Sunday, March 7, 2010

நாகை

* 1.கிராமப்புற மின்பாதைகளில் மின்விநியோக நேரம் மாற்றம்

நாகை:நாகை மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்கள் மற்றும் ஆளில்லாத துணை மின்நிலையங்களில் இருந்து செல்லும் கிராமப்புற மின்பாதைகளில் மின்விநியோக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மின்வாரிய நாகை கோட்டத்திற்கு உட்பட்ட நாகை, திருக்குவளை, வாய்மேடு ஆகிய துணை மின்நிலையங்கள் மற்றும் திருமருகல், வேதாரண்யம், விழுந்தமாவடி ஆகிய ஆளில்லாத துணை மின்நிலையங்களில் இருந்து கிராமப்புற மின்பாதைகளில் மின்விநியோக நேரம் கடந்த 5ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குரூப் ஏ: திருமருகல், ஓ.என்.ஜி.சி., திருக்குவளை, ஆயக்காரன்புலம், ஆலங்காடு, தலைஞாயிறு, மருங்கூர் ஆகிய மின்பாதைகளில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை இருமுனை மின்சாரம் வழங்கப்படும். குரூப் பி: கரியாப்பட்டினம், மணலி, நாலுவேதபதி, திருப்பூண்டி ஆகிய மின்பாதையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி இருமுனை மின்சாரமும், மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரமும் வழங்கப்படும்.பாலக்குறிச்சி, மேலப்பிடாகை, கரும்பம்புலம் ஆகிய மின்பாதையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இருமுனை மின்சாரம் வழங்கப்படும். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது. மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Top

பொது

* 1.மெட்ரிக்.பள்ளி ஆண்டு விழா

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக். பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.அரசு வக்கீல் தர்மராஜன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி தலைவர் டி.ஆர்.பி.ராஜா, சாய்ராம் கல்விக்குழும அறங்காவலர் ஷர்மிளா ராஜா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர். சாய்ராம் பள்ளி நிர்வாக பிரதிநிதி சோமசுந்தரம், செயலாளர் வாசு, டாக்டர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் லட்சுமி வரவேற்றார். கோபு நன்றி கூறினார்.







Top
* 2.மணல்மேட்டில் இன்று மின்தடை

மணல்மேடு:மணல்மேடு துணை மின்நிலையத்தில் இன்று(8ம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், பூதங்குடி, கிழாய், திருவாளப்புத்தூர், இளந்தோப்பு, பட்டவர்த்தி, குறிச்சி, சித்தமல்லி, கடுவங்குடி, கடக்கம், தலைஞாயிறு, வில்லியநல்லூர், கொற்கை, காளி, திருமங்கலம், கொண்டல், கள்ளிக்காடு ஆகிய ஊராட்சிகளிலும் அதனை சார்ந்த கிராம பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு மணல்மேடு உதவி செயற்பொறியாளர் லஷ்மிநாராயணன் தெரிவித்துள்ளார்.
Top
* 3.இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

நாகை:நாகை அருகே தெத்தியில் இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் கலாதரன் தலைமை வகித்தார். பஞ்., தலைவர் சுந்தரமூர்த்தி என்.எஸ்.எஸ்., முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ராஜலட்சுமி, ஊராட்சி உறுப்பினர்கள் ரமேஷ்குமார், கருப்பையன், கிராம பிரமுகர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ். அலுவலர் ராஜாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் நடராஜன் வரவேற்றார். ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.முகாமில் உழவாரப்பணி, விழிப்புணர்வு பிரசாரம், சாலை சீரமைப்பு, தூய்மைப்பணி போன்ற திட்டப்பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.
Top
* 4.தேசிய இடைநிலை கல்வித்திட்ட கூட்டம்

நாகை:நாகை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய இடைநிலைக்கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.கலெக்டர் (பொ) அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், தேசிய இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் நடுநிலைப்பள்ளிகளில் எழுத்தறிவு சதவீதத்தை அதிகப்படுத்தி, தரமான கல்வியை வழங்க வேண்டும்.அதிகளவு மாணவ, மாணவிகளை சேர்க்க வேண்டும். மேலும் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உயர்நிலைப்பள்ளிகளையும், மாதிரி பள்ளிகளையும், மாணவிகள் விடுதிகளையும் திறக்க வேண்டும்.


எனவே கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியங்களை கண்டறிந்து அங்குள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும். மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும். பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி மாணவர்களின் கல்வித்தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீராசாமி,மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் காமராஜர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Top
* 5.இலவச கலர் டிவி

திருவெண்காடு:திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.ஒன்றியக்குழு தலைவர் தியாகவிஜேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வீரமணி, ஒன்றிய கவுன்சிலர் அக்பர்அலி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் 2 ஆயிரத்து 51 பயனாளிகளுக்கு டி.வி.க்களை வழங்கினார். ஊராட்சித் தலைவர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.






Top
* 6.கோயில் திருப்பணிக்கு அறநிலையத்துறை நிதி

சீர்காழி:சீர்காழி தாலுகாவில் 13 கோயில்களின் திருப்பணிக்கு 3.25 லட்சம் ரூபாயை அறநிலையத்துறை வழங்கி உள்ளது.சீர்காழி தாலுகாவில் ஆதிதிராவிடர்கள் வாழும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு திருக்கோயில்கள் திருப்பணி திட்டத்தின் கீழ் அறநிலையத்துறை சார்பில் 13 கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சீர்காழி தாலுகாவில் நத்தம், பெரியாச்சி அம்மன் கோயில், கோவிந்தராஜ் நகர் அருந்ததி அம்மன் கோயில் உட்பட 13 கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் திருப்பணி நிதியுதவியை எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் வழங்கினார்.சீர்காழி கோவிந்தராஜ் நகரில் நடந்த விழாவிற்கு நகராட்சித் தலைவர் சாந்தினி தலைமை வகித்தார். தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பொன்முடி முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை ஆய்வர் அரவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Top

பிரச்னைகள்

* 1.முன்விரோதத்தில் கல்வீசி தாக்குதல்: திருத்துறைப்பூண்டியில் 6 பேர் படுகாயம்

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டியில் முன்விரோதத்தில் கும்பல் கல் வீசி தாக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் நாடார் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டது. அதே தெருவைச் சேர்ந்த பிரபு (19) என்பவர் கலர் டிவி வாங்குவதற்கு வரிசையில் நின்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். இதை பிரபு தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடன் அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் அன்று இரவு சதீஷ் உட்பட 10 பேர் பிரபுவின் வீட்டிற்கு வந்தனர். அங்கு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பிரபுவை கம்பி, கட்டையால் தாக்கியதுடன் அப்பகுதியில் இருந்தவர்கள் மீது கற்களையும் வீசினர். இதில் பிரபு மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (23), ராஜேந்திரன் (45), அசோக் (28), மூர்த்தி (35), அபிஷேக கட்டளை குருமாறன் (28) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் பிரபு புகார் செய்தார். புகாரின் பேரில் சதீஷ் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Top

சம்பவம்

* 1.தொழிலாளியை தாக்கி பைக், செல்போன் பறிப்பு

நாகை:வேளாங்கண்ணியில் ஓட்டல் தொழிலாளியை தாக்கி பைக், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை அருகே வேளாங்கண்ணி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (39). ஓட்டல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஓட்டல் பணியை முடிந்து விட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுமைக்குளம் பகுதியில் இருட்டில் நின்றிருந்த மர்ம நபர்கள் 3 பேர் பைக்கை நிறுத்தி கிருஷ்ணமூர்த்தியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர். அவர், தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியை தாக்கிவிட்டு அவரது செல்போன், பைக் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment