Sunday, March 7, 2010

ராமநாதபுரம்

* 1.அரசு பஸ்களில் நிறுத்தங்கள் முறைப்படுத்துவது எப்போது ? : பயணிகளை ஏமாற்றும் கூடுதல் கட்டண முறை

ராமநாதபுரம் : கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பஸ்களும், வழக்கமான நிறுத்தங்களில் நின்று செல்வதால் பயணிகள் எரிச்சலடைகின்றனர். பிரிக்கப்படும் நோக்கமும் நிறைவேறாமல் போகிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் பிரத்யேகம் கொண்ட வழித்தடமாக மதுரை- ராமேஸ்வரம் திகழ்கிறது. இதற்காக அரசு தரப்பில் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு எல்.எஸ்.எஸ்., எப்.பி., பி.பி(பாயின்ட் டூ பாயின்ட்), ஒன் டூ த்ரி, ஒன் டூ ஒன் என பல வகைப்படும். கட்டணத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த பஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
இதில் தரம் என்பது, வசதியை பொறுத்ததில்லை, கட்டணத்தை பொறுத்ததாகும். எல்.எஸ்.எஸ்., பஸ்கள் வரை ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ்களிலும் இவற்றின் கட்டணமே நடைமுறையில் உள்ளது. இந்த கட்டணத்தில் சென்றால், வரையறுக்கப்பட்ட அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்லும். அடுத்து பி.பி.,பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவை குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் பஸ்களாகும். இவை அனைத்து தரப்பு மக்களின் விருப்ப வாகனமாக கருதப்படுகிறது. எப்.பி., பஸ்களிலும் இதே நடைமுறை தான் உள்ளது. அடுத்து வரும் ஒன் டூ ஒன், ஒன் டூ த்ரி பஸ்களில் எட்டு ரூபாய் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்கின்றன. ஓரிடத்தில் புறப்பட்டு இறுதியிடம் வரை இடைநிற்காமல் செல்லும்.
இவை எல்லாமே சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வந்தாலும், பி.பி., பஸ்களில் இவை சரியாக நடைமுறை படுத்தப்படுவதில்லை. எல்.எஸ்.எஸ்., பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தும், அவற்றை போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. பஸ் இல்லையெனும் போது, இதை பொறுத்து கொள்ளலாம், மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் அடிக்கடி பஸ் இயக்கப்படும் போது, இந்நிலை தேவையற்றதாகும்.
ஒரு சிலரை இது குளிர வைத்தாலும், தினசரி வந்து செல்லும் வாடிக்கை பயணிகளை எரிச்சலடைய செய்துள்ளது. சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால், பரமக்குடி-ராமநாதபுரம் வழித்தடத்தில் பிசுபிசுப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்தியும் தொடரும் இச்செயலால் கண்டக்டர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "அதையும் மீறி நிறுத்திதான் ஆகவேண்டும்,' எனும் நிலை வந்தால், கட்டணத்தை குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.
எந்தெந்த பஸ்கள் எங்கு நிற்க வேண்டும் என்பதை முதலில் முறைப்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் நல்லதொரு முடிவெடுக்க வேண்டும்.
Top
* 2.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தி.மு.க.,வில் இணைப்பு

மண்டபம் : மண்டபம் பேரூராட்சி துணை தலைவர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் சேர்ந்தனர். இதன் மூலம் அ.தி.மு.க., வசம் உள்ள தலைவர் பதவி தி.மு.க.,விற்கு வர வாய்ப்புகள் உள்ளன.
மண்டபம் பேரூராட்சியில் தற்போது ஒன்பது அ.தி.மு.க., ஆறு தி.மு.க.,இரண்டு ப.ஜ., ஒரு காங்., கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 16வது வார்டு கவுன்சிலர் நம்புராஜன்(துணை தலைவர்), 13வது வார்டு கவுன்சிலர் ராஜகோபால்(முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் அண்ணன் மகன்), 14வது வார்டு கவுன்சிலர் பார்வதி, இவரது மகன் பாலன்(முன்னாள் கவுன்சிலர்) ஆகியோர் அ.தி.மு.க.,விலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க., மாவட்ட பொருளாளர் அகமது தம்பி, ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர். தற்போது மண்டபம் பேரூராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
மண்டபம் துணை தலைவர் நம்புராஜன் கூறியதாவது: எனது வார்டில் இதுவரை ஒரு பணியும் நடக்கவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்ட படிக்கா�கூட நான் வாங்கவில்லை. இது குறித்து யாரும் என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. இதனால் தி.மு.க.,வில் இணைந்தேன், என்றார்.
மண்டபம் அ.தி.மு.க.,கவுன்சிலர்களை இழுக்க தி.மு.க., வினர் மேலும் முயற்சி செய்து வருகின்றனர். தி.மு.க., கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து தற்போதுள்ள அ.தி.மு.க., தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
Top
* 3.கிராமபுறங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் ரத்து : மாணவர்கள், பொதுமக்கள் அவதி

முதுகுளத்தூர் : பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் பகுதி கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
பரமக்குடியிலிருந்து திருவரங்கம், செம் பொன்குடி வழியாக சிக்கல், தேரிருவேலி உட்பட பகுதிகளுக்கு கிராம புற மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு பஸ்கள் இயக்கபட்டு வந்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கிராம பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் பரமக்குடி, முதுகுளத்தூர், திருவரங்கம் உட்பட பல பகுதிகளிலிருந்து மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் அவதிபட்டு பள்ளிகளிலும், ஆங்காங்கே உள்ள தங்களது நண்பர்கள் வீட்டிலும் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செம் பொன்குடி ஊராட்சி தலைவர் பூம்பாண்டியம்மாள் கூறியதாவது: கடந்த பருவ மழை காலத்திலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி இயக்கப்பட்ட அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் முறையீடு செய்தும் பலனில்லை. ரத்து செய்யப்பட்ட அரசு பஸ்களால் மாணவர்களின் கல்வியும், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவை பொருட்களையும் வாங்கமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வாழும் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள், கிராமபுற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பரமக்குடியிலிருந்து இயக்கப்பட்டு வந்த 13, 14 எண்கள் கொண்ட அரசு பஸ் வழித்தடங்களை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும், என்றார்.
Top
* 4.நிழற்குடை ஆக்கிரமிப்பு ஆட்டோக்களை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு : தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரம் : ""நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள ஆட்டோக் களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு,'' அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் புதுபஸ்ஸ்டாண்டு நிழற்குடையில் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இதற்காக எம்பி., நிதியிலிருந்து மெகா நிழற்குடை கட்டப் பட்டது. இதில், பயணிகளுக்கு பதில் ஆட் டோக்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மார்ச் ஐந்தில் "தினமலர்' செய்தி வெளியிட்டது. அன்றைய தினமே, நிழற்குடையின் பாதியை வலை தடுப்பு மூலம் ஆட்டோக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.
இது குறித்தும் மறுநாள் "தினமலர்' படத்துடன் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து கலெக் டர், அதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்தினார். இதில், "சம்மந்தப்பட்ட நிழற்குடை பயணிகளுக்கு பயனளிக்கும்,' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ""உடனடியாக அங்குள்ள ஆட்டோக் களை அப்புறப்படுத்தி, பயணிகளின் பயன் பாட்டுக்கு முழுமையாக கொண்டுவருமாறு,'' கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: "தினமலர்' செய்தியை தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசித்தேன். பயணிகளுக்கு இந்த நிழற்குடை அவசியம் என் பதை அனைவரும் ஆமோதித்தனர். உடனடியாக அங்குள்ள ஆட்டோக் களை அப்புறப்படுத்தி, பயணிகளுக்கு முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு சம்மந் தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார். பல ஆண்டுகளாக பயணிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி வந்த இந்த தொல்லைக்கு "தினமலர்' செய்தி மூலம் விமோசனம் கிடைத்துள் ளது. கலெக்டரின் இந்த உத்தரவினை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
Top
* 5.துணை கலெக்டர்களாக தாசில்தார்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட் டத்தில் வருவாய்த்துறையில் பதவி உயர்வு காரணமாக தாசில்தார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் பறக்கும் படை தாசில்தாராக இருந்த குணசேகரன் துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று கோவை மாவட்டத்திற்கு சென்றுள் ளார். ராமநாதபுரம் சிவில் சப்ளை தாசில்தார் இந்திரஜித் பறக்கும்படைக்கும், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சேகர் சிவில் சப்ளைக்கும், மண்டபம் முகாம் தாசில் தார் உதயகுமார் ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், மண்டபம் முகாம் துணை தாசில்தார் கணேசன் பதவி உயர்வு பெற்று இதே இடத்தில் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இன்னும் பல தாசில்தார்கள் துணை கலெக்டராக ஒரிரு தினங்களில் பதவி உயர்வு பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.
Top

பொது

* 1.நியமனம்

ராமநாதபுரம் : மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, மண்டபம் ஒன்றிய எம்ஜி.ஆர்., மன்ற தலைவர் ராஜகோபால், பாசறை ஒன்றிய இணை செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் கட்சியின் பலரும் ஜெயசந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Top
* 2.வாகனம் அறிமுகவிழா

ராமநாதபுரம் : டி.வி.எஸ்.,நிறுவனம் இந்தியாவின் முதல் ஆட்டோ கிளச் தொழில் நுட்பத்துடன் தயார் செய்யப்பட்ட 110 சி.சி.,திறன் கொண்ட ஜைவ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அறிமுக விழா ராமநாதபுரம் அன்பு டி.வி.எஸ்.,நிறுவனத்தின் சார்பில் நிர்வாக இயக்குனர் சார்லஸ் தலைமையில்நடந்தது. நிர்வாக மேலாளர் சரவணக்குமார் வரவேற்றார். கனரா வங்கி மேலாளர் ஆவுடையப்பன் முதல் விற்பனையை துவக்கி வைத் தார். உதுமான் அலி பெற் றுக்கொண்டார். ஏற்பாடுகளை டி.வி.எஸ்.,அன்பு நிறுவன ஊழியர்கள் செய்தனர்.
Top

சம்பவம்

* 1.வாகனம் மோதி ஒருவர் பலி

தேவிபட்டினம் : ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ராமமூர்த்தி(45). இவர் ராமநாதபுரத்திலிருந்து ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கிள் நாகபட்டினம் சென்று கொண்டு இருந் தார். (ஹெல்மெட் அணியவில்லை) தேவிபட்டினம் பெருவயல் ஆர்ச் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் பலியானார். இன்ஸ்பெக்டர் ராஜு விபத்து குறித்து விசாரித்து வருகிறார்.
Top
* 2.கலெக்டர் பெயரில் பணம் மோசடி : போலீசார் விசாரணை

திருவாடானை : தொண்டி அருகே இரண்டு பேரிடம் கலெக்டர் என கூறி மோசடியில் ஈடுபட்ட போலி கலெக்டரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (35). இவர் எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த இருவரிடம் கலெக்டர் என கூறி, மினி பஸ்சுக்கு வழித்தட அனுமதி பெற்று தருவதாகவும், மற்றொருவருக்கு நூலகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெற்றார். பணம் கொடுத்தவர்களுக்கு பின்னர்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எஸ்.பி.பட்டினம் போலீசார் கலெக்டர் என கூறி ஏமாற்றிய நபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். பணம் கொடுத்த ஏமாந்தவர்களில் ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் முக்கிய நபராகவும் இருப்பதால் புகார்கொடுக்க தயங்குவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மகேந்திரன் திருவாடானையில் நடந்த பல்வேறு விழாக்களில் பங்கேற்றுள்ளார். கலெக்டர் என்று கூறியதால் பொதுமக்கள் மிகுந்த மரியாதை கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரு நாளிதழில் (தினமலரில் அல்ல ) ""வருந்துகிறோம்'' என்ற விளம்பரத்தில் கோ.மகேந்திரன் இணைஇயக்குனர், புதுடெல்லி என்று விளம்பரத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
Top
* 3.இளைஞர் காங்., நிர்வாகி தேர்தல்: 644பேர் மனு

உச்சிப்புளி : ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட 644 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் சட்டசபை தொகுதிக்கான வேட் புமனு தாக்கல் உச்சிப்புளி சமுதாயக்கூடத்தில் நடந்தது. தேர்தல் அதிகாரி விஸ்வநாத் மனுக்களை பெற்றார். தலைவர் மற்றும் பிரதிநிதி பதவிக்கு போட்டியிட 644 பேர் மனு அளித்தனர். தேர்தல் உச்சிப்புளியில் மார்ச் 11 முதல் 15 வரை நடைபெறுகிறது. இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், வேட்பாளர்கள் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
பரமக்குடி: பரமக்குடி சட்ட சபை தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் இன்று முதல் 12ம் தேதி வரை குரு தியேட்டரில் நடக்கிறது. திருவாடானையில் எட்டு முதல் 11வரை சேதுபதி மகாலிலும், அறந்தாங்கியில் எட்டு மற்றும் ஒன்பதாம் தேதிகளில் டி.என்.எஸ் மகாலிலும் நடக்கிறது, என கட்சியின் தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்தார்.
Top
* 4.கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது

தேவிபட்டினம் : அழகன்குளம் அம்மன் கோயில் குடியிருப்பு தலைவர் கார் மேகம்(48).இவர் தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் சென்று வீடு திரும்பிய போது, ஏழு பேர் கொண்ட கும்பல் , அரிவாளால் வெட்டி தப்பியது.
இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையில் போலீசார் சித்தார் கோட்டை பஸ்ஸ்டாப் பகுதியில் ரோந்து வந்த போது, அங்கு நின்ற கார் டிரைவர் பாம்பூரணி மதி(ராமநாதபுரம்), அழகன்குளம் தேவர் குடியிருப்பு பால முருகன் ஆகியோர்களை கைது செய்தனர்.தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Top
* 5.வீடு சூறை: 20 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தெற்கு தெருவில் கிடாத்திருக்கையை சேர்ந்த மலைராஜ் என்பவரது வீட்டில் முதுகுளத்தூரை சேர்ந்த அங்கமுத்து (60) வசித்து வருகிறார். இவரை வீட்டை காலி செய்ய கூறியதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மலைராஜ் 20 பேருடன் அங்கமுத்துவின் வீட்டுபொருட்களை சூறையாடினர். முதுகுளத்தார் போலீசார் மலைராஜ் உட்பட 20 பேரை தேடி வருகின்றனர்.
Top
* 6.ம.ம.க.,வினர் 350 பேர் கைது

ராமநாதபுரம் : மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடை மறியல் போராட்டம் நேற்று மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. ராமநாதபுரம் பாரதிநகரில் நடந்த ஆர்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ஏ.எஸ்.எம். ஜூனைத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாதிக், தஸ்பிர், சித்திக், கபீர், சாதிக், ஜபருல்லா பேசினர். ஏராளமானார் பங்கேற்றனர். அதன் பின் மறியலுக்கு முயன்ற அக்கட்சியினர் 350 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Top
* 7.டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்பனை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை பார்களில் அரசு அறிவித்துள்ள விற்பனை நேரம் தவிர அதிகாலை, நள்ளிரவு மற்றும் விடுமுறை நாட்களிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. நேற்று அதிகாலையில் ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன் ராமேஸ்வரம் மேலத்தெருவிலுள்ள டாஸ்மாக் கடையின் பாரில் ஒரு நபரிடம் பணம் கொடுத்து பிராந்தி வாங்க அனுப்பினார்.
பாருக்குள் சென்றவரும் பணத்தை கொடுத்து குவாட்டர் பிராந்தி பாட்டில் வாங்கி வந்ததை தொடர்ந்து பாருக்குள் சென்று தாசில்தார் சோதனையிட்டார். பாரில் ஒரு அட்டைப் பெட்டியில் இருந்த பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. பாரில் இருந்த விற்பனையாளர்கள் ஓடிவிட்டனர்.
Top
* 8.வேலை நிறுத்தம்

உச்சிப்புளி : உச்சிப்புளி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆட்டோ சங்கத்தினர், பெட்ரோல்.டீசல் விலை உயர்வை வாபஸ்பெற வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு.,மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில்,உச்சிப்புளி தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

No comments:

Post a Comment