Sunday, March 7, 2010

திருநெல்வேலி

* 1.ஏர்வாடியில் த.மு.மு.க.,திடீர் மறியல் போராட்டம்

ஏர்வாடி:ஏர்வாடியில் த.மு.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.ஏர்வாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் தெற்கே கைகாட்டி வரையுள்ள மெயின்ரோடு மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 1000 மீட்டர் தொலைவில் உள்ள மெயின்ரோட்டில் 700 மீட்டருக்கு இரண்டடுக்கு தார்ரோடும், 300 மீட்டருக்கு ஒரடுக்கு தார்ரோடும் போட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.


அதன்படி ஏர்வாடி மெயின்ரோட்டில் தார்ரோடு போடும் பணி நடந்தது. இந்நிலையில் மெயின்ரோடு முழுவதும் இரண்டடுக்கு தார்ரோடு போடவேண்டும் என்று ஏர்வாடி த.மு.மு.க. தலைவர் பக்ரூதீன், செயலாளர் பீர், துணை செயலாளர் ஜமால்பாரூக், மனிதநேய மக்கள் கட்சி களக்காடு ஒன்றிய செயலாளர் முகைதீன், ஏர்வாடி நகர செயலாளர் மாகின், மருத்துவ அணி செயலாளர் நியாஸ் அகமது உட்பட பலர் தார்ரோடு போடும் பணியை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடனே சம்பவ இடத்திற்கு நான்குநேரி டி.எஸ்.பி. உதயகுமார், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிக்கந்தர் ஆகியோர் வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது த.மு.மு.க. தலைவர் பக்ரூதீன் அதிகாரிகளிடம், ""ஏர்வாடி மெயின் ரோடு முழுவதும் இரண்டடுக்கு தார்ரோடு போட வேண்டும்'' என்றார்.


அதற்கு அதிகாரிகள், ஏற்கனவே உள்ள எஸ்டிமேட் அளவுப்படி தற்போது 300 மீட்டருக்கு ஒரடுக்கு தார்ரோடு போடப்படும். மீண்டும் எஸ்டிமேட் எடுத்து 4 மாத காலத்திற்குள் இரண்டடுக்கு தார்ரோடு போடப்படும்'' என்று தெரிவித்தனர். அதற்கு போராட்ட குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உடனே சேர்த்து போடவேண்டும் என்று மறியல் செய்தனர்.உடனே நெடுஞ்சாலைதுறை உயரதிகாரிகளிடம் உதவி கோட்ட பொறியாளர் சிக்கந்தர் பேசி முழுவதும் இரண்டடுக்கு தார்ரோடு போடப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் ஏர்வாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
Top
* 2.விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை பிரசாரம்

தென்காசி:நெல்லையில் இன்று (8ம் தேதி) நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் உரிமை மாநில மாநாடு தொடர்பான தெருமுனை பிரசாரம் மாவட்ட அளவில் நேற்று நடந்தது.நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் உழைக்கும் மகளிர் உரிமை மாநில மாநாடு இன்று (8ம் தேதி) நடக்கிறது. மாநாட்டில் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. சிறப்புரையாற்றுகிறார். மாநாடு குறித்து நேற்று மாவட்ட அளவிலான தெருமுனை பிரசாரம் நடந்தது. தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த பிரசாரத்திற்கு மாநில துணை செயலாளர் சுடர்மொழி தலைமை வகித்தார்.மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சின்னத்தாய், மதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் சுடர்மதி, நெல்லை மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆசைத்தம்பி, செந்தில்குமார், களப்பணியாளர்கள் முகாம் செயலாளர் சங்கர், நகர துணை செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 3.பிற கட்சியினர்தி.மு.க.வில் இணைந்தனர்

தென்காசி:மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தென்காசி பகுதியை சேர்ந்த பிற கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.தென்காசி ஒன்றிய முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், குற்றாலநாதர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினருமான கிருஷ்ணன் மாவட்ட தி.மு.க. செயலாளரும், தென்காசி எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமிபாண்டியன் முன்னிலையில் 300 பேர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட பொருளாளர் சேக்தாவூத், ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரை (எ) ராமையா, மாவட்ட கவுன்சிலர் இசக்கிபாண்டியன், இலஞ்சி டவுன் பஞ்.,தி.மு.க. செயலாளர் முத்தையா, மாவட்ட பிரதிநிதி சண்முகநாதன், வல்லம் முத்துமீரான், வல்லம் பஞ்., தலைவர் சேக்அப்துல்லா, ராஜ்பாய், குற்றாலம் சேகர், தென்காசி நகராட்சி தலைவர் கோமதிநாயகம், தென்காசி நகர தி.மு.க. செயலாளர் நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Top
* 4.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 22ம் தேதி ஆரம்பம்:மே முதல் வாரத்தில் 'ரிசல்ட்'

திருநெல்வேலி:தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி முதல் ஆரம்பமானது. தொடர்ந்து தேர்வுகள் நடந்து வருகிறது. வரும் 22ம் தேதி வரை இத்தேர்வுகள் நடக்கிறது.


இத்தேர்வுகளை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தும் வகையில் கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பிளஸ் 2 தேர்வுகள் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் வீதம் 60க்கும் மேற்பட்ட மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் 20 விடைத்தாள்கள், மதியம் 15 விடைத்தாள்கள் ஒவ்வொரு ஆசிரிய, ஆசிரியரும் திருத்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது.விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விடைத்தாள்களை மொழிப் பாடங்கள் தனியாவும், பிற பாடங்கள் தனியாகவும் பிரிக்கப்படுகிறது.இதில் முக்கிய பாடங்களுக்கு "டம்மி' எண்கள் பதிவு செய்யப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. முதலில் முதன்மை கண்காணிப்பாளர்களும், தொடர்ந்து ஆசிரிய, ஆசிரியைகளும் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் மாதம் 2வது வாரத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வரும் மே மாதம் முதல் வாரத்திற்குள் வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.


நெல்லை மாவட்டம்:நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 29 ஆயிரத்து 189 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பாளை ஜெயந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளை சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்படுகிறது.


இதில் பாளை ஜெயந்திரா பள்ளியில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களும், பாளை சின்மயா பள்ளியில் பிற முக்கிய பாடங்களும் திருத்தப்படுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து விரைவில் விடைத்தாள்கள் கொண்டு வரப்பட உள்ளன. முதன்மை கல்வி அலுவலர் சசிகலா, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஜெசோலைட் செல்வி இம்மையங்களில் பொறுப்பு அலுவலர்களாக செயல்படுகின்றனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Top
* 5.இலவச பஸ் பாஸ் புறக்கணித்தால்டிரைவர், கண்டக்டர்கள் 'சஸ்பெண்ட்':போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

திருநெல்வேலி:இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை புறக்கணித்தால் டிரைவர்கள், கண்டக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் 365 நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 270க்கும் மேற்பட்ட நகர பஸ்களில் இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த கல்வி ஆண்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 622 பேருக்கு இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் புறக்கணிப்பதாக புகார் கூறப்படுகிறது. மேலும், இப்பிரச்னையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. போதுமான பஸ் வசதி இல்லாத சூழ்நிலையில் மாணவ, மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் பஸ் பாஸ் மாணவ, மாணவிகளை புறக்கணிக்க கூடாது என்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ""இலவச பஸ் பாசில் பயணிக்கும் மாணவ, மாணவிகளை டிரைவர், கண்டக்டர் புறக்கணிப்பதாக இனி புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பஸ் ஊழியர்களால் இலவச பஸ் பாஸ் மாணவ, மாணவிகள் புறக்கணிக்கப்படும் போது விபத்து ஏற்பட்டால் சம்பந்தபட்டவர்கள் 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Top
* 6.நான்குநேரியில் திமுக.,பொதுக்கூட்டம்

நான்குநேரி:நான்குநேரியில் ஒன்றிய தி.மு.க.சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.நான்குநேரி ஒன்றிய தி.மு.க.,சார்பில் தி.மு.க.அரசின் சாதனை விளக்கம், ஸ்டாலின் பிறந்தநாள் விழா, செம்மொழி மாநாடு விளக்க கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் வானமாமலை, சிவக்குமார், முத்துபாண்டி, ஆறுமுகம், கணபதிதேவர் முன்னிலை வகித்தனர்.பட்டர்புரம் முத்துப்பாண்டி வரவேற்றார். தலைமை பேச்சாளர் முரளி, கவுன்சிலர் கானாமுத்து, பாலசுந்தர், டவுன் பஞ்., தலைவர் பால்சங்கரன், சூரியகுமார், வெள்ளபாண்டியன், ராமச்சந்திரன், கணபதி, சேகர், முருகன், நாராயணன் உட்பட பலர் பேசினர்.மறுகை பஞ்., துணைத் தலைவர் சங்கரபாண்டியன் நன்றி கூறினார்.




Top

பொது

* 1.ஏர்வாடியில் தாம்போதி பாலம் கட்ட பூமிபூஜை

ஏர்வாடி:ஏர்வாடியில் நம்பியாற்றின் குறுக்கே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாம்போதி பாலம் கட்ட பூமிபூஜை நடந்தது.ஏர்வாடி உப்பு வடக்கு தெரு, 6வது தெருவையும் இணைக்க நம்பியாற்றின் குறுக்கே நமக்குநாமே திட்டத்தின் கீழ் 25 லட்ச ரூபாய் மதிப்பில் தாம்போதி பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பாலம் கட்ட பூமிபூஜை நடந்தது. ஏர்வாடி வளர்ச்சி மன்ற தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். டி.வி.எஸ்.சீனிவாசன் அறக்கட்டளை நிர்வாகி பொன்வைத்தியநாதன், மீராசாகிபு, கஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.வளர்ச்சி மன்ற செயலாளர் அண்ணாவி உதுமான் வரவேற்றார். தொழிலதிபர் முஸ்தபா பூமிபூஜை செய்தார். வக்கீல் காதர், மீராசாகிபு, ஆனந்தநாராயணன், சிந்தாகான், அப்பாஸ், செய்யது, இக்பால், முன்னாள் டவுன் பஞ்., தலைவி அகமது அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வளர்ச்சி மன்ற பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Top
* 2.களக்காடு கோழிக்கால்வாயில் இருந்து சிற்றாறு ஓடைக்கு தனிகால்வாய் கோரி மனு

களக்காடு:களக்காடு கோழிக்கால்வாயிலிருந்து சிற்றாறு ஓடைக்கு தனிகால்வாய் வெட்டி தென்வீதிகாலில் உள்ள 16 குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மனு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து யூனியன் சேர்மன் தமிழ்செல்வன், டவுன் பஞ்., தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-களக்காடு சிதம்பரபுரம் ஊருக்கு மேல்புறம் மலையடிவாரத்தில் கோழிக்கால்வாய் உள்ளது.


இக்காலில் ஆண்டுதோறும் தண்ணீர் வரும். இக்கால்வாயிலிருந்து சிதம்பரபுரம் ஊருக்கு வடபுறம் உள்ள கால்வாய் மூலம் பல குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது கோழிக்காலிலிருந்து பாரஸ்ட் பவுண்டரி ஒட்டி தனிகால்வாய் வெட்டி சிற்றாறு ஓடையில் விழச்செய்து அங்கிருந்து பித்தன்மேட்டுகலுங்கு வழியாக தென்வீதிகால் மூலம் பறையன்குளம், சவளைக்காரன்குளம் உட்பட 16 குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்படி செய்தால் கோழிக்காலிலிருந்து தண்ணீர் தலைகீழாக பாயும். மேலும் பல இடங்களில் திருட்டுதனமாக தண்ணீர் எடுப்பது தடைபடும். இக்கால்வாய் வெட்டினால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் பயன்பெறும். மேலும் தரிசாக கிடக்கும் 3 ஆயிரம் புஞ்சை நிலமும் பயன்பெறும்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து தனிகால்வாய் வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியுள்ளனர்.
Top
* 3.அடவிநயினார் அணை தூர்வார கோரிக்கை

தென்காசி:செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கட்டை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடகரை நகர காங்.,தலைவர் ராமர் எம்.பி., ராமசுப்புவை சந்திந்து மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-அடவிநயினார் அணைக்கட்டு தூர்வாரப்படாமல் இருப்பதால் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இந்த அணைக்கட்டினை தூர்வார வேண்டும். மேலும் வடகரை பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கடன்களை அதிக சிரமமின்றி வழங்க பாங்குகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.வடகரை காங்., நிர்வாகிகள் ராமையா, சங்கரன், சங்கரநாராயணன், ராமர், அப்துல்காதர் உடனிருந்தனர்.




Top
* 4.அண்ணா பல்கலை.,இன்ஜி.கல்லூரிகள் விளையாட்டு போட்டி:நெல்லை அரசு இன்ஜி.கல்லூரி சாம்பியன்

திருநெல்வேலி:நெல்லை அண்ணா பல்கலை.,யில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையில் நடந்த போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி அணிக்கு துணை வேந்தர் காளியப்பன் கேடயம் வழங்கினார்.நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 76 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 2ம் தேதி அரசு இன்ஜி.,கல்லூரி மைதானத்தில் துவங்கியது. கபடி, வாலிபால், பென்சிங்,


நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான இறுதிப்போட்டிகள் நடந்தன.பென்சிங் போட்டியில் நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி முதலிடத்தை பிடித்தது. அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுதாம்பிகா கல்லூரி இரண்டாம் இடத்தையும், மேலத்திடியூர் பி.எஸ்.என்.,கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.வாலிபால் போட்டியில் மேலத்திடியூர் பி.எஸ்.என்.,டெக்னாலஜி கல்லூரி முதலிடத்தையும், பி.எஸ்.என்.,இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் இடத்தையும், ராஜாஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. பூப்பந்து போட்டியில் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி முதலிடத்தையும், சிவகாசி மெப்கோ கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.கபாடி போட்டியில் பி.எஸ்.என்.,டெக்னாலஜி கல்லூரி முதலிடத்தையும், அரசு இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் நூரூல் இஸ்லாம் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.


கூடைப்பந்து போட்டியில் மதுரை சேது இன்ஜினியரிங் கல்லூரி முதலிடத்தையும், நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் பொன் ஹெப்சீலி கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் வெற்றிபெற்ற கல்லூரி அணிகளுக்கு நெல்லை அண்ணா பல்கலை.,துணைவேந்தர் காளியப்பன் தலைமை வகித்து, கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் தேவதாஸ் செய்தார்.ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி தட்டிச்சென்றது.
Top
* 5.பதவி உயர்வு வழங்க நடவடிக்கை வேண்டும்:சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி:சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த சத்துணவு பணியாளர் ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏசையா குருபாதம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக என்.ஜி.ஓ யூனியன் மாவட்ட தலைவர் துளசிராமன் கலந்து கொண்டார். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு, செலவு அறிக்கையை வாசித்தார்.அரசு துறைகளில் காலி பணியிடங்களில் இளநிலை உதவியாளர் பணி அல்லது மேற்பார்வையாளர் நிலையில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின்னர் புதிய நியமனம் செய்யப்ட வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு தயாரிப்பு மானியம், சத்துணவு பொருட்களுக்கான மானியத்தையும் உயர்த்த வேண்டும்.


தனியார் பள்ளிகளுக்கும் சத்துணவு தளவாட பொருட்கள் வழங்க வேண்டும். மாறுதல் கோரிய பணியாளர்களுக்கு மாறுதல் வழங்கிய பின்னர் புதிய நியமனங்கள் செய்ய வேண்டும். சமையலர் பணியிடம் காலியிடம் ஏற்படும் போது தகுதியான உதவியாளர்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் நிர்வாகிகள் அருணாசலம், குமாரசாமி பாண்டியராஜன், சின்னக்காளை, இளங்கோ, வில்லியம்ஸ், சுவாமிதாஸ், சீனிபால்ராஜ், தேவசகாயம், ராஜ் கோட்டூர், சப்பாணி, குளத்தூரன், பாண்டியராஜ், மைக்கேல் தெரசா, எலிசா கனகராஜ், கிருஷ்ண பிள்ளை உட்பட பலர் பேசினர்.மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
Top
* 6.நெல்லை பாளையஞ் சாலைக்குமார சுவாமிகோயிலில் 1008 சங்காபிஷேக பூஜை

திருநெல்வேலி:நெல்லை பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக பூஜைகள் நடந்தது.நெல்லை பாளையஞ் சாலைக்குமார சுவாமி பக்தர்கள் குழு சார்பில் மாதந்தோறும் 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான சங்காபிஷேக பூஜைகள் நேற்று நடந்தது. காலையில் கணபதி ஹோமம், ஸ்கந்த ஹோமம், அபிஷேக அலங்கார தீபாராதனை, சண்முகர் அர்ச்சனை நடந்தது. மாலையில் சாயரட்சை பூஜையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.பூஜைகளை சாலைக்குமார சுவாமி பக்தர்கள் குழு செய்திருந்தது.







Top
* 7.திசையன்விளையில் 6 ஏட்டுகள் எஸ்.ஐ.யாக பதவி உயர்வு

திசையன்விளை:திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 6 ஏட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி.ஆஸ்ராகர்க் ஆகியோரின் உத்தரவின் பேரில், திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த சுயம்பு, சொக்கலிங்கம், ஆல்பர்ட் துரைசிங், ஜேம்ஸ், சாம்பிரகாசம், திவான் முகைதீன் ஆகிய 6 பேரும் தனி உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இவர்களை திசையன்விளை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அப்பாசாமி, எஸ்.ஐ.கள் ஆறுமுகம், பிரேமா மற்றும் போலீசார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.




Top
* 8.சி.என்.கிராமத்தில் ராதை-கிருஷ்ணன்கல்யாண மஹோத்ஸவம் கோலாகலம்

திருநெல்வேலி:நெல்லை சி.என்.கிராமத்தில் ராதை-கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவம் கோலாகலமாக நடந்தது.நெல்லை சி.என்.கிராமத்தில் ஆண்டுதோறும் ராதை-கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராதை-கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவம் நேற்று முன்தினம் துவங்கியது. அஷ்டபதி பஜனை, தீப பிரதட்சணம், சிறப்பு பஜனை நடந்தது. நேற்று காலை ராதை-கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு உஞ்சவிருத்தி பஜனை, ராதை-கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம், மாங்கல்ய தாரணம், சமபந்தி போஜனம் நடந்தது.திருக்கல்யாண வைபவத்தை நாகர்கோவில் கணபதிராமன் குழுவினர் நடத்தினர். ஏற்பாடுகளை நடராஜன், ஹரிஹரன், வெங்கடேஸ்வரன், சிவக்குமார், பத்மநாபன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
Top
* 9.நெல்லை கேலக்ஸி ஆஸ்பத்திரியில்இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

திருநெல்வேலி:நெல்லை கேலக்ஸி ஆஸ்பத்திரியில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது.நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோட்டிலுள்ள கேலக்ஸி ஆஸ்பத்திரியில் ஏ.ஜி.டிரஸ்ட் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஆவுடையப்பன், நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை, இலவச மருந்துகள், ரத்த அழுத்தம், சிறுநீர் வேக பரிசோதனை நடந்தது.இதில் கேலக்ஸி பி.ஆர்.ஓ., கணேசன், ஸ்ரீராம், உதவியாளர் கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Top
* 10.பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள்சமுதாய குடும்ப விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி:நெல்லை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் சமுதாய குடும்ப விழா கொண்டாடப்பட்டது.நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நெல்லை பாரத் பெட்ரோலிய நிறுவனத்திலிருந்து பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 60 கனரக வாகனங்கள் இயங்கிவருகின்றன. இதில் பணியாற்றும் லாரி டிரைவர்கள், கிளீனர்கள், பணியாளர்கள் உட்பட 150 பேர் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினரை ஆண்டுதோறும் ஒரே இடத்திற்கு அழைத்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கவுரவித்து வருகிறது.

இதுதவிர மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டு வருகிறது.புதுபஸ்ஸ்டாண்டு அருகேயுள்ள கே.ஆர்.ஆர்.மண்டபத்தில் நேற்று நடந்த சமுதாய குடும்ப விழாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டிய டிரைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றிபெற்ற பாரத் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு பரிசினை நெல்லை ஆர்.டி.ஓ., தமிழ்செல்வி வழங்கினார். இதில் பாரத் பெட்ரோலியம் நிறுவன டெப்போ மேலாளர் டி.என்.ஸ்ரீதர், டெரிட்டரி மேலாளர் வேம்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்னிசை கச்சேரியும், விருந்தும் நடந்தது.
Top
* 11.நெல்லை கேலக்ஸி ஆஸ்பத்திரியில்இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

திருநெல்வேலி:நெல்லை கேலக்ஸி ஆஸ்பத்திரியில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது.நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோட்டிலுள்ள கேலக்ஸி ஆஸ்பத்திரியில் ஏ.ஜி.டிரஸ்ட் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஆவுடையப்பன், நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை, இலவச மருந்துகள், ரத்த அழுத்தம், சிறுநீர் வேக பரிசோதனை நடந்தது.இதில் கேலக்ஸி பி.ஆர்.ஓ., கணேசன், ஸ்ரீராம், உதவியாளர் கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Top
* 12.சிவகிரி பள்ளியில் இலவசகண் பரிசோதனை முகாம்

சிவகிரி:சிவகிரி கமிட்டி நாடார் உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.சிவகிரி கமிட்டி நாடார் உயர்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. கண்ணொளி தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கண் பரிசோதனை செய்தனர்.நிகழ்ச்சியில் சிவகிரி கமிட்டி நாடார் உறவின்முறை தலைவர் ஜெயராமன், செயலாளர் பணிநிறைவு பெற்ற ஆசிரியர் தொந்தி, தலைமையாசிரியை தம்பித்துரை, பொருளாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 13.நிர்வாகிகள் தேர்வு

சிவகிரி:சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதன்படி காந்தி தலைவராகவும், தலைமையாசிரியர் பாஸ்கர் செயலாளராகவும், பள்ளி செயலாளர் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் திருமலையாண்டி பொருளாளராகவும், ஆறுமுகம் துணைத் தலைவராகவும், கருப்பையா இணை செயலாளராகவும், மணக்காவு, செந்தில்குமார், அய்யம்மாள், திருமலைசெல்வி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளை ஆசிரியர்கள், சமுதாய நிர்வாகிகள், பொதுமக்கள் பாராட்டினர்.




Top

சம்பவம்

* 1.தூக்கு போட்டுமுதியவர் தற்கொலை

புளியங்குடி:புளியங்குடியில் தூக்கு போட்டு முதியவர் இறந்தார்.புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கோயமுத்தூரில் இருக்கும் இவரது மூத்த மகன் சங்கர் விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார். இவரை பார்ப்பதற்காக இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் கோயமுத்தூர் சென்று விட்டனர்.இந்நிலையில் நாராயணனுக்கும், அவரது சகோதரிகளுக்கும் சொத்து பிரிப்பதில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த நாராணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Top
* 2.தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி மதுக்கடை மறியல் போராட்டம்

தென்காசி:பூரண மதுவிலக்கினை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்காசியில் நேற்று மதுக்கடை மறியல் போராட்டம் நடந்தது.தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திடக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் மதுக்கடை மறியல் போராட்டம் நடந்தது. ம.ம.க. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ரகுமத்துல்லா தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான், மாவட்ட துணை செயலாளர்கள் நயினார்முகமது, சுல்தான் முன்னிலை வகித்தனர்.மறியல் போராட்டத்தில் தென்காசி ஒன்றிய செயலாளர் முகம்மது ராசப்பா, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் திவான், நகர செயலாளர்கள் சலீம், முகம்மதுஅலி, சேகன்னா, மதார்லெப்பை, பீர் அண்ணாவி, அசன், நகர துணை செயலாளர்கள் திவான், சாகுல், நகர பொருளாளர் சேட், இளைஞரணி செயலாளர் பிரேம்அலி உட்பட பலர் பேசினர்.


மதுக்கடை மறியல் போராட்டத்தினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.மறியல் போராட்டம் குறித்து மாநில உயற்மட்ட குழு உறுப்பினர் ரகுமத்துல்லா கூறுகையில்:- ""தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடை மறியல் போராட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. மதுக்கடைகளை முழுவதும் ஒழித்திடும் ம.ம.க.வின் போராட்டம் தொடரும்'' என்றார்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 254 பேரை தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். ம.ம.க.வின் மதுக்கடை மறியல் போராட்டத்தினையடுத்து தென்காசி புது பஸ்ஸ்டாண்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Top
* 3.சிறுமிகளை காணோம்:தந்தை போலீசில் புகார்

திருநெல்வேலி:இரண்டு மகள்களை காணோம் என தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலியை அடுத்துள்ள பேட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் வெள்ளையன்(48). காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த இவர் தெருக்களில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு 7 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த மகள்கள் கவுரி(8), சுமதி(7) ஆகியோரை காணவில்லை எனவும் யாரோ கடத்திச்சென்றிருக்கலாம் எனவும் போலீசில் புகார் செய்துள்ளார். பேட்டை போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Top
* 4.பூரண மதுவிலக்கு கோரி மறியல்: நெல்லையில் 450 ம.ம.கவினர் கைது

திருநெல்வேலி:பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நெல்லையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக் கடைகள் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது.நெல்லை ஜங்ஷனில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ரசூல் மைதீன் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மாவட்ட துணை செயலாளர் சர்தார் அலிகான், முன்னாள் மாவட்ட தலைவர் மில்லத் இஸ்மாயில், வளைகுடா நாடுகளின் முன்னாள் அம�ப்பாளர் பழ்லுல் இலாகி, மருத்துவ சேவை அணி செயலாளர் பிலால், களக்காடு ஒன்றிய ம.ம.க செயலாளர் மைதீன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ஷாஜகான், ஒன்றிய செயலாளர் சேக் மைதீன், பொருளாளர் செய்யது சிராஜ் முன்னிலை வகித்தனர்.


இதில் நிர்வாகிகள் காஜா, அப்துல் காதர், ஜமால், அமானுல்லா, சாகுல், யாசீர், செய்யது சிராஜ், மலுக்கு, பீர்முகம்மது, பக்ரூதீன், திவான், முகம்மது அலி, அமானுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 450 பேரை போலீஸ் துணை கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.போராட்டத்தையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

No comments:

Post a Comment