* 1.கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
வேலூர் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில், கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.மாதந்தோறும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியன்று சிவாலயங்களில் உள்ள பைரவரை வணங்கினால் சத்ருபயம் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பால், தயிர், சந்தனம், மஞ்சள், சந்தனம் உட்பட பல பொருட்களில் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Top
* 2.கிராம நாட்டாண்மை தேர்தல் விவகாரம் கோவில் விழாவில் மோதல் அபாயம்
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி நாட்டாண்மை தேர்தலில் மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். வேலூர் அடுத்த காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பழைய காட்பாடி கிராமத்தில் ஊர் நாட்டாண்மையாக இருந்த எத்திராஜ் நாயக்கர் கடந்தாண்டு இறந்து விட்டார். "பொது மக்களைக் கொண்டு தேர்தல் நடத்தி, நாட்டாண்மையை தேர்வு செய்யும்படி' கிராம மக்கள் காட்பாடி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி 7ம் தேதி காலை 11 மணிக்கு அங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தேர்தல் நடந்தது. அப்போது அங்கு வந்த கோவில் தர்மகர்த்தா கணேசன், அவரது ஆதரவாளர்களான டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் வெங்கடேசன், ஆட்டோ மனோகரன் ஆகியோருடன் சேர்ந்து பதவியை பெற முயன்றார். அதை வார்டு கவுன்சிலர் மோகன் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. காட்பாடி போலீஸார் விரைந்து சென்று மோதலை தடுத்தனர்.
தேர்தலும் நிறுத்தப்பட்டது. "பழைய காட்பாடியில் முத்திரையர், நாயுடு, வன்னியர், முதலியார், தாழ்த்தப்பட்டவர், முஸ்லிம், நாடார் என 25 சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 குடும்பங்கள் வசிக்கின்றனர். பல முறை முத்திரையர் சமுதாயத்தினர் நாட்டாண்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகவும், இம்முறை தேர்தல் நடத்தி கிராம நாட்டாண்மையை தேர்வு செய்ய வேண்டும்' எனவும் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். சில நாட்களுக்கு முன் கோவில் தர்மகர்த்தா கணேசன் தலைமையில் 32 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து வாங்கி சீனிவாசன் என்பவரை நாட்டாண்மையாகவும், வேலு என்பவரை துணை நாட்டாண்மையாகவும், முருகன் என்பவரை துணை தர்மகர்த்தாவாகவும், கங்காதரனை கிராம பெருதனமாகவும், குமார் என்பவரை துணை பெருந்தனமாகவும் த்தர்வு செய்து அறிவித்தனர். அதற்கு கவுன்சிலர் மோகன் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கவே, "அவரை கிரமத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதாக' அறிவித்து விட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்னைக்குரிய கணேசன் முத்தரையர், மோகன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பிரச்னை சூடு பிடித்துள்ளது. இது குறித்து மோகன் கூறியதாவது:
ஆண்டுக்கு ஒரு முறை இங்குள்ள கோட்டையம்மன், ரேணுகாம்பாள் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து பல ஆண்டுகளாக இந்த திரு விழாவை நடந்தி வருகிறோம்.
கிராம நாட்டாண்மை தேர்தல் தொடர்பாக மோதல் நடந்ததால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த வேண்டிய திருவிழா நடத்தவில்லை. வரும் ஏப்ரல் 28ல் திருவிழா நடந்த கணேசன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹிந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் திருவிழாவை அந்த துறையினர் தான் நடத்த வேண்டும். கணேசன் ஆதரவாளர்கள் நடத்துவது தவறு. அவர்கள் திருவிழா நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளது. கணேசன் ஆதரவாளர்கள் அங்குள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்கமுயன்றபோது, நான் தடுத்ததால் என்னை பதவிக்கு வர விடாமல் தடுக்கின்றனர். இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு கோவில் திருவிழாவை ஹிந்து சமய அற நிலையத்துறை மூலம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தற்போது கோட்டையம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ள நிலையில் இரு சமுதாயத்தினருக்கு இடையில் மோதல் அபாயம் உருவாகியுள்ளதால், கிராம மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.
Top
பொது
* 1.குடியாத்தம் அதிமுக சார்பில் மாணவர்களுக்கு நோட்டு
குடியாத்தம்: குடியாத்தம் நகர அதிமுக சார்பில் தாழையாத்தம் சூரியோதயா நிதியுதவி துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
நகர செயலாளர் என்.பழனி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் பிலிப் பக்த பிரசன்னா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வீரமணி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். இதில் நகரமன்ற தலைவர் பாஸ்கர், நகராட்சி வக்கீல் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் தனஞ்செயன், குடியாத்தம் தொகுதி செயலாளர் பிரபாகரன், பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டில்லிபாபு, கவுன்சிலர்கள் தேவராஜி, கஸ்பா மூர்த்தி, காஞ்சனமாலா, ரவி, சைதைபாபு, அமுதா , சத்தியமூர்த்தி, பார்த்திபன் மற்றும் இமயவரம்பன், ரவிச்சந்திரன், கான்டிராக்டர் சிவா, மாணவரணி பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 2.பள்ளி ஆண்டு விழா
ஆரணி : ஆரணி பெஸ்ட் மெட் ரிக்., பள்ளியில் நடந்த ஆண்டு நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் இப்ராகிம் தலைமை வகித்தார்.செயலாளர் லிய �ஸ் அகமத் முன்னிலை வகித்தார். முதல்வர் சார்ஜாபர்வீன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ,மாணவியரிடையே கட்டுரை, ஓவியம், நடன போட்டி உட்பட பல போட்டிகள் நடத்தப் பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு சினிமா நடிகர் அஜய்ரத்தினம் பரிசு வழங்கினார். லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் சேகர், ஏழுமலை, மற்றும் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Top
* 3.ஐசக் பி.எட். கல்லூரி மாணவர்கள் பெருமூச்சியில் பொதுநல முகாம்
அரக்கோணம்: அரக்கோணம் ஐசக் பி.எட்., கல்வியியல் கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பு பொதுநல முகாம் பெருமூச்சியில் நடந்தது.அரக்கோணம் ஐசக் கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவர்களின் ஒருங்கிணைப்பு பொதுநல 5 நாள் முகாம் பெருமூச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
நான்காம் நாள் நிகழ்ச்சியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.பஞ்., தலைவர் ஜோதிகவுதம் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் மணிமேகலா வரவேற்றார். க ஐசக் கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஐசக் ஜெபக்குமார் பள்ளி மாணவர்களுக்கு பேனா மற்றும் ஏழைகளுக்கு இலவச சேலைகளை வழங்கி பேசினார். உடற்கல்வி இயக்குனர் சுந்தர், வி.சி.க்கள் கருத்தியல் மாநில பரப்பு செயலாளர் கவுதம், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், பாண்டுரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு பணிகளை கல்லூரி மாணவர்கள் செய்தனர்.
Top
* 4.வாணியம்பாடி ஜெ. பேரவை 1,500 பேருக்கு அன்னதானம்
வாணியம்பாடி, ;வாணியம்பாடியில் ஜெ., பிறந்த நாளையொட்டி நடந்த விழாவில் இலவச, வேட்டி சேலைகள், அன்னதானம், இலவச அரிசி ஆகியவை வழங்கப்பட்டது.
வாணியம்பாடி நகர ஜெ., பேரவை சார்பில் ஜெ., பிறந்த நாளையொட்டி பெரியப்பேட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அரிசி, ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலாளர் பழனி சாமி தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் வேலு, ரவி, கணேசன், சின்னதம்பி, சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை செயலாளர் ரவி வரவேற்றார். இதில் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வீரமணி, பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி, இளைஞர் பாசறை செயலாளர் குமார், மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், டில்லி பாபு, எழிலரசு ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினர். அன்னதானத்தை வீரமணி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Top
* 5.மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி முகாம்
குடியாத்தம் : குடியாத்தம் அடுத்த மேலாலத்துர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கரும்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கான மக்காச்சோளம் சாகுபடி குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் விரிஞ்சிபுரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஏரிநீர் பாசன சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுரேஷ் மக்காச்சோள பயிர்களின் நன்மைகள், நடவு முறைகள் மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் சத்யா மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடுதல், சந்தைப்படுத்துதல், சொட்டு நீர்பாசனம் அமைத்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார்.உதவி பேராசிரியர் சுதாகர் இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற மக்காச்சோள பயிர் ரகங்கள் மற்றும் விதை உற்பத்தி குறித்தும், உதவி பேராசிரியை ஷீபா ஜாஸ்மீன் மக்காச்சோளத்தில் பூச்சி கட்டுப்பாடு முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர். முகாமில் இறைவன்காடு, விரிஞ்சிபுரம் மற்றும் செதுவாலை பகுதியை சேர்ந்த 50க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொண்டனர். நீர்வள, நிலவளத்திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளர் ரேவதி நன்றி கூறினார்.
Top
* 6.கெங்கநல்லூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா
அணைக்கட்டு : கெங்கநல்லூர் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடந் தது.அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் கிராமத்தில் நடந்த காளைவிடும் திருவிழாவில் முதல் பரிசாக ஒன் றேகால் சவரன் நகை, இரண்டவாது பரிசாக ஒரு சவரன் நகை, மூன்றாவது பரிசாக முக்கால் சவரன் நகை என 45 பரிசுகள் வைத்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட காளைகளை பிடித்து வந்து விட்டனர். இதில் அதிக வேகம் சென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.விழா பஞ்., தலைவர் உமா, கவுன்சிலர் மகாலிங்கம், துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமையிலும், ஊர் பிரமுகர்கள் சுப்பிரமணி, ராஜாராம், அம்பிகாபதி, மணி, ஏழுமலை, வாசுதேவன், சக்கரபாணி, துரை முன்னிலையில்நடந்தது.ஏற்பாடுகளை நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.ராமாபுரம்:சத்தியமங்கலம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடந்தது.முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், 2வது பரிசாக 12 ஆயிரம் ரூபாய், 3வது பரிசாக 9 ஆயிரம் ரூபாய் என 46 பரிசுகள் வைத்திருந்தனர்.மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து 100க்கும் அதிகமான மாடுகள் கலந்து கொண்டன. இதில் அதிக வேகமாக ஓடிய மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Top
* 7.காஞ்சி பகுதியில் 11ம் தேதி மின்தடை
வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி துணை மின்நிலையத்தில் வரும் 11ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் காஞ்சி, புதுப்பாளையம், நம்மியந்தல், பெரியகுளம், கடலாடி, காரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று செங்கம் செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Top
* 8.நாளை வேலைநிறுத்தம் வளர்ச்சித்துறை சங்கம் முடிவு
ஆரணி : துணை பிடிஓ., பணி மாறுதல் செய்யப்பட்டதை ஆட்சேபித்து வேலை நிறு த்தம் செய்ய ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்கள் சங் கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட் டம் ஆரணியில் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். மேற்கு ஆரணி வட்டார செயலாளர் மனோகரன் வரவேற்றார்.கீழ்பென்னாத்தூர் துணை பிடிஓ., அண்ணாமலை பணி மாறுதலை ரத்து செய்ய கோரி, நாளை (9ம் தேதி) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாநில பொது செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் பாரி, மாவட்ட பொருளாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 9.திமுக முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
குடியாத்தம்: குடியாத்தம் நகரம் 28வது வார்டு திமுக சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா, மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், அன்னதானம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நெல்லூர்பேட்டை தேரடி அருகில் நடந்தது.கருப்புலீஸ்வரர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வார்டு செயலாளர் கோட்டீஸ்வரன் வரவேற்றார். அறங்காவலர் குழு தலைவர் கார்த்திகேயன், உறுப்பினர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர பொறுப்பாளர் எஸ். தட்சணாமூர்த்தி மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்களை வழங்கினார். குடியாத்தம் ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி அன்னதானம் வழங்கினார். நகர செயலாளர் விவேகானந்தன் கொடியேற்றி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ தனபால் வாழ்த்தி பேசினார். விழாவில் மாவட்ட குழு துணைத்தலைவர் சீவூர் துரைசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகரமன்ற துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், கவுன்சிலர் ஜெயகுமார், தொண்டரணி பாபுபிரகாசம், மாணவரணி மனோஜ், காளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
பிரச்னைகள்
* 1.ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள் சோளிங்கரில் போக்குவரத்து நெருக்கடி
சோளிங்கர்: சோளிங்கரில் தனியார் பஸ் கம்பெனி அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தும் பஸ்சை வேறு இடத்தில் நிறுத்தும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சோளிங்கர் சுப்பாராவ் தெருவில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது. இந்த பஸ்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மாநிலங்களில் ஓடுகிறது. இந்த கம்பெனி முன்பு சாலையில் பஸ்களை நிறுத்தி விடுகின்றனர். இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். தனியார் கம்பெனி உள்ளே பஸ்கள் நிறுத்தும் வசதி இருந்தும் சாலையில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.இது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி தனியார் பஸ்கள் சாலையில் நிறுத்தப்படுவதை தவிர்த்து பஸ் கம்பெனிக்குள் நிறுத்தும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
Top
* 2.பொதுமக்கள் கீழே விழுந்து படுகாயமடையவா தார்சாலை?
சோளிங்கர் : சோளிங்கர் வெங்கட்ராயபிள்ளை தெருவில் போடப்பட்ட தார்சாலையை சமன் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சோளிங்கரில் வெங்கட்ராயபிள்ளை தெரு அமைந்துள்ளது. இச்சாலை வழியாக சித்தூர், பெங்களுர், திருத்தணி, திருவள்ளுர், சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் லாரி, வேன், கனரக வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டது. தார் சாலை உயரமாகவும் அதன் அருகே உள்ள இடம் பள்ளமாகவும் அருகில் கால்வாயும் உள்ளது. மேலும் இந்த சாலை குறுகலாகவும் உள்ளது.இதனால் இந்த சாலையில் செல்வோர் பஸ் மற்றும் கனரக வானங்கள் வரும் போது சாலை ஒர பள்ளங்களால் தடுக்கி கால்வாயில் விழுந்து ரத்தகாயங்களுடன் எழுந்து செல்கின்றனர். ஆகவே குறுகலான சாலை ஓரம் உள்ள பள்ளங்களை ரோடு உயரத்திற்கு சமன் செய்து அதன் அருகே உள்ள கால்வாய்யை மூட வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பார்களா?
Top
சம்பவம்
* 1.அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்ட மூதாட்டியின் பிணம் தோண்டி எடுப்பு
அணைக்கட்டு: ஊசூர் அருகே அடையாளம் தெரியவில்லை என புதைக்கப்பட்ட மூதாட்டியின் பிணத்தை தோண்டியெடுத்து அடையாளம் கண்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் தாலுகா ஊசூர் அடுத்த ராஜாபாளையத்தை சேர்ந்த வினாயகம் மனைவி வள்ளியம்மாள்(75). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இவரது மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். அதே நேரத்தில் அரியூர் போலீசிலும் வள்ளியம்மாள் காணாமல் போனது குறித்து புகார் அளித்திருந்தனர்.இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஊசூர் அருகே பூதூர் பெரிய ஏரி ஒட்டிய நிலத்தில் இருந்த சோளக்கொல்லையில் 75 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி இறந்து கிடந்ததாகவும், இதைப்பார்த்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அனாதை பிணம் என எடுத்து ஏரியில் பள்ளம்
தோண்டி அதில் புதைத்து விட்டனர். இந்நிலையில் வள்ளியம்மாள் உறவினர்கள் பூதூர் பகுதியில் தேடி வந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடையாளம் தெரியாததால் மூதாட்டியை அனாதை பிணம் என புதைத்திருந்த தகவலை தெரிவித்தனர்.இதனையடுத்து வள்ளியம்மாள் உறவினர்கள் போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் அனாதை பிணம் என புதைத்தது வள்ளியம்மாளாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.இதன் பேரில் போலீசாரும், வருவாய் துறையினரும் புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று பகலில் போலீசாரும், வருவாய் துறையினரும் மருத்துவ குழுவினருடன் சம்மந்தப்பட்ட இடம் வந்தனர். பின்னர் அடையாளம் தெரியாத பிணம் என புதைத்தவர்களை அழைத்து புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க சொன்னார்கள். புதைத்தவர்களும் புதைத்த இடத்தை அடையாளம் தெரிவித்தனர்.
வேலூர் தாசில்தார் அருண், துணை தாசில்தார் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் கிரிஜா, விஏஓ., சச்சிதானந்தம், பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமுலு, பஞ்., தலைவர் துரைசாமி, உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்தனர். மூதாட்டி மாட்டியிருந்த மூக்குத்தி மற்றும் உடைகளை வைத்து வள்ளியம்மாள்தான் என உறவினர்கள் அடையாளம் கூறினர். இதனையடுத்து தடயவியல் நிபுணர் பாரி, அடுக்கம்பாறை மருத்துவ பேராசிரியர் வேதநாயகம் மற்றும் மருத்துவ குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இது குறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Top
* 2.வாலிபரை எரித்து கொலைசெய்த வழக்கு பெங்களூருக்கு மாற்றம்
வேலூர்: பள்ளி கொண்டா அருகே எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் தொடர்பான வழக்கு பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.பள்ளிகொண்டா அருகே கடந்த மாதம் வாலிபர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் விசாரணை நடத்தினர்.இறந்தவர், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (55) என்பதும், அங்கு நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார் என்றும், வியாபார போட்டி காரணமாக அவரை கூலிப்படையினர் கொலை செய்து, காரில் பிணத்தை கெண்டு வந்து வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவில் வீசிவிட்டு சென்றது கர்நாடக போலீசார் நடத்தி விசாரணையில் தெரியவந்தது.சம்பவம் நடந்த இடம் பெங்களூர் என்பதால், பள்ளிகொண்டா போலீசார் இந்த வழக்கை, பெங்களூர் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
Top
* 3.சொத்துத் தகராறில் தம்பியைதாக்கிய 4 பேருக்கு வலை
அரக்கோணம்: சொத்து தகராறில் தம்பியை இரும்பு ராடால் தாக் கிய அண்ணன் மற்றும் அவரது மகன்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அரக்கோணம் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (33). இவரது அண்ணன் தயாளன் (50). இவர்களுக்கு இடையே பல மாதங்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தயாளன், தனது மகன்கள் பாலாஜி (24), திருநாவுக்கரசு (22), பன்னீர் (20) ஆகியோருடன் சென்று, சந்திரசேகரை இரு ம்பு ராடால் தலையில் தாக்கினர்.இதை தடுக்கச் சென்ற உறவினர்கள் தசரதன் (23), சுமதி (29) ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சந்திரசேகர் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாரதி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, தயாளன், பாலாஜி, திருநாவுக்கரசு, பன்னீர் ஆகிய நான்கு பேரையும் தேடி வருகிறார்.
Top
* 4.அடுப்பு பற்றவைத்த போது தீயில் சிக்கிய பெண் சாவு
வாணியம்பாடி : வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி உஷா(37). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பால் காய்ச்சுவதற்காக உஷா அடுப்பு பற்ற வைத்தார். அப்போது பக்கத்தில் இருந்த மண்எண்ணை கேன் கவிழ்ந் து, உஷாவின் உடலில் தீப்பிடித்து கொண் டது. அருகில் இருந்தவர்கள் உஷாவை மீட்டு வாணியம் பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார்.இதுபற்றி அறிந்த தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம், ஏட்டு ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Top
* 5. இளம்பெண் தற்கொலை
அரக்கோணம்: வயிற்று வலி தாங்க முடியாமல் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.அரக்கோணம் அடுத்த பரமேஸ் வர மங்கலம் இருளர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மகள் ஜீவா (18). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி வயிற்று வலி அதிகமாகவே, மனமுடைந்த ஜீவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந் தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து தக்கோலம் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Top
* 6.அடுப்பு பற்றவைத்த போது தீயில் சிக்கிய பெண் சாவு
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே அடுப்பு பற்ற வைத்த போது தீப்பிடித்து பெண் இறந்தார்.வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி உஷா(37). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பால் காய்ச்சுவதற்காக உஷா அடுப்பு பற்ற வைத்தார். அப்போது பக்கத்தில் வைக் கப்பட்டிருந்த மண்எண்ணை கேன் கவிழ்ந் ததால் தீப்பிடித்து கொண்டது.
இதில் உஷாவில் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். இதனையறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை உட னடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அங்கு சிகிச் சை பலனின்றி நேற்று இறந்தார்.இதுபற்றி அறிந்த தாலுகா சப்-இன்ஸ் பெக்டர் பக்தவச்சலம், ஏட்டு ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Top
* 7.பைக்-சுமோ மோதல் தொழிலாளி பலி
அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த அருகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நாராயணமங்கலம் கிராமத்தில் உள்ள உறவினரை பார்க்க பைக்கில் சென்றார். கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த சுமோ, பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் ராஜேந்திரன் அந்த இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து அங்கு செ ன்ற அரக்கோணம் தாலுகா போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத் தணி அரசு மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சுமோவை தேடி வருகின்றனர்.
Top
* 8.மனைவி, குழந்தை மாயம் போலீசில் கணவர் புகார்
ஆரணி: ஆரணியில் தனது குழந் தையும், மனைவியும் மாயமானதாக போலீசில் கணவர் புகார் கொடுத்துள்ளார்.ஆரணி டவுன் வெற்றிலைகாரத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (37). லாரி டிரைவர். இவரது மனைவி நித்யா (22). இவர்களுக்கு ஜனனி (3), பிருந்தா(1) ஆகிய குழந்தைகள் உள்ளனர். வேலை விஷயமாக பெருமாள் அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி பெருமாள் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். குழந்தை பிருந்தா மட் டும் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, மனைவி மற்றும் மகள் ஜனனியை உறவினர் வீடுகள், அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பெருமாள் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து நித்யா மற்றும் ஜனனியை போலீசார் தேடி வருகின்றனர்.
Top
* 9.மொபட் மீது மொபட் மோதி முதியவர் பலி
குடியாத்தம்: மொபட் மீது மொபட் மோதிக்கொண்டதில் தனது மகனுக்காக திருமண பத்திரிகை கொடுக்கச் சென்ற முதியவர் பலியானார்.வேலூர் காந்திநகர் சுந்தர கணபதி தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). இவர் தனது மகன் வேதாச்சலம்(31) திருமண பத்திரிகையை தனது உறவினர்களுக்கு கொடுப்பதற்காக பரதராமி நோக்கி கடந்த 4ம் தேதி பகல் 2 மணிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.லத்தேரி அடுத்த பூசாரிவலசை அருகே சென்று கொண்டிருந்த போது பூ வியாபாரி மோகன் என்பவர் எதிரே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இருவர் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ராமச்சந்திரன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் இறந்தார்.இது குறித்து பரதராமி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Top
* 10.ஒடுக்கத்தூர் ஆண்கள் பள்ளியில் இரவுநேர வகுப்பு நிறைவு விழா
அணைக்கட்டு: ஒடுக்கத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில், 10ம் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களின் சொந்த செலவில் இலவச சிற்றுண்டியுடன் கூடிய இரவு நேர சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் நடந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் சரவணன், ரங்கநாதன், உலகநாதன் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இதன் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தேவராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் விஜயன் வரவேற்றார்.பிடிஏ., தலைவர் வெங்கடேசன், உறுப்பினர் அன்வர் ஆகியோர் இரவு நேர பயிற்சி வகுப்பு நடத்த பாடுபட்ட ஆசிரியர்களை பாராட்டினர்.
ஆசிரியர்கள் தேர்விஜயன், சண்முகம், பூபாலன், மோகன்குமார், பார்த்திபன், வடிவேலு ஆகியோர் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.பட்டதாரி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
Top
* 11.ஆர்ப்பாட்டம்
ஆம்பூர்: ஆம்பூர் எம்.சி ரோடு அருகில் உள்ள மதுக்கடையை மாற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆம்பூர் எம்.சிரோடு அருகில் , பழைய மின்சார அலுவலகம் அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மாற்றக்கோரி நேற்று பகல் 12 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளார் மிஸ்பாஹுர் ரகுமான், நகர செயலாளர் இப்திகார் அகமது, நகர பொருளாளர் அப்துல்லாஹ்பாஃகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையை மாற்ற வலியுறுத்தியும், தமிழகமெங்கும் பூரண மதுவிலக்கு கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 102 பேரை போலீசார் கைதுசெய்து மாலையில் விடுவித்தனர். பொதுமக்கள் அவதி: பகல் 12 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்காக போலீசார் அதிகாலை 4 மணியிலிருந்தே எம்.சிரோடு சர்வீஸ் ரோடை மூடி விட்டனர். இதனால் அந்த பகுதி மக்களும், பயணிகளும், பெரும் அவதிப்பட்டனர்.
Top
* 12.நிலத்தகராறில் தாக்குதல் தெக்குப்பட்டில் 5பேர் காயம்
வாணியம்பாடி ;வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(60). விவசாயி. இவருக்கும், இவரது தம்பிகள் ராமசாமி(50), கனகராஜ்(45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டுள்ளார். இதைப் பார்த்த ராமசாமி, கனகராஜ் ஆகியோர் சென்று எங்களுக்கு சொந்தமான இடத்தில் எதற்காக பயிர் செய்துள்ளாய் என்று கேட்டுள்ளனர். இதில் இரண்டு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, இவரது மனைவி சித்ரா, கனகராஜ் ஆகியோர் சேர்ந்து சண்முகம், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோரை தாக்கினர். அதே போன்று சண்முகம் தாக்கியதாக ராமசாமி, சித்ரா, கனகராஜ் ஆகியோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுபற்றி தகவல் அறிந்த அம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன், சிறப்பு எஸ்., கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Top
* 13.துணி வாங்க வந்த மனைவி மாயம் ஆலங்காயம் போலீசில் கணவன் புகார்
வாணியம்பாடி : கடைக்கு துணி வாங்க வந்த மனைவி மாயமானது குறித்து போலீசில் கணவன் புகார் செய்தார்.வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் உள்ள 102 ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு(28). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஜோலார்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்த சரோஜினி(22) என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவனிடம் கோபித்துக் கொண்டு சரோஜினி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டில் சரோஜினி வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் சரோஜினி உறவினர்கள் பிரபுவை சந்தித்து இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் 14ம் தேதி சரோஜினியை உறவினர்கள் அழைத்து கொண்டு வந்து அவரது கணவர் வீட்டில் விட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபு தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஆங்காயத்தில் உள்ள துணி கடைக்கு வந்து துணிகள் வாங்கினாராம். பின்னர் வீடு திரும்பும் போது சரோஜினி கழிவறை சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானராம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து ஆலங்காயம் போலீசில் பிரபு புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜி, ஏட்டு ஜீவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான சரோஜினியை தேடி வருகின்றனர்.
Top
* 14.மணல் கொள்ளையை தடுக்க முயன்ற விஏஓ.,வை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி
அரக்கோணம்: திருட்டு மணல் டிராக்டரை மடக்கி பிடிக்க சென்ற விஏஓ, கிராம சிப்பந்தி ஆகியோரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அரக்கோணம் அடுத்த தக்கோலம் ஆற்றில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் திருடப்பட்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக லாபத்துக்கு விற்கப்படுகிறது.மணல் திருட்டு குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் ஆர்டிஓ.,வுக்கு தகவல் தெரிவிக்கும் நாளில் மட்டும் வருவாய் துறையினர் "ரெய்டு' நடத்துகின்றனர்.
மற்ற நாட்களில் கண்டுகொள்வது இல்லை. குறிப்பாக விடியற்காலை நேரங்களில் இப்பகுதிகளில் அதிகளவில் மணல் திருட்டு நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தக்கோலம் விஏஓ., மணவாளன், கிராம சிப்பந்தி ரமேஷ் ஆகியோர் ஒரே பைக்கில் ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி சென்ற டிராக்டரை மடக்கி பிடிக்க முயன்ற போது, கிராம சிப்பந்தியின் பைக் மீது மோதி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தக்கோலம் போலீசில் ரமேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தக்கோலத்தை சேர்ந்த ஜெயவேல், பார்த்திபன், கஜேந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Top
பொழுது போக்கு
* 1.கே.எம்.ஜி. கல்லூரியில் விளையாட்டு விழா
குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லூரி செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் கஜபதி வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மதிமாறன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.தனிநபர் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆண்கள் பிரிவில் இளங்கலை நிர்வாகவியல் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் பார்த்திபன், பெண்கள் பிரிவில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பபிதா ஆகியோர் பெற்றனர்.குழுவுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆண்கள் பிரிவில் ஒயிட் ஹவுஸ் அணியும், பெண்கள் பிரிவில் ஆரஞ்ச் ஹவுஸ் அணியும் பெற்றன. உடற்கல்வி பயிற்சியாளர் செல்லப்பா அறிமுகவுரையாற்றினார்.விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் ரஞ்சிதம் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment