* 1.போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிய மறுப்பு : ஐகோர்ட் உதவியை நாடுவோர் அதிகரிப்பு
குஜிலியம்பாறை : போலீஸ், அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையை நாடி நிவாரணம் பெறும் நிலை அதிகரித்து வருகிறது.
மதுரையில் ஐகோர்ட் கிளை துவக்கப்பட்ட பிறகு, போலீஸ்,அரசு அதிகாரிகளால் பாதிக்கப்படும் தென் மாவட்ட மக்கள், ஐகோர்ட் கிளையில் எளிதில் மனுதாக்கல் செய்து நிராகரிக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண துவங்கி விட்டனர்.இதனால் போலீஸ்,அரசு அதிகாரிகளிடையே ஒருவித கடமை பற்றிய கலக்கம் காணப்படுகிறது. சமீப காலமாக போலீஸ் ஸ்டேஷன்களில்,விபத்து, கொலை,பெரிய அளவிலான கொள்ளைகளை தவிர, மற்ற புகார்களை வழக்காக பதிவு செய்வதில்லை என்ற நிலை நீடிக்கிறது.
மதுரையில் ஐகோர்ட் கிளை துவங்கிய நிலையில் இந்த நிலை யை, பாதிக்கப்பட்ட மக்கள் மாற்றத் துவங்கியுள்ளனர். வேடசந்தூர் தாலுகா பகுதியில் மட்டும் சமீப காலத்தில், பத்துக்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்கு மக்கள் ஐகோர்ட் டை நாடி அதிகாரிகளுக்கு குட்டு வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு வேடசந்தூர் அருகேயுள்ள சத்தியநாதபுரத்தை சேர்ந்த ஒருவரின், இரண்டு மாடுகள் காணாமல் போனது.வேடசந்தூர் போலீசில் புகார் கொடுத்தும் வழக்கு பதிய மறுத்ததால்,பாதிக்கப்பட்டவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை மாடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
குஜிலியம்பாறையைச் சேர்ந்த ஆசிரியர் முத்துச்சாமி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.ஆசிரியரின் அப்பா பெருமாள் மதுரை ஐகோர்ட்டில்,மனு தாக்கல் செய்ததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. குஜிலியம்பாறையை சேர்ந்த பெண் ஒருவர்,வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். வழக்கு பதிவு மறுக்கப்பட்டதால் மதுரை ஐகோர்ட் உத்தரவுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குஜிலியம்பாறையை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் தன்னிடம் டூவீலரை பறித்த நபர்கள் மீது குஜிலியம்பாறை போலீசில் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.வழக்கு பதிவு, விசாரணை இல்லாததால், ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்து, கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. குஜிலியம்பாறையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை, ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்ற புகாரில் நடவடிக்கை இல்லாததால், பெண்ணின் அப்பா மதுரை ஐகோர்ட் டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
குஜிலியம்பாறை ஒன்றிய நிர்வாகத்தில் சத்திரப்பட்டியில் நெற்களம் அமைக்கும் பிரச்னையிலும், கூம்பூரில் பெரிய குளத்தில் மீன் வளர்ப்பு சம்பந்தமாகவும் பொது மக்கள் அதிகாரிகளுக்கு எதிராக மதுரை ஐகோர் ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வாறாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்படும் மக்கள்,மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதால் இவர்களிடையே ஒருவித கலக்கம் ஏற் பட்டுள்ளது.
Top
* 2.லாரியை மறித்து ரூ.4.5 லட்சம் கொள்ளை மூன்று பேர் கைது: இரண்டு லட்சம் பறிமுதல்
பழநி : பழநி அருகே லாரியை மறித்து ரூ.4.5 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.ஒரு பெண் உட்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் இருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு கடந்த மாதம் 27ம் தேதி லாரி ஒன்று பழநி-திண்டுக்கல் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தர்மராஜ்(45) ஓட்டி வந்தார்.தனபால் என்ற கிளீனரும் லாரியில் இருந்துள்ளார்.ஆயக்குடி மூகாம்பிகை கோயில் அருகே அதிகாலை 3 மணிக்கு லாரி வந்த போது பெண் ஒருவர் ரோட்டில் லாரியை மறித்து நிறுத்தியுள்ளார்.லாரியை நிறுத்திய போது சிலர் அதில் ஏறி டிரைவர் வைத்திருந்த ரூ.4.5 லட்சத்தை கொள்ளையடித்தனர்.இது தொடர்பாக ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பழநி டி.எஸ்.பி.,பாண்டியராஜன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடந்தது.பழநி-திண்டுக்கல் ரோட்டில் மஞ்சநாயக்கன்பட்டி பிரிவு அருகே நேற்று காலை மேற்கண்ட கொள்ளையில் தொடர்புடைய மூவர் பிடிபட்டனர்.விசாரணையில் நத்தம் கோபால்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்ற மண்டையன்(40). இவரது அண்ணன் நடராஜன்(60).மற்றொரு கூட்டாளியான சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்த பாண்டியன்(60) என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வாடிப்பட்டி,திருச்சி,வையம்பட்டி, பழநி தாலுகா உள்ளிட்ட ஸ்டேஷன்களில் 7 வழக்குகள் உள்ளன.கடந்த 8 ஆண்டுகளாக போலீசாரால் இவர்கள் தேடப்பட்டவர்கள்.இவர்கள் கொள்ளை அடித்து விட்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் தோட்டங்களுக்கு சென்று கூடை பின்னுவதை தொழிலாக கொண்டவர்கள். இந்த கொள்ளை வழக்கில் ஒரு பெண் உட்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Top
பொது
* 1.மல்லிகைப்பாறையில் மருத்துவ முகாம்
ஒட்டன்சத்திரம் : முதல்வர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மல்லிகைப்பாறையில் நடந்தது.
பெரியூர் ஊராட்சி தலைவர் கணேசன் தலைமை வகித்தார். டாக்டர் ராஜேந் திரன் வரவேற்றார். கிறிஸ் டியன் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன், ரீடு தொண்டு நிறுவன மருத்துவ அலுவலர் ஜக்கரியா முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். பாச்சலூர், பாறைப்பட்டி, பெரியூர், நடனக் கால்வாய், கே.சி. பட்டி பள்ளத்துக் கால் வாய், கவுஞ்சுக்கொம்பு, சிறுவாட்டுக்காடு, புலிக் குத்திக்காடு, கடைசிக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்றனர். தொண்டு நிறுவன ஆலோசகர் கிறிஸ்டியன் ராஜ், வேல்டுவிஷன் சமூக வளர்ச்சி அலுவலர் தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர் பிரேமா நன்றி கூறினார்.
Top
* 2.கிரிக்கெட் இறுதிப்போட்டியில் திண்டுக்கல், மதுரை அணி
திண்டுக்கல் : மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு, திண்டுக்கல், மதுரை அணிகள் தகுதி பெற்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், எஸ்.எஸ். ராஜன் கோப்பைக்கான போட்டி நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த அரையிறுதியில், திண்டுக் கல், திருச்சி அணிகள் விளையாடின. இதில் திண்டுக்கல் மாவட்ட அணி, திருச்சியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோயம்புத்தூரில் நடந்த மற்றொரு அரையிறுதியில், மதுரை அணி, கோயம்புத்தூர் அணியை தோற்கடித்தது. திண்டுக்கல், மதுரை அணிகள், இறுதிப் போட் டிக்கு தகுதி பெற்றன. மார்ச் 10ல் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லூரியில், இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
Top
சம்பவம்
* 1.பெண்களிடம் வழிப்பறி தேனி வாலிபர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் எருதப்பன் பட்டியைச் சேர்ந்த வெள் ளைத்தாய், இந்திராணி ஆகியோர், மாரியம்மன் கோயிலுக்கு ஆர்.எஸ்., ரோடு வழியே நடந்து சென்றனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர், இவர்களை வழிமறித்து இருவரிடமும் இருந்து மொத்தம் ஆறரை பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்டார். மேலும் மேற்கு ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி, தனலெட்சுமி ஆகியோரிடம் இருந்து எட்டரை பவுன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென் றார். இது தொடர்பாக விசாரித்த நகர் வடக்கு போலீசார், தேனி மாவட்டம் வடகரையைச் சேர்ந்த குணசேகரை(24) கைது செய்தனர். இவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Top
* 2.பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே சொத்துப்பிரச்னை காரணமாக பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள் ளார்.
சாணார்பட்டி அருகேயுள்ள ராஜாக்காப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்.இவர் மனைவி பிச்சையம்மாளுடன்(65) தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கும், இவர்களது பேரன்களுக்குமிடையே சொத்து தகராறு இருந்துள் ளது. நேற்று மாலை 4 மணியளவில் பிச்சையம்மாள் தலையில் யாரோ கல்லை போட்டு கொலை செய் துள்ளனர். தகவல் அறிந்த சாணார் பட்டி போலீசார் பிச்சையம்மாள் உடலை கைப் பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Top
* 3.பாலத்தில் லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற லாரிகள்,கார்,டூவீலர் மோதிக் கொண்டதில் தாராபுரம் ரோட்டில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் தங்கச்சியம் மாபட்டி அருகே நங் காஞ்சி ஆற்று பாலம் உள்ளது. நேற்று மதியம் 1.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து பெருந்துறைக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி இப்பாலத்தை கடக்க முயன்றது. அப் போது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சி செய்த போது அந்த லாரியுடன் மோதியதோடு எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் (ஹீரோ ஹோண் டா) மோதி, இதனை அடுத்து வந்த காரின் மீதும் மோதியது.
மோதிய வேகத்தில் காலியாக வந்த லாரி பாலத் தின் குறுக்கே திரும்பி நின்று விட்டது.இவ்விபத் தில் இருசக்கரவாகனத்தில் வந்த சிவகங்கை மாவட் டம் அய்யனூத்தைச் சேர்ந்த சேகர் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) பலத்த காயமடைந்தார். விபத்திற்குள்ளான இரண்டு லாரிகளும் பாலத் தை மறித்து நின்றதால் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. பஸ்கள் காவேரியம்மாபட்டி, கொசவபட்டி வழியாக திருப்பி விடப் பட்டன.
Top
* 4.அரசியல் கட்சியினரின் கட்-அவுட் : பழநியில் வாகன விபத்து அபாயம்
பழநி : பழநியில் ரோட்டை மறித்து வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்களால் விபத்து அபாயம் உள்ளது.
பழநியில் கட்சி வேறுபாடின்றி திண்டுக்கல் ரோடு, பஸ்ஸ்டாண்ட் வெளிப்புறம், தாலுகா அலுவலக ரோடு, காந்திரோடு, கொடைக்கானல் ரோடு ஆகிய பகுதிகளில் ஏராளமான கட்-அவுட்களும், பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்பவர்களின் கவனத்தை மாற்றுவதால் விபத்து அபாயம் உள்ளது. நிகழ்ச்சிக்கு முன் 3 நாட்கள், பின் 2 நாட்கள் கட்-அவுட் வைத்து கொள்ளலாம் என்ற விதிமுறையை அரசியல் கட்சிகள் கடைபிடிப்பதில்லை. அகற்றுவதற்கு அதிகாரிகளும் முன்வருவதில்லை. விபத்திற்கு முன் இவற்றை அகற்ற நடவடிக்கை வேண்டும். ஆர்.டி.ஓ., நாராயணன் கூறுகையில்,"நகரில் உள்ள பிளக்ஸ் போர்டுகளும், கட்-அவுட்களும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
Top
* 5.மறியல்: 73 பேர் கைது
திண்டுக்கல் : மனித நேய மக்கள் கட்சி சார்பில், நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல்லில் போராட்டம் நடந்தது.
மாநில கொள்கை விள க்க பேச்சாளர் யூசுப் தலை மை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்சாரி, ஒருங்கிணைப்பாளர் ஹபீபுல்லா முன் னிலை வகித்தனர். போராட்டத்தை தொடர்ந்து திண்டுக்கல் யானைத் தெப்பம் பகுதியில் ரோடு மறியலில் செய்ய முயன்றனர். மறியலில் ஈடுபட முயன்றதாக, 73 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment