Sunday, March 7, 2010

திருவள்ளூர்

* 1.மின் கம்பம் மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து: 12 பேர் காயம்

பள்ளிப்பட்டு : அளவுக்கு அதிகமாக பயணிகளுடன் சென்ற ஷேர் ஆட்டோ, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த சிந்தலப்பட்டடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் ரஜினி(19). இவர், நகரியில் இருந்து ஷேர் ஆட்டோவில் (ஏபி 03 ஒய் 1536) 12 பயணிகளை ஏற்றிக் கொண்டு பொதட்டூர் பேட்டைக்கு சென்றார். பாண்டறவேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது நிலைதடுமாறி, பஸ்சுக்காக காத்திருந்த ஏழுமலை (30) என்பவர் மீது மோதி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், ஏகாம்பரகுப்பம் கிராமத்தை சேர்ந்த துர்கா(27), ஜானகி(51), சாலம்மாள்(32) ஆகிய மூவரும் பலத்தகாயம் அடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்துக்குள்ளான இந்த ஷேர் ஆட்டோவிற்கு பெர்மிட் இல்லை. டிரைவர் ஏழுமலைக்கு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பேட்ச் பெறவில்லை. இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Top

பொது

* 1.நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் களின் இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்தது.
நேற்று முன்தினம் முகாமின் நிறைவு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மூர்த்தி முன்னிலை வகித் தார். ஊராட்சி மன்றத் தலைவர் விஜயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ., விஜயகுமார் கலந்து கொண்டு மாணவர் களை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.
Top
* 2.இலவச மருத்துவ முகாம்

திருத்தணி : திருத்தணி அடுத்த வியாசபுரம் ஊராட்சியில், ஊராட்சித் தலைவர் லட்சுமி தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடந் தது. துணைத் தலைவர் விமலா வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் வனஜா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஏழுமலை முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் அருண் தலைமையில் மருத்துவர்கள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. இதில், 800க்கும் மேற் பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
Top

சம்பவம்

* 1.18 மூட்டை ரேஷன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பொன்னேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாபுரம் பஸ் நிலையம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ (டி.என் 20 எஸ் 7396) ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் தலா 40 கிலோ எடை கொண்ட 18 மூட்டை ரேஷன் அரிசியை அனுமதியின்றி கடத்திச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவரான தடப்பெரும்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த மூர்த்தி மகன் பாலு(28) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன் படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment