* 1.சாரணியர் பயிற்சி முகாம் நிறைவு விழா
செங்கல்பட்டு : வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் சாரணியர் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில், செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ஏழு நாள் சாரணியர் பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி நிறைவு நாள் முகாமிற்கு கல்லூரித் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலர் சுலோச்சனா வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் சுரேஷ் கன்காரியா சிறப்புரை ஆற்றினார். மாநில பயிற்சி ஆணையர் மோகம், ருக்மணி, ரஹமுன்னிசா உட்பட பலர் கலந்து கொண்டனர். படாளம் போலீஸ் சப் - இன்ஸ் பெக்டர் ஸ்ரீ தேவி சாரணிய ஆசிரியைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ரமணிகுமாரி நன்றி கூறினார்.
Top
சம்பவம்
* 1.பாத்ரூமில் தவறி விழுந்த விவசாயி பலி
காஞ்சிபுரம் : பாத்ரூமில் தவறி விழுந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலாயுதம்(56); விவசாய கூலி வேலை செய்து வந் தார். இவர், கடந்த 4ம் தேதி வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித் துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் வழுக்கி கீழே விழுந் தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை, காஞ்சிபுரம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment