* 1.மருமகளை கொலை செய்த மாமனாருக்கு 5 ஆண்டு சிறை
லால்குடி : லால்குடியை அடுத்து வரக்குப்பியைச் சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி சித்ரா (30). இவருக்கும் தங்கராஜின் தந்தை அழகப்பன் (60) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அழகப்பன் சித்ராவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து லால்குடி டி.எஸ்.பி. அன்புநேசன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அழகப்பனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Top
* 2.மானிய விலையில் உரம்
மணப்பாறை:மணப்பாறை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் (பொ) ராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை: மணப்பாறை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக 50 சதவீதம் மானியத்தில் நிலக்கடலைக்கு தேவையான ஜிப்சம் மற்றும் நுண் சத்து தெளிப்பதற்கு தேவையான டி.ஏ.பி. அமோனியம் சல்பேட் மற்றும் பேராக்ஸ் தேவையான அளவு இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உடனே அணுகலாம். மேலும் ரூ. 7 ஆயிரத்து 500 மானியத்தில் பயறு வகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Top
* 3.கோடை சீஸன் கொள்ளையர்கள் கைவரிசை ரோந்து தீவிரப்படுத்த கமிஷனர் உத்தரவு
திருச்சி: ""திருச்சி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கொள்ளையை தடுக்கும் வண்ணம் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்படும்,'' என்று மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் தெரிவித்தார்.
திருச்சி பீமநகர் கூனிபஜார் நேமத்தான் தெருவைச் சேர்ந்த கலிபுல்லா (41) பாலக்கரை பகுதியில் பழைய இருப்புக்கடை நடத்தி வருகிறார். கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கலிபுல்லா தான் அணிந்திருந்த ஏழு பவுன் செயின், நான்காயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மொபைல் ஃபோன்களை வீட்டின் பீரோவில் வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். வீட்டில் உள்ளே தூங்கும்போது காற்று வேண்டும் என்பதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் கலிபுல்லா நல்ல உறக்கத்தில் இருந்த நேரம் பார்த்து திறந்திருந்த கதவு வழியாக வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழு பவுன் செயின், நான்காயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இர ண்டு மொபைல் ஃபோன்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர். காலையில் வழக்கம் போல் எழுந்து பீரோவை பார்த்துள்ளார். அங்கு செயின், பணம் மற்றும் மொபைல்ஃபோன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பாலக்கரை குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸாரும் திறந்திருந்த வீட்டில் துணிகரமாக திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பொதுவாக கோடைகாலம் என்றாலே பெரும்பாலன மக்கள் காற்றோட்டமாக தூங்க வேண்டும் என்பதற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்து தூங்குவர். ஆகையால் கோடைகாலம் ஆரம்பித்தவுடன் வீடுபுகுந் து திருடும் கொள்ளையர்கள் தங்களின் கைவரிசை காட்ட ஆரம்பிப்பர். அந்த வகையில் கோடை காலம் வந்தவுடன் திறந்திருந்த வீட்டை தேடிப்பிடித்து கொள் ளை சம்பவம் நடந்துள்ளது.
கோடைகால சீஸன் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட துவங்கியிருப்பது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம் கேட்டபோது, ""திருச்சி மாநகரில் பல இடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களில் எல்லாம் போலீஸ் "பீட்' இல்லை. பழைய முறையிலான பீட்களே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் எல்லா பகுதிகளிலும் போலீஸார் ரோந்து செல்வதன் மூலம் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கமுடியும். அதற்காக இன்று மாநகர குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகரில் இரவு நேர ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும். வீட்டுக்கு வெளியே தூங்குபவர்கள் பீரோவை பூட்டாமல் தூங்கிவிடுகின்றனர். அதுவும் கொள்ளை நடக்க காரணமாக அமைந்து விடுகிறது,'' என்று தெரிவித்தார்.
Top
பொது
* 1.அமைப்பில்லாமல் சேவை செய்ய முடியும்: கல்லூரி விழாவில் தகவல்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி முதுகலை முதலாமாண்டு சமூகப்பணித்துறை, பூர்ணோதயா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் பிரேமா தலைமை வகித்து பேசியதாவது: ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமி சேவை செய்யும் மணப்பான்மையுடன் தான் கல்லூரி மற்றும் வேதபாடசாலையை நடத்திவருகின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனுடையோருக்கு இலவச கல்வியும் அளிக்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளுக்கு அரசு அளித்துவந்த 25 லட்சம் ரூபாய் நிறுத்தப்பட்டதால், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் தங்கள் டிரஸ்ட் மூலம் பணத்தை அளித்து ஆயிரம் மாணவர்களுக்கு சேவையளித்து வருகிறார். அதேபோல் கல்லூரி நிர்வாகம் சார்பில் பனையபுரம் கிராமம் தத்து எடுக்கப்பட்டு, ஏழை பெண்களுக்கு சுயதொழில் மற்றும் அடிப்படை வசதிகளும் செய்துதரப்படுகிறது.
மாநில நுகர்வோர் கவுன்சில் உறுப்பினர் சகுந்தலா ஸ்ரீனிவாசன் பேசியதாவது: உயிருக்கும் உடமைக்கும் உரிமை, தகவல் பெறும் உரிமை, விருப்ப உரிமை, குறைதீர்க்கும் உரிமையை முதலில் அனைத்து நுகர்வோர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும். கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் நம்செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.
பூர்ணோதயா டிரஸ்ட் இயக்குநர் கலையரசி பேசியதாவது: அமைப்பு ரீதியாகத்தான் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை, ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்று இல்லாமல் மனது இருந்தால் அனைவரும் சேவை செய்ய முடியும். மாணவர்கள் தங்களுக்குள் சக மாணவர்களுக்கு செய்யும் உதவியே சேவையாத்தான் மாறுகிறது. இத னை தாண்டி சமுதாயத்துக்கும் தொண்டு செய்ய வேண்டும். மாற்றுத்திரனுடையோருக்கு அனுதாபம் தேவையில்லை, நட்புதான் தேவை, கைப்பிடித்து உதவினால் மேலே ஏறிவர தயாராக உள்ளோம். அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை என்றார்.
பெண் வக்கீல் சங்கத்தலைவர் ஜெயந்திராணி, உளவியல் பேராசிரியர் சவுந்திரம், துறைத்தலைவர் அருண்பிரகாஷ், யோகா பேராசிரியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவர்கள் ராஜா வரவேற்றார். மாணவர் பூபதி நன்றி கூறினார்.
Top
* 2.கண் சிகிச்சை முகாம்
முசிறி: முசிறியில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முத்துராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் சுதாகர், விவசாய அணி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி வேளாண் விற்பனைக்குழு தலைவர் ஜோதிக்கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். ஜோசப் கண் மருத்துவமனை டாக்டர் அகல்கா மற்றும் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 214 பேர் சிகிச்சை பெற்றனர். நகர துணைச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 3.அரசு பள்ளியில் முப்பெரும் விழா
மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள மலையடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. பள்ளி ஆண்டுவிழா, உடல்திறன் போட்டி விழா, புரவலர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜான்பெர்க்மா ன்ஸ் வரவேற்றார். விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் புரவலர் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக பள்ளிக்கு வழங்கியதை வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. மலையடிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருளப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேவிட்பர்னபாஸ், ஊர்த்தலைவர் சூசைமாணிக்கம் உட்பட புரவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உ ட்பட பலர் பங்கேற்றனர். மணவைத்தமிழ்ம ன் ற தலைவர் கருராஜகோபாலன் புரவலர்கள் சார்பில் ஏற்புரை வழங்கினார். பள்ளி மாணவ, மா ணவிகளின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
Top
* 4.ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பெண்கள் தின விழா
திருச்சி: திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பெண்கள் பிரிவின் முதல் மாநாடு மற்றும் பெண்கள் தின விழா நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் மேலா ண்மை இயக்குநர் சுந்தராகுமார் பேசுகையில்,""வங்கிகளில் பணிபுரியும் பெண்கள் பல பிரச்னைகளை சந்தித்தாலும், அலுவலகத்தில் நல்ல வசதிகளுடன் வேலை செய்கின்றனர். ஆனால், வயல்வெளிகளில் கூலி வேலை உள்ளிட்ட பல அமைப்புசாரா தொ ழில்களில் ஏராளமான பெண்கள் உள்ளனர்.
இவர்களது வாழ்க்கை மேம்பட நம்மை போன்ற பெண்கள் உதவ வேண்டும்,''என்றார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் நடாஃப் பேசியதாவது: தற்போது வங்கிகளில் தொழில்நுட்பம் சிறப்பான முறையில் வளர்ந்துள்ளது. வங்கிக்கே செல்லாமல், வங்கி நடைமுறைகளை வாடிக்கையாளர் வீட்டிலிருந்தே செய்துகொள்ள முடியும். எனினும், இன்னும் பல வங்கிகள் காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை செயல்படுகிறது. கிராமப்புறங்களில் கூட 12 மணி நேரம் செயல்பட வைக்கின்றனர். இதனால், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். பெண்களுக்கு தற்போது லோக்சாபா, சட்டசபைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு வங்கி பணி அளவுக்கு வந்துள்ளது வரவேற்கத்தது. இவ்வாறு அவர் பேசினார். மாற்றுத் திறனுடைய ஏழு குழந்தைகளுக்கு, நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொதுமேலாளர் சந்திரசேகரன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் வாசுகி, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் ரிஷபதாஸ், சுலோச்சனா ஸ்ரீனிவாஸன், பாலயோகினி ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Top
* 5.ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பெண்கள் தின விழா
திருச்சி: திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பெண்கள் பிரிவின் முதல் மாநாடு மற்றும் பெண்கள் தின விழா நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் மேலா ண்மை இயக்குநர் சுந்தராகுமார் பேசுகையில்,""வங்கிகளில் பணிபுரியும் பெண்கள் பல பிரச்னைகளை சந்தித்தாலும், அலுவலகத்தில் நல்ல வசதிகளுடன் வேலை செய்கின்றனர். ஆனால், வயல்வெளிகளில் கூலி வேலை உள்ளிட்ட பல அமைப்புசாரா தொ ழில்களில் ஏராளமான பெண்கள் உள்ளனர்.
இவர்களது வாழ்க்கை மேம்பட நம்மை போன்ற பெண்கள் உதவ வேண்டும்,''என்றார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் நடாஃப் பேசியதாவது: தற்போது வங்கிகளில் தொழில்நுட்பம் சிறப்பான முறையில் வளர்ந்துள்ளது. வங்கிக்கே செல்லாமல், வங்கி நடைமுறைகளை வாடிக்கையாளர் வீட்டிலிருந்தே செய்துகொள்ள முடியும். எனினும், இன்னும் பல வங்கிகள் காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை செயல்படுகிறது. கிராமப்புறங்களில் கூட 12 மணி நேரம் செயல்பட வைக்கின்றனர். இதனால், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். பெண்களுக்கு தற்போது லோக்சாபா, சட்டசபைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு வங்கி பணி அளவுக்கு வந்துள்ளது வரவேற்கத்தது. இவ்வாறு அவர் பேசினார். மாற்றுத் திறனுடைய ஏழு குழந்தைகளுக்கு, நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொதுமேலாளர் சந்திரசேகரன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் வாசுகி, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் ரிஷபதாஸ், சுலோச்சனா ஸ்ரீனிவாஸன், பாலயோகினி ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Top
* 6.புள்ளம்பாடியில் பள்ளி ஆண்டுவிழா
டால்மியாபுரம்: புள்ளம்பாடி குழந்தை யேசு பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் தேவதாஸ் வரவேற்றார். புள்ளம்பாடி சகாயமாதா மருத்துவ மனை இயக்குனர் தங்கசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கரோலின் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் புள்ளம்பாடி பேரூராட்சித்தலைவர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். ஆசிரியை ஜோஸ்பி நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Top
* 7.தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
துறையூர் : துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார பேரணி, மரக்கன்று நடும் விழா மற்றும் கருத்தரங்க கூட்டம் நடந்தது. நேரு யுவகேந்திரா, திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை, இளையோர் பேரவை சார்பில் நடந்த பிரசார பேரணி பாலக்கரையில் புறப்பட்டு திருச்சி ரோடு, பஸ் நிலையம் வழியாக ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. ஒன்றியக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன் மரக்கன்றுகளை வழங்கினார். மாவட்ட இளையோர் பேரவைத் தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். தாலுகா பேரவைச் செயலாளர் மகேஸ்வரன் வரவேற்றார். திருச்சி நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய சேவைத் தொண்டர் முருகாம்பாள், நேரு இளையோர் நண்பர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். தேசிய சேவை தொண்டர் தேவிகா நன்றி கூறினார்.
Top
* 8.மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
மண்ணச்சநல்லூர் : மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது: "ஒரு நாட்டின் வளமும் வறுமையும் அந்த நாட்டின் கல்வித்தரத்தை பொறுத்தே உள்ளது. தரமான கல்வித்தரத்தை பெற்றவர்கள் சிறந்த பொருளாதார நிலையை அடைவார்கள். மாணவ மாணவிகள் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும். மாணவர்கள் தங்களை நல்லவர்களாக மாற்றிக் கொண்டால் வருங்கால சமுதாயம் நல்ல நாடாக மாறிவிடும் என்றார்.விழாவில் காந்திகிராம் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தியாகராஜன், கல்லூரி நிர்வாக அறங்காவலர் லோகநாதன், செயலர் ராஜேஸ்வரி, கவுரவ ஆலோசகர் சேகர், இந்திராகணேசன் பொறியியல் கல்லூரி இயக்குநர் பாலகிருஷ்னன், கல்லூரி முதல்வர் ஜோசப், துணைமுதல்வர் கங்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Top
* 9.துறையூர் ஒன்றியக்குழு கூட்டம்
துறையூர் : துறையூரில் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது.சேர்மன் தர்மன் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:சரவணன்: எங்கள் பஞ்சாயத்தில் இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் துவங்கும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகுமாறன்: தவிட்டுப்பட்டியில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை.பொம்மன்: கொட்டையூரில் குடிநீர் பற்றாக்குறை போக்க அடிக்கிணறு வெட்ட வேண்டும்.தலைவர்: குடிநீர் பற்றாக்குறை போக்க முன்னெச்சரிக்கையாக ரூ.82 லட்சத்திற்கு பணிகள் விபரப்பட்டியல் அளித்து கேட்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.சின்னசாமி: உள்ளாட்சித் தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் செல்லிப்பாளையம் ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 2 உறுப்பினர்களுக்கு பலமுறை கேட்டும் டெபாசிட் பணம் திருப்பித் தரவில்லை. அவர்களை வீணாக அலைய விடுகின்றனர்.ஆணையர் : உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Top
* 10.ஆட்டோ கவிழ்ந்து 28பேர் காயம்: கலெக்டர் ஆறுதல்
திருச்சி:புத்தனாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 40 பேர் கோட்டாத்தூருக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லோடு ஆட்டோவில் சென்றனர். கோட்டாத்தூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 28 பேர் காயமடைந்தனர். இவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இவர்களில் 10 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 8 பேரையும் கலெக்டர் சவுண்டையா நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
Top
* 11.பயிற்சி முகாம்
துறையூர்: உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரத்தில் விதைகிராம திட்ட பயிற்சி முகாம் நடந்தது.உப்பிலியபுரம் வேளாண் உதவி இயக்குனர் ஜெயபால் தலைமை வகித்து, தரமான விதை உற்பத்தி, விதை சேகரிப்பு, கோடையில் எலி ஒழிப்பு, செம்மை நெல் சாகுபடி ஆகியவை குறித்து விளக்கினார். மேலும் விவசாயிகள் தானியக்குதிர் அமைக்க தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 33சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 25சதவீதமும் அரசு மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார். திருச்சி மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சிவராஜ் சிறப்புரையாற்றினார். வேளாண் அலுவலர் வேல்முருகன் வரவேற்றார். துணை வேளாண் அலுவலர் ராமராஜ் நன்றி கூறினார்.
Top
* 12.விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
மணப்பாறை : மணப்பாறை தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி மஞ்சம்பட்டியில் நடந்தது.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் தலைமை வகித்து தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானிய திட்டங்கள் பற்றி பேசுகையில், அரசு மானியங்களை பெற முதலில் விவசாயிகள் அனைவரும் தங்களது சிட்டி அடங்கலுடன் வந்து தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். டிவி போன்ற ஊடகங்களில் வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்காமல், விவசாயம் தொடர்பாக வரும் நல்ல பல செய்திகளையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தோட்டக்கலை பயிர் சாகுபடி, அரசு மானியம் உள்ளிட்ட எந்த விசயமாக இருந்தாலும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை சந்தித்தால் அவர்களுக்கு உதவ அதிகாரிகள் தயாராக இருக்கிறோம். எனவே, அரசு மானிய திட்டங்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கண்வலி கிழங்கு பயிருக்கு அரசு சார்பில் 50 சதவீத மானியமும், கோலியாஸ் பயிருக்கு 20 சதவீத மானியமும், சந்தன மரம் வளர்க்க 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மூலிகை பயிர்கள் சாகுபடி குறித்து வையம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கணேசன், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டம், துல்லிய பண்ணை திட்டம் குறித்து மருங்காபுரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், தெளிப்பு நீர் பாசனம் குறித்து மணப்பாறை துணை வேளாண் அலுவலர் தங்கராஜ், மருங்காபுரி தோட்டக்கலைத்துறை அலுவலர் கோவிந்தராஜ், சொட்டுநீர் பாசனம் குறித்து ஆல்பா இரிடெக் நிறுவனத்தின் ராஜரத்தினம், கோகோ பயிர் சாகுபடி குறித்து கேட்பரீஸ் நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதிலளித்தனர். மணப்பாறை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
Top
* 13.அதிமுக பொதுக்கூட்டம்
தொட்டியம்:தொட்டியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.தொட்டியம் ஒன்றிய அதிமுக செயலாளர் பால்மணி தலைமை வகித்தார். நகர செயலாளர் சந்திரன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் பூங்கா நாகராஜன், நடிகர் ஜெயகோவிந்தன், மாநில விவசாய அணி பொருளாளர் தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ சிவபதி, தொட்டியம் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் மற்றும் பலர் சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Top
* 14.வருஷாபிஷேகம்
துறையூர்: துறையூர் ஆத்தூர் ரோடு கோவிந்தாபுரம் பிரிவு அருகே அமைந்துள்ள ருத்ர விநாயகர் கோயில் முதலாம் ஆண்டு பூர்த்தி வருஷாபிஷேக விழா நடந்தது.கடந்த ஆண்டு ருத்ர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு முதலாம் ஆண்டு பூர்த்தி வருஷாபிஷேகம், பூஜை ஹோமம், சிறப்பு வழிபாடு நடந்தது. ருத்ர விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Top
* 15.பேரவை நிறைவு விழா
சமயபுரம்: சிறுகனூர் அங்காளம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில் பேரவைகளின் நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி இயக்குநர் ராஜாராமன் தலைமை வகித்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வருமான கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி டீன் சைவராஜ் வாழ்த்திப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை தலைவர் ஜெய்சங்கர், திருச்சி அண்ணா பல்கலை. விரிவுரையாளர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் துறைத்தலைவர்கள் சுபாஷ் சந்திரன், சியாமளா, ஸ்ரீதேவி, சுகந்தி, முருகையன், உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Top
பிரச்னைகள்
* 1.ஏரியுடன் வாய்க்கால் இணைக்க கோரிக்கை
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி திருத்தியமலை ஏரியுடன் அய்யாறு வாய்க்காலை இணைக்கும் திட்டத்துக்கு, தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினர் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
முசிறி தாலுகா திருத்தியமலை ஏரிக்கு அய்யாறு கால்வாயை தண்டலைபுத்தூரில் இருந்து புதிய கால்வாய் இரண்டு கி.மீ., தூரத்தில் வெட்டி தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டு பொதுப்பணித் துறை மூலம் 48 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டம் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 10 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர். திருத்தியமலை ஏரியின் பரப்பளவு 200 ஏக்கர். கோரிக்கையை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கட ந்த 50 ஆண்டு காலமாக கேட்டு வருகின்றனர். அந்த பகுதி விவசாயிகள் நலன் கருதி அரசின் பரிசீலனையில் உள்ள இந்த திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு 2010-11 நிதி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுகிறோம். இந்த கோரிக்கை அடங்கிய மனுவை மத்திய அமைச்சர் வாசன், திருச்சி வந்த தமிழக முதல்வர் கருணாநிதி, சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
Top
சம்பவம்
* 1.திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்கப்பூர் தொழிலதிபர் சாவு
திருச்சி: திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மாரடைப்பால் இறந்தார்.சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் முகமது ஹனீபா (74). திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த செட்டிமேடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். சிங்கப்பூர் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.
இளம் வயதிலேயே சிங்கப்பூர் சென்ற அவர், அங்கு கண்ணாடிக்கடை நடத்தி வந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ளனர். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதற்காக, நேற்று "ஏர் இந்தியா' விமானம் மூலம் ஹனீபா திருச்சி வந்தார். இமிகிரேஷன் சோதனை முடிந்தவுடன், சோர்வாக சேரில் அமர்ந்திருந்தார். அப்படியே திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம்' என்று தெரிவித்தனர். விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
Top
* 2.இளம்பெண் தற்கொலை
துறையூர்:துறையூரை அடுத்த பெருமாள்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் கலா(17). இவர் கடந்த பல வருடங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி விஷம் சாப்பிட்டு மயங்கிக் கிடந்த கலா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Top
* 3.திண்டுக்கல் வாலிபர்கள் காவிரி புதைமணலில் சிக்கி பலியான பரிதாபம்
திருச்சி: கோவில் கும்பாபிஷேகத்திற்காக, திருச்சி அம்மா மண்டபத்தில் காவிரி நீர் எடுக்க வந்த திண்டுக்கலை சேர்ந்த இருவர் புதை மணலில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலன். அவரது மகன் பி.நாகராஜ் (36). தனியார் நூற்பாலை மேற்பார்வையாளராக பணி புரிந்தார். அவரது உறவினர் எஸ்.நாகராஜ் (31). சேமியா தயாரிப்பு நிறுவன உரிமையாளர்.இப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வரும் மார்ச் 10 அன்று கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அதற்கு, காவிரியில் இருந்து புனித நீர் எடுப்பதற்காக, இருவரும் நேற்று காலை திருச்சிக்கு வந்தனர்.டி.வி.எஸ்., டோல்கேட்டில் உள்ள உறவினர் வீட்டில் காலை டிபன் சாப்பிட்டனர். மதியம் புனித நீர் எடுக்க ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்தனர். நீர் எடுக்க ஆற்றில் இறங்கிய, பி.நாகராஜ் திடீரென புதை மணலில் சிக்கினார்.அவரை காப்பாற்ற சென்ற எஸ்.நாகராஜ், புதைமணலில் அடுத்து சிக்கினார். இவர்களின் கூக்குரலை கேட்டு அங்குள்ளோர் இவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Top
* 4.மாணவர் 'எஸ்கேப்' போலீஸ் வலை
திருவெறும்பூர்: திருவெறும்பூர் பர்மா காலனி திடீர் நகர் பகுதியில் வசிப்பவர் கலியன். இவரது மகள் கண்ணகி(25). அப்பகுதியிலுள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் செந்தில்குமார்(29). இவர் திருச்சி அரசு சட்டக்கல்லூரி மூன்றாமாண்டு படித்து வருகிறார். கண்ணகியை செந்தில் குமார் கடந்த 2006ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக, கண்ணகி திருவெறும்பூர் மகளிர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து தலைமறைவான செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
Top
* 5.மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
மண்ணச்சநல்லூர்: சமயபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே இறந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சமயபுரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சத்திநாராயணராவ்(28). எலக்ட்ரீசியன் வேலைபார்த்து வந்தார். சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாத் என்பவரது புது வீட்டில் மின்சாதன வேலை செய்தார். அப்போது எதிர்பாராத விதத்தில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சத்திநாராயணராவ் உடல் கருகி இறந்தார். தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சத்தியநாராயணராவ் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சமயபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Top
பொழுது போக்கு
* 1.மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி
திருச்சி: திருச்சி மாவட்ட ஹேண்ட் பால் சங்கமும், வின்சென்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியும் இணைந்து மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டியை நடத்தின.
இதில் மாணவர்கள் பிரிவில் 10 அணிகளும், மாணவிகள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன. மாணவர்கள் பிரிவில் முதல் அரையிறுதி போட்டியில் எஸ்பிஐஓஏ பள்ளி அணியும், ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் எஸ்பிஐஓஏ மெட்ரிக் பள்ளி 10:6 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் வின்சென்ட் மெட்ரிக் பள்ளி அணி, வின்சென்ட் ஹேண்ட் பால் அகாடமி அணியை 6:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இறுதி போட்டியில் எஸ்பிஐஓஏ பள்ளி அணி, வின்சென்ட் பள்ளி அணியை 8:6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் முதல் அரையிறுதி போட்டியில் முள்ளிப்பட்டி லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை 4:2 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் வின்சென்ட் மெட்ரிக் பள்ளி அணி, ஆரோக்கியமாதா பள்ளி அணியை 4:2 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதி போட்டியில் வின்சென்ட் மெட்ரிக் பள்ளி அணி, லாரன்ஸ் மெட்ரிக் பள்ளி அணியை 5:1 என்ற கோல் கணக்கில் வென்றது.பரிசளிப்பு விழாவிற்கு எஸ்பிஐஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயகுமார், தெற்கு ரயில்வே தடகள பயிற்சியாளர் நிஜாமுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment