* 1.சுண்டக்குடி- மருதையாறு உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சரிடம் மனு
அரியலூர்: சுண்டக்குடி மருதையாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர்- பெரம்பலூர் மா வட்ட சாலை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனிடம், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி அளித்த மனு:
அரியலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அயன் ஆத்தூர்- கிளிமங்கலம்- சவுரிக்காடு- ஐக்கால் சாலை, ஆனந்தவாடி- கிளிமங்கலம் சாலை, அரியலூர்- ராவுத்தம்பட்டி- அயன் ஆத்தூர் இணைப்பு சாலை, மணக்கால்- பெரியவெண்மணி சாலை, கோவிந்தபுரம்- மணக்கால்- நல்லாம்பத்தை- ஓ.கூத்தூர் இணைப்பு சாலை, ஓட்டக்கோயில்- சாளைக்குறிச்சி- காவேரிபாளையம் சாலை, அரியலூர்- அம்மாக்குளம்- பொய்யூர் சாலை, கோப்பிலியங்குடிக்காடு- பெரியநாகலூர்- சமத்துவபுரம் வழியாக வி.கைகாட்டி செல்லும் சாலை உள்ளிட்ட கிராம சாலைகளை நெடுஞ்சாலையில் சேர்க்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுண்டக்குடி மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், ராயம்புரம்- கடுகூர் சாலையின் ரண்டு ஓடைகளில் உயர் மட்ட பாலம், சீனிவாசபுரம்- பொய்யூர் பாதையில் உள்ள ஓடைகளில் உயர்மட்ட பாலம், வெங்கனூர் அருகே ஆண்டி ஓடை மற்றும் மானோடையில் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலம் கட்டும் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
அரியலூர் தொகுதியில் கிராம சாலைகளாக உள்ள சுண்டக்குடி- ஓரியூர் சாலை, சிலுப்பனூர் சாலை, அரியலூர்- முத்துவாஞ்சேரி சாலையில் பிரிவு சாலையாக உள்ள காஞ்சிலி கொட்டகை சாலை, கணக்கம்பாளையம் பிரிவு சாலை, திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் செம்மந்தங்குடி சாலை, வைப்பம் வழியாக செல்லும் கல்லக்குடி சாலை, கருவிடச்சேரி செல்லும் சாலை, அரியலூர்- செந்துறை சாலையில் ஓட்டக்கோவில் கிராமத்திலிருந்து பிரிந்து ஓ.கூத்தூர் ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லும் சாலையாக மாற்ற வேண்டும். அரியலூர்- ஓ.கூத்தூர் ரயில்வே ஸ்டேஷன் வரையிலான சாலை உள்ளிட்ட சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சாலைகளாக மாற்றி, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
* 2.இன்று முதல் சுழற்சி முறையில் மின் வினியோகம்
அரும்பாவூர் : பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று(8ம்தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இதன்படி எசனை மின் பாதையிலிருந்து மின்சாரம் பெறும் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணி வரை மும்முனை மின்சாரமும், மதியம் 12 மணிமுதல் மதியம் 3 மணிவரை இருமுனை மின்சாரமும் வினியோகம் செய்யப்படும். மதியம் 3 மணிமுதல் மாலை 6 மணிவரை மின் வினியோகம் இருக்காது. மலையாளப்பட்டி மின் பாதை வழியாக மின் வினியோகம் பெறும் தொண்ட மாந்துறை, மலையாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மேற்கண்ட முறையிலேயே மின் வினியோகம் செய்யப்படும். கை.களத்தூர் மின் பாதை வழியாக மின் வினியோகம் பெறும் கிருஷ்ணாபுரம்,வெண்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்முனை மின்சாரமும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணிவரை இருமுனை மின்சாரமும் வினியோகம் செய்யப்படும். இப்பகுதிகளில் மதியம் 12 மணிமுதல் மதியம் 3 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
பூலாம்பாடி மின் பாதை வழியாக மின்சாரம் பெறும் வெங்கலம், அரும்பாவூர், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணிவரை மும்முனை மின்சாரமும், காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை இருமுனை மின்சாரமும் வினியோகம் செய்யப்படும். காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை மின் வினியோகம் இருக்காது. தொண்டமாந்துறை மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் அன்னமங்கலம், முகமதுபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணிவரை மும்முனை மின்சாரமும், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இருமுனை மின்சாரமும் வினியோகம் செய்யப்படும். காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் மின் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொது
* 1.அரியலூரில் அ.தி.மு.க.,பொதுக்கூட்டம்
அரியலூர்: அரியலூரில் அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 62வது பிறந்த தினவிழாவை முன்னிட்டு, அரியலூர் பெருமாள் கோவில் தெருவில், நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் நகர செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் வேலுசாமி, தலைமை நிலைய பேச்சாளர் சுந்தர்ரபாண்டியன், தொகுதி செயலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் பாசறை செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
* 2.மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
ஜெயங்கொண்டம்: கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை வென்ற தத்தனூர் எம்ஆர் கல்லூரி மாணவ, மாணவிகள் பாராட்டப்பெற்றனர்.திருச்சி பாவேந்தன் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான நாள் வெளியீடு, ஆடை வடிவமைப்பு, ஆடை அலங்கரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் எம்.ஆர். கல்லூரி டெக்ஸ்டைல் மற்றும் பேஷன் டெக்னாலஜி மாணவ, மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை எம்.ஆர். கல்லூரி தாளாளர் ரகுநாதன்,இயக்குனர் ராஜமாணிக்கம், முதல்வர் தங்கபிச்சையப்பா, துறைத்தலைவர் முருகதாஸ்,பயிற்சி அளித்த பேரரியர்கள் செல்வராணி, பாலசுப்பிரமணியன், விஜயகாண்டீபன்,கதிரொலி, இந்துமதி, வினோத், மாலதி, பிரியங்கா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
* 3.என்எஸ்எஸ் முகாம் நிறைவு
அரியலூர் : கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வாலாஜாநகரத்தில்என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடந்தது.முகாமில் சாலைசெப்பனிடுதல், மருத்துவ முகாம், விழிப்புணர்வு பேரணிகள், தூய்மைப்பணிகள் உள்ளிட்ட பணிகள் நடந்தது. முரண்பாடுகளை சமாளிப்பது எப்படி? நுகர்வோர் விழிப்புணர்வு, மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடந்தது.அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அரியலூர் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ரத்த தான முகாம்,மரக்கன்று நடுதல் ஆகியன நடந்தது. முகாம் நிறைவுவிழாவுக்கு கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வாலாஜாநகர ஊராட்சி தலைவர் இளையராஜா கலந்து கெண்டு மாணவர்களை பாராட்டி அனைத்து மாணவர்களுக்கும் டிக்ஷனரி வழங்கினார். முன்னதாக துணை திட்டஅலுவலர் மணமலர்ச்செல்வி வரவேற்றார். திட்ட அலுவலரும், ஒருங்கிணைப்பாளருமான ராசேந்திரன் நன்றி கூறினார்.
* 4.நாளை மின்தடை
ஜெயங்கொண்டம்:ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் நாளை(9ம்தேதி ) மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஜெயங்கொண்டம், சிலால், வாணதிரையன்பட்டினம், உதயநத்தம், தேவாமங்கலம், உடையார்பாளையம், தத்தனூர், வாரியங்காவல், தேவனூர், கல்லாத்தூர், குருவாலப்பர்கோவில், உட்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
* 5.பார்க்கவ குல சங்க ஆலோசனை கூட்டம்
அரியலூர்: அரியலூரில் பார்க்கவ குல சங்கம் மற்றும் பாரி நற்பணி மன்ற செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அரியலூர் ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் பாரி நற்பணி மன்றம் மற்றும் பார்க்கவ குல சங்க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பார்க்கவ குல சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவேந்திரன் வரவேற்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கி, பாரி நற்பணி மன்ற நிறுவன தலைவரும், பாரி நற்பணி மன்றத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினருமான பச்சைமுத்து உடையார் பேசினார். மாநில தலைவர் அண்ணா, உயர்மட்டக்குழு தலைவர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.அரியலூர் நகர தலைவர் இரணியன் நன்றி கூறினார்.
* 6.கோயில் திருவிழா
அரும்பாவூர்: அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழையில் அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும்,சிறப்பு அபிஷேகமும் நடந்தது. நேற்று (7ம் தேதி) காலை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.நேற்று மதியம் சுவாமி வீதி உலா வந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து அலகு குத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை ஊர்ப்பொது மக்கள் செய்திருந்தனர்.
சம்பவம்
* 1.ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்க கோரி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
அரியலூர்: அரியலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உயருந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அரியலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும். ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை உடனே தொ டங்கி, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அல்லது விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை உரிய நஷ்ட ஈட்டுடன் வழங்க வேண்டும்,
திருமானூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். ஆண்டிமடத்தில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரியலூர், ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத் த வேண்டும். திருமானூர், தா.பழூர், ஆண்டிமடத்தில் தீயணை ப்பு நிலையம் அமைக்க வேண்டும். சுண்டக்குடி மருதையாற்றி ல் உயர்மட்ட பாலம் கட் ட வே ண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், அரியலூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ராஜதுரை, மாவட்ட பொருளாளர் ராஜா பன்னீர்செல்வம் மற்றும் மகளிர் அணி, வக்கீல்கள் அணி, தொழிற்சங்க அணி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவா நன்றி கூறினார்.
* 2.விஷம் குடித்து பெண் தற்கொலை
திருமானூர்: திருமானூர் அருகே உள்ள செட்டிக்குழி கிராமத்தை சேர்ந்த �ஷாக்கு மனைவி நல்லம்மாள்(50). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று மனமுடைந்து விஷ இலைகளை அரைத்து குடித்தார். உடனடியாக தஞ்சை மருத்துவ கல்லூரி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருமானூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment