திறப்புவிழா சலுகையாக அனைத்து ஹால் மார்க் 916 நகைகளுக்கும் செய்கூலி முற்றிலுமாக இல்லை. சேதாரம் 12 சதவீதம் மட்டும் கணக்கிடப்படும். எக்சேஞ்ச் முறையில் பழைய தங்க நகைகளை கொடுத்து அன்றைய மார்க்கெட் விலையில் மதிப்பிடப்பட்டு புதிய நகைகளை மாற்றிக் கொள்ளலாம்.வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் சர்வீஸ் சார்ஜ் கிடையாது.அரசு ஜூவல்ஸ் டிரெண்டி ஹால்மார்க் கோல்ட் மற்றும் டைமண்ட் �ஷாரூமில் எங்குமே கண்டிராத ஜூவல் ஒன் கலெக்ஷன்ஸ், ரூபி ஜிர்கான், கல்கத்தா மற்றும் புதிய, குறைந்த எடையில் விதவிதமான நகைகள் வாடிக்கையாளருக்காக வரவ ழைக்கப்பட்டு உள்ளது.எனவே வாடிக்கையா ளர்களும், புதிதாக நகைகள் வாங்குவோரும் திறப்பு விழா சலுகைகளை பயன்படுத்தி, நகைகள் வாங்கி மன நிறைவுபெறுமாறு அரசு குழும சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன்கள் செந்தில்குமார், முருகன் ஆகியோர் அழைப்பு விடுத்து உள்ளனர்.
Top
* 11.திருக்காட்டுப்பள்ளியில் எஸ்எஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் திடீர் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் ஆய்வு செய்தார்.ஆய்வில் பள்ளி செயல் வழிக்கற்றலில் மாணவர்களின் படிநிலையையும், அடைவுத்திறன் போன்றவற்றையும் கேட்டறிந்தார்.கம்ப்யூட்டர் வழிக்கல்வியில் பயிற்சியை மேற்கண்ட ஆசிரியர்கள், செயலாராய்ச்சி மூலம் கற்பித்தல், நிகழ்வுகளில் உத்திகைகளை கையாளுமாறும் அறிவுரை வழங்கினார்.பயிற்சியின் போது பயிற்றுனர் ஆசிரியர் நெப்போலியன், செய்தி தொடர்பாளர் டேவிட் ஆகியோர் உடனிருந்தனர்.
தலைமை ஆசிரியர் முருகானந்தம் வரவேற்றார்.




Top
* 12.பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாம் சாந்தாங்காடு கிராமத்திலும், பாளையம் குடிசைப் பகுதியிலும் ஒரு வாரம் நடந்தது. முகாம் தொடக்க விழாவிற்கு முதல்வர் முத்துவேலு தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மற்றும் பொது இடங்களை சுத்தம் செய் தனர். குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அவசர கால ஊர்தி 108 பயன்பாடு பற்றியும், முதலுதவி, இயற்கை இடர் பாடு, மேலாண்மை விழிப்புணர்வு, மனநலம் மற்றும் உடல் நலம் விழிப்புணர்வு பற்றி கருத் தரங்கம் நடத்தப்பட்டது. திட்ட அலுவலர் முகமது அலி வரவேற்றார். மாணவர் ராகுல்காந்தி நன்றி கூறினார்.




Top
* 13.அதிராம்பட்டினம் கல்லூரி பட்டமளிப்பு விழா

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி செயலாளர் முகமதுஅஸ்லாம் தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ராமசாமி 445 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், நாகரீகம், கலாசாரம், பண்பாடு போன்றவை மேம்பட வேண்டும் என்றால் கல்வி அவசியம். பட்டமளிப்பு விழா மற்ற விழாவைப் போல் இல்லாமல் மனிதனை பொறுப்பு உள்ளவனாக மாற்றுகிற விழா. உயர்கல்விக்கு இன்றைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.விலங்கியல் துறை தலைவர் அமானுல்லா அமீது வரவேற்றார். கல்லூரி முதல்வர் முகமது அப்துல்காதர் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசித்தார். குமாரசாமி நன்றி கூறினார். பேராசிரியர்கள் பர்கத், கணபதி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.




Top
* 14.சத்துணவு ஊழியர்கள் சங்கக் கிளை மாநாடு

திருவையாறு:திருவையாறு அருகே நடுக்காவிரியில் சத்துணவு ஊழியர் சங்க வெள்ளிவிழா ஆண்டின் 10வது கிளை மாநாடு நடந்தது.ஜார்ஜ்ஸ்டீபன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் பழனிச்சாமி, அருள்அந்தோணி, பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா ரவிவர்மா வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார் வீரமணி வேலை அறிக்கை வாசித்தார்.


வரவு - செலவு அறிக் கையை இணைச் செயலாளர் தமிழரசன் வாசித்தார். மாநில செயலாளர் சக்தி, மாவட்ட தலைவர் மனோகரன் தணிக்கையாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா ளர் ஜேம்ஸ், சாலைப் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ரவிச்சந்திரன்.அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் புஷ்பராஜ், தமிழக கிராம நிர்வாக அலுவலர் கள் சங்க மாவட்ட மைப் பாளர் தாமரைச்செல்வன், அரசு ஊழியர் சங்க வட்ட இணைச் செயலாளர் லாரன்ஸ் ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ஜார்ஜ் ஸ்டீபன், செயலாளராக வீரமணி, பொரு ளாளராக லலிதா, பன்னீர் செல்வம், அருள்அந்தோணிதாஸ், சாவித்திரி, ஆகியோர் இணைச் செயலாளராகவும், லீமாரோஸ், ராதாகிருஷ் ணன், தமிழரசன் ஆகியோர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Top
* 15.தடைபட்டுள்ள கோடீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டத்தை நடத்த கோரிக்கை

கும்பகோணம்:கும்பகோணம் கொட் டையூர் கோடீஸ்வர சுவாமி கோயிலில் தடைபட்டுள்ள திருத்தேரோட்டத்தை பங்குனி உத்திரப் பெருவிழாவை ஒட்டி இந்த ஆண்டு நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து ஜோதிமலை இறைபணி திருக் கூட்ட செயலாளர் தமிழரசன் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொட்டையூர் கோடீஸ் வர சுவாமி கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக பங்குனி உத்திர பிரமோற்சவம் 10 நாட்கள் நடந்து உள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக இவ்விழா ஏகதின மகோற்சவமாக தீர்த்தவாரி மட்டுமே நடந்து வருகிறது. இதனால் திருத்தேரோட்டம் நடைபெறாமல் தேர் நின்ற நிலையிலேயே இருந்து வருகிறது.தற்போது நித்ய பூஜைகள் கூட சரிவர நடைபெறவில்லை. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் திருவிழா நின்று போனது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விழா நடத்த சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் பங்குனி உத்திர விழாவை வழக்கம் போல 10 நாட்கள் நடத்த வேண்டும். தேரோட்டத்தை அவசியம் நடத்த வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Top
* 16.தியாகம் டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் வெள்ளி விழா

திருவையாறு:திருவையாறு தியாகம் டெக்ஸ்டைல்ஸ் �ஷாரூம் வெள்ளிவிழா நடந்தது.பூண்டி அய்யாறு வாண்டையார் தலைமை வகித்தார். திருவையாறு ஆதீனக் கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் குத்துவிளக்கேற்றினார். மத்திய அமைச்சர் பழனிமாக்கம், அமைச் சர் உபயதுல்லா ஆகியோர் பரிசு வழங்கினர். திரு�யாறு தமிழிசை மன்ற தலைவர் ஆறுமுகம், தமிழிசை மன்ற அறங்காவலர்கள் பஞ்சநதம், கோவி.கணேசமூர்த்தி.மாத்தூர் மேற்கு ராஜசேகர், வணிகர் நலக்கழகத் தலைவர் சத்தியமூர்த்தி. வட்டார காங். தலைவர் ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் கே.கே.எஸ். வாடகை பாத்திர நிலையம் கிருஷ் ணசாமி, தஞ்சாவூர் நகர காங்., கமிட்டி கலிய பெருமாள் ஆகியோர் பேசினர்.திருவேங்கடம் நன்றி கூறினார்.




Top
* 17.ஆயுள் காப்பீடு திட்ட கூட்டம்

கபிஸ்தலம்: பாபநா சத்தில் அஞ்சல் துறை சார்பில், கிராமியஅஞ்சல் ஆயுள் காப்பீடுத் திட்ட கூட்டம் நடந்தது.அஞ்சலக உதவி கண் காணிப்பாளர் எழில் தலைமை வகித்தார். அஞ்சலக ஆய்வாளர் பிரேம்ஆனந்த வரவேற் றார். முதுநிலை கண்கா ணிப்பாளர் பரோஸ் மொகைதின் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி பேசினார். உதவி கண்காணிப்பா ளர்கள் கிருஷ்ணமுர்த்தி, அருள்தாஸ், அஞ்சலக ஆய்வாளர் கார்த்திகேயன் நேர்முக உதவியாளர் சவுரிராஜன், காமராஜ் பேசினர். கிருஷ்ண முர்த்தி நன்றி கூறினார்.




Top
* 18.தஞ்சை யாகப்பா பள்ளியில் பெற்றோர் தினவிழா

தஞ்சாவூர்:தஞ்சை யாகப்பா பள்ளியில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் தின விழா "எக்லா 2010' கொண்டாடப்பட்டது.டாக்டர் அருளய்யா சாமுவேல் தலைமை வகித்தார். மாணவி பிரித்தாதேவி வரவேற்றார். மாணவி லிண்டா அறிமுக உரை யாற்றினார். கல்வி மற்றும் இதர போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சாமுவேல் மற்றும் சுஜாதா சாமுவேல் பரிசு வழங்கினர்.டாட்லர்ஸ் யாகப்பா பள்ளி மாணவர் சக்திவேல் திருக்குறளும், ட்ரிபீனாஆலிவ் என்ற மாணவி உடல் எலும்புகளின் பெயர்களையும், சென்னிலவன் என்ற மாணவர் வேதியியல் குறியீடு விளக்கத்தையும், செர்வீன் ஸ்பியர்ஸ் என்ற மாணவர் பொது அறிவுத்திறன் பற்றியும் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.ரோஷன் நன்றி கூறினார்.குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி டிரஸ்டி மேரி ஞானம் தலைமையில்,தாளாளர் எட்வர்ட் ஆரோக்கியராஜ், மேற்பார்வையில் முதல்வர் கீத்திகா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
Top
* 19.சி.யூ.பி.,யில் முப்பெரும் விழா :பட்டுக்கோட்டை: பட்டுக்கோ

வீஜிநவிலிஹீஙஜிஷீபுடூசு ஹீஙடுசுட்ஷீவூ சஙtஆஙஸ் கூஜிஷீபு ப்லூசி ஷீடுவித்சஙம்ட்டை சிட்டி யூனி யன் வங்கியில் முப்பெ ரும் விழாக்கள் நடந்தது.பட்டுக்கோட்டை சிட்டி யூனியன் வங்கி கிளையில் 36ம் ஆண்டு தொடக்க விழா, வாடிக் கையாளர் சந்திப்பு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா ஆகியவை நடந்தன. செயல் இயக்குனர் காமகோடி, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு பொது மேலா ளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சாய்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர். உதவி மேலாளர் சுமேந்திரன் வரவேற்றார். வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிந்து, சிறப்பான சேவை செய்வோம் என்று உறுதி கூறினர். சுயஉதவிக்குழுக்களுக்கு 5 லட்சம் கடன் வழங்கினார். கிளை மேலாளர் வெங்கட்ரமணி, வங்கி செயல்பாடுகள், சேவை பற்றி பேசினார். நிகழ்ச்சியை வங்கி உதவி மேலாளர் மார்ட் டின்அமிர்தராஜ் தொகுத்து வழங்கினார். காமராஜ் நன்றி கூறினார் .
Top
* 20.என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

கும்பகோணம்:கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் திருநாகேஸ் வரம் நாகநாத சுவாமி கோயில், ஒப்பிலியப்பன் வேங்கடாஜலபதி பெருமாள் கோயில், தேப்பெருமாநல்லூர், அம்மாசத்திரம் ஆகிய இடங்களில் உழவாரப்பணி மேற் கொண்டனர்.தொடர்ந்து 7 நாட்கள் நடந்த முகாமில் சட்ட விழிப்புணர்வு, பெண்களுக்கான சிறப்பு சட்ட பிரிவுகள், யோகா பயிற்சிகள், தொழிற் பயிற்சிகள், சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றங்கள், ரத்ததான நிகழ்ச்சி நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் சந்திரா தலைமை வகித்தார்.

திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி கல்விக்குழும தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.பேராசிரியர்கள் மேரிகிரோஸ், ராஜேஸ்வரி, சுமதி ஆகியோரது வழிகாட்டுதலுடன் சுமார் 150 மாணவிகள் என்.எஸ்.எஸ் முகாம் பணிகள் மேற்கொண்டனர். திட்ட ஒருங்கிணைப் பாளர் விஜயலட்சுமி, கால்பந்தாட்டக் கழக துணைத் தலைவர் மார்ட் டின் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Top
* 21.நகராட்சி பள்ளியில் கல்விக்குழு கூட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வார்டு கல்விக்குழு கூட்டம் நடந்தது.நகராட்சித் தலைவரும் பள்ளி வார்டு கல்விக் குழுத் தலைவருமான தேன்மொழி தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை பௌலின், ஆசிரியர் பயிற்றுனர் வெங்கட்ராஜ் ஆகியோர் பள்ளி முன் னேற்றம், அனைவருக் கும் கல்வி இயக்க செயல் பாடு குறித்து விளக்கினர். குழு உறுப்பினர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Top

சம்பவம்

* 1.தஞ்சையில் 100 நாள் வேலைத்திட்ட ஊதிய குளறுபடியை நீக்கக்கோரி தர்ணா

தஞ்சாவூர்:100 நாள் வேலைத் திட்டதின் ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை போக்க கோரி இளம் கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம் சார்பில் தஞ்சையில் தர்ணா போராட்டம் நடந்தது.தேசிய தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். உறுப்பினர் விக்டோரியாமேரி வரவேற்றார். பொருளாளர் தமிழ்கவி, உறுப்பினர் தனஞ்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறைந்தபட்ச ஊதியம் 80ஐ நடைமுறைப் படுத்த வேண்டும். 8 மணி நேர வேலையை அமல் படுத்த வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்தல், உள்நாட்டு தொழில்களை மேன்மை படுத்துதல். 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடந்தது. கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. கட்சிமாவட்ட செயலாளர் மனோகரன், இளம் கிறிஸ்துவர் இயக்க முன்னாள் பொருளாளர் குமார், முன்னாள் செயலாளர் சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Top
* 2.மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

தஞ்சாவூர்:தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மதுக்கடைகளையும் மூடக்கோரி தஞ்சையில் மதுக்கடையை முற்றுகையிட முயற்சி செய்த மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் இயங்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும். காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் இன்னும் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாமல் குஜராத் மாநில அரசு 10 ஆண்டுகளாக முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. அதைப்போல தமிழகத் திலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கலந்தர் தலைமையில் 30 பேர் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Top
* 3.பஸ் படியில் பயணம் செய்த வாலிபர் பலி: நால்வர் காயம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தனியார் பஸ் விபத்தில் படியில் பயணம் செய்த வாலிபர் இறந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழ்மாறன் (19). கூலி தொழிலாளி. இவர் காலை ஒன்பது மணிக்கு கும்பகோணம் வந்த எஸ்.எம்.டி., என்ற தனியார் பஸ்சில் ஏறி, கூட்டம் அதிகம் இருந்ததால் படியில் நின்றுகொண்டு வந்தார். மருதாநல்லூர் அருகே பஸ் வரும்போது எதிரில் வந்த வாகனத்துக்கு வழிவிட்ட பஸ் டிரைவர் வலதுபுறம் நின்ற ஏர் உழும் இயந்திரத்தில் பஸ்சை மோதிவிட்டார்.


இதில், படியில் பயணம் செய்த தமிழ்மாறன், புளியக்குடி கீழத்தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ராமசாமி (20), மேலவிசலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மகன் மோகன் (24), திப்பிராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த இந்திரஜித் மகன் தீனதயாளன் (18), மேலவிசலூர் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (49) ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் ஐந்து பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தமிழ்மாறன் இறந்தார். மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுபற்றி, நாச்சியார்கோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Top
* 4.குடிபோதையில் கூச்சல் சஸ்பெண்ட் ஏட்டு கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் குடிபோதையில் கூச்சலிட்ட, ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிவர் ஜான்கென்னடி (45). இவர் வல்லம் டி.எஸ்.பி., வசுந்தரா, போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தபோது, குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்நிலையில், நேற்றுமுன்தினம் குடிபோதையில் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகம் வந்த ஏட்டு ஜான்கென்னடி, தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டு சத்தம்போட்டார். எஸ்.பி., செந்தில் வேலன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு ஜான்கென்னடியை கைது செய்தார். இச்சம்பவம் தஞ்சை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Top
* 5.நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் தடுமாறி விழுந்தவர் பலி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே டூவீலரில் ஒருவர் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.பட்டுக்கோட்டை அடுத்த மன்னாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (45). இவர் சம்பவத்தன்று அவரது டி.வி.எஸ்., விக்டர் டூவீலரில் பட்டுக்கோடையில் இருந்து மன்னாங்காடு சென்றார்.அப்போது துவரங்குறிச்சி மெயின் ரோடு அருகே எதிர்பாராத விதமாக நாய் ஒன்று கருணாநிதியின் டூவீலர் முன் பாய்ந்தது. இதில், கருணாநிதி நிலைதடுமாறி கிழே விழுந்தார். படுகாயமடைந்த கருணாநிதி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பட்டுக்கோட்டை தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Top
* 6.பெண்கள் தினத்தில் தஞ்சையில் தர்ணா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் சார்பில் பெண்கள் தினத்தை முன்னிட்டு மாலை நேர தர்ணா நடந்தது.தேசிய தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். தேசிய பொருளாளர் தமிழ்கவி, தேசியக்குழு உறுப்பினர் தனஞ்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியக்குழு உறுப்பினர் விக்டோரியா மேரி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மனோகரன், முன்னாள் தேசிய பொருளாளர் குமார், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.


குறைந்த பட்ச ஊதியம் 80 ரூபாயாக அமல்படுத்த வேண்டும். எட்டு மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.டி., என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உள்நாட்டு தொழில்களை மேன்மைப்படுத்த வேண்டும். விளை நிலங்களை மனைப்பட்டா போடுவதை தடை செய்ய வேண்டும். முந்திரி தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை தடுத்திட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும். வேலையில்லா இளைஞர்களின் ஊக்கத்தொகையை முறையாக வழங்க வேண்டும். அதனை உயர்த்திட வழிவகுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக மாற்ற வேண்டும், என வலியுறுத்தினர். தேசியக்குழு உறுப்பினர் கஜேந்திரன் நன்றி கூறினார்.
Top
* 7.மகன், தங்கையை அரிவாளால் வெட்டியவர் குடந்தையில் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிபோதையில் மகனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே மாங்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் செல்வம் (35). இவர் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனால், இவரது மனைவி தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த செல்வம் தனது மனைவியை அடிக்க சென்றபோது செல்வத்தின் தங்கை உஷாவும், மகன் சசிகுமாரும் தடுத்தனர். இதனால், செல்வம் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சசிகுமாரையும், தங்கை உஷாவையும் வெட்டினார். இதில், சசிகுமார் தலை, உஷா வலது முன்கையிலும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சசிகுமாரும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உஷாவும் சேர்க்கப்பட்டனர். திருநீலக்குடி போலீஸார் விசாரித்து செல்வத்தை கைது செய்தனர்.
Top
* 8.8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர்:தஞ்சை சாலையில் நகரமுடியா மல் கிடந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.காடுகளில் கிடக்கும் மலைப் பாம்பு காடுகள் இல்லாத தஞ்சை நகர சாலையில் "உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்ற நிலையில் நகர முடியாமல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் வண்டிகாரத் தெருவில் சாலையின் குறுக்கே மலைப்பாம்பு கிடப்பதாக நேற்று காலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நிலைய தீயணைப்பு வீரர் இளஞ்செழியன் தலைமையில் தீயணைப்புவீரர்கள் சென்றனர். அங்கு 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையின் குறுக்கே நகர்ந்து செல்ல முடியாமல் கிடப்பதைக் கண்டனர். மக்கள் பாம்பை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண் டிருந்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை பிடித்து சாக்குப் பையில் போட்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறையினர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று பாம்பை எடுத்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:இந்தப் பகுதியில் காடுகள் இல்லை. அதனால் மலைப்பாம்பு தஞ்சைக்கு வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து பெரிய மரங்களை வெட்டி எடுத்து வரும் போது, மரப்பட்டைகளுக்கு இடையில் இதுபோன்ற பாம்புகள் இருக்கும். பாம்பு கிடந்த பகுதியில் அதிக அளவில் மரப்பட்டறைகள் உள்ளன. மரங்களை லாரிகளில் எடுத்து வரும் போது அதில் இருக்கும் பாம்புகள் கீழே விழுந்து விடுவ துண்டு. விழுந்த வேகத்தில் சில நேரங்களில் மறைவான இடத்திற்கு பாம்பு சென்றுவிடும். அதிக அளவில் உணவு உட்கொண்டிருந்தால் மறைவான இடத்திற்கு செல்ல முடியாமல் இதுபோன்று சாலைகளில் கிடக்கும். இவ்வாறு மீட்கப்படும் பாம்புகள் அருகில் உள்ள காடுகளில் பாதுகாப்பாக விடப்படும். இவ்வாறு வனத்துறையினர்கூறினர்.


டி.வி வழங்கல்:திருவையாறு:திருவையாறு அருகே கண்டியூரில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் அரசு இலவச டிவிக்கள் வழங்கினார்.திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் உலகநாயகி, ஒன்றியக்குழு உறுப்பினர் விசுவஜித்காடேராவ், திருவையாறு பேரூராட்சி துணைத் தலைவர் சாமிநாதன், கைலாசநாதர் கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாரூக், தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சித் தலைவர் அயூப்கான் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மருதபிள்ளை நன்றி கூறினார்.மனுநீதி நாள் முகாம்பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி தெற்கு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 10ம்தேதி நடக்கிறது. ஆர்.டி.ஓ. முகாமில் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிகிறார்.
Top
* 9.பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

திருவையாறு:திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப் பள்ளியில் 17வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.பள்ளித் தாளாளர் கண்ணகி தலைமை வகித் தார். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். சௌமியாஸ்ரீராமசேதுபதி முன்னிலை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அரவிந்தன் பரிசு வழங் கினார். விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். விழாவில் சிறந்த பெற்றோருக்கான விருதுகள் வழங் கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆசிரியைகள் வசந்தலட்சுமி, துர்காதேவி, தமிழ்ச்செல்வி மற்றும் சங்கீதா ஆகியோர் தொகுப் புரையாற்றினர். ஆசிரியை சுஜிதா நன்றி கூறினார்.

1 comment: