Sunday, March 7, 2010

சென்னை

1.தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மூவர் பலி! குடிசை மீது கவிழ்ந்தது கிரஷர் தூள் லாரி

பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை அருகே கிரஷர் தூள் லோடு கொட் டியபோது, குடிசை மீது லாரி கவிழ்ந்த விபத் தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று தொழிலா ளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: பழவந்தாங்கல், ஐயப்பா நகரை சேர்ந்தவர் உதயன். கோவிலம்பாக் கம், விடுதலை நகரில் இவருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில், பீகார் மாநிலம், ஜமுயி மாவட்டம், பேலா கிராமத்தை சேர்ந்த அஜித் (35) தயானந்த் (25) பிரகாஷ் (20) லல்லுகுமார் யாதவ் (24) சுரேஷ் யாதவ் (32) ஜெயராம் (35) ஆகிய ஆறு பேர், கடந்த பல மாதங்களாக இந்த தொழிற் சாலையின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து குடியிருந்து, ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை இவர்கள் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது, ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கு, லாரியில் கிரஷர் தூள் கொண்டுவரப்பட்டு குடிசை அருகே கொட்டப் பட்டது. ஏற்கனவே, இரண்டு லோடு கொட்டிய இடத் தில் காலை 7 மணிக்கு கொண்டுவரப்பட்ட மூன்றாவது லோடையும் கொட்ட முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி அருகேயிருந்த குடிசை வீடு மீது கவிழ்ந்தது. கிரஷர் தூளும் குடிசை மீது கொட்டியது. இதில், குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த அஜித், தயானந்த், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லல்லுகுமார் யாதவ் காயமடைந்தார்.
தகவலறிந்த போலீசாரும், தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களும் பல மணி நேரம் போராடி, இறந்தவர் களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த லல்லுகுமார் யாதவை கீழ்கட்டளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரே நேரத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

2.ஆட்டோவில் ரூ.2 லட்சம் 'மிஸ்சிங்' ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

ஜெ.ஜெ.நகர் : ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு லட்சம் ரூபாயை, உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.
சென்னை முகப்பேறு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன்(45). இவருக்கு சொந்தமாக பாலக்காட்டில் நிலம் உள்ளது. கேரளா சென்று நிலத்தை விற்பதற்காக, இரண்டு லட்சம் ரூபாயை, நிலத்தை வாங்கியவரிடம் முன்தொகையாக பெற்றார். மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 5 மணிக்கு இறங்கியவர், ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
"சூட்கேஸ்' ஒன்றை ஆட்டோவில் தவற விட்டார். 15 நிமிடங்கள் கழித்து தான் சூட்கேஸ் ஆட்டோவில் தவறியது அவரது நினைவிற்கு வந்தது. இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசில் நாராயணன் புகார் கொடுத்தார். பெரம்பூர் ஆட்டோ ஸ்டாண்டுக்கு இன்ஸ்பெக்டர் தம்புசாமி, தலைமை காவலர் அர்ஜூனன் சென்றனர். நாராயணன் சொன்ன அங்க, அடையாளங்களை கொண்டு, ஆட்டோ டிரைவர் ராஜுவின் ஆட்டோவில் பணத்தை தவற விட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
ராஜுவை போலீசார் போனில் தொடர்பு கொண்ட போது,"தனது ஆட்டோவில் தவறவிட்ட சூட்கேசை முகப்பேரில் உள்ள நாராயணன் வீட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன்' என கூறினார். அதையடுத்து, ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். ஆட்டோவில் இருந்த சூட்கேசை, உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அதை சரிபார்த்த நாராயணன், தான் கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாயும், நிலம் விற்பது தொடர்பான ஆவணங்களும் சரியாக இருப்பதாக போலீசாரிடம் கூறினார்.
ஆட்டோ டிரைவர் ராஜுவின் நேர்மையான செயலை பாராட்டி, சூட்கேசின் உரிமையாளர் நாராயணன், 5,000 ரூபாயை ஆட்டோ டிரைவருக்கு வழங்கினார்.

3.கஸ்டம்ஸ் அதிகாரி கொலை வழக்கில் பவுலினா பகீர் வாக்குமூலம்

ஆலந்தூர் : "முன்விரோதம் காரணமாக, கஸ்டம்ஸ் அதிகாரியை கொலை செய்தேன்' என்று போலீசில் பவுலினா வாக்கு மூலம் அளித்துள் ளார்.
ஆதம்பாக்கம், ஆபிசர்ஸ் காலனியை சேர்ந்தவர் சாம்சன் (43). இவர் சென்னை விமான நிலைய சரகத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணி புரிந்தார். கடந்த மாதம் 28ம் தேதி இரவு மர்ம கும்பலால் சாம்சன் கொலை செய்யப் பட்டார். இக்கொலை வழக்கில் பெண் தாதா பவுலினா உட்பட 12 பேர், செங்கல்பட்டு 2வது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் சரணடைந்தனர். போலீசார் அளித்த மனுவை தொடர்ந்து, குற்றவாளிகள் கடந்த 5ம் தேதி ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட் அனுமதி அளித் தது.
இதையடுத்து, குற்றவாளிகள் 12 பேரும் ஆதம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பெண் தாதா பவுலினா கொடுத்த வாக்குமூலம்: ஆதம்பாக்கத்தில் நான் நிர்வகிக்கும் ஆலயத்திற்கு ஆண்டு தோறும் சாம்சன் கொடுத்து வந்த நன்கொடையை கடந்த மூன்று ஆண்டுகளாக தர மறுத்து விட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற் பட்டது. பழிவாங்க ஜாதி பெயரை கூறி திட்டியதாக சாம்சன் என் மீது மனித உரிமை கழகத்திடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரை விசாரித்ததில் உண்மை இல்லை என்பது தெரிந் தது. அதில் ஆத்திரம் கொண்ட சாம்சன், தனது வீட்டு குப்பைகளை வீட்டு வேலைக்காரி மூலம் எனது தந்தை சமாதி மீது கொட்ட செய்தார். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
என்னை கண்காணிக்க, சாம்சன் அவரது வீட்டில் கேமராவை பொருத்தி இருந்தார். மேலும், விமான நிலைய சரககத்தில் பணி புரிந்த எனது மகனை சாம்சன் அடிக்கடி டார்ச்சர்' செய்து வந்தார்.
சாம்சனின் டார்ச்சர் தாங் காமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். இதனால் மன நிம்மதியை இழந்தேன். இதை தொடர்ந்து, எனது மூத்த மகன் இளையராஜாவின் மைத்துனன் சுகுமார் மற்றும் அவனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டினோம். கடந்த 28ம் தேதி வெளியில் சென்றிருந்த சாம்சன் வீடு திரும்பியதும் கொலை செய்தோம். இவ்வாறு பவுலினா வாக்குமூலம் அளித்தார்.
இந்த கொலை வழக்கில் விசாரணை முடிந்தப் பின், பவுலினா உட் பட 12 பேரை ஆதம்பாக்கம் போலீசார், ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி ராமநாதன் முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவை அடுத்து அவர்கள் அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

4.வடசென்னை அ.தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

தண்டையார்பேட்டை : வடசென்னை அ.தி.மு.க., சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று தண்டையார்பேட்டையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அ.தி.மு.க.,வை சேர்ந்த விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்பு செயலர்கள் சுலோச்சனா சம்பத், வளர்மதி, மகளிர் அணி செயலர் கோகுல இந்திரா, மீனவர் அணி இணை செயலர் ஜெனிபர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
விழாவில் அமைப்புச் செயலர் வளர்மதி பேசியதாவது: உலக பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கானஅனைத்து தகுதிகளும் ஜெயலலிதாவிற்கு மட் டுமே உண்டு. அவரின் ஆட்சி காலத் தில் மகளிர் நீதிமன்றம், காவல் நிலையங்கள், பெண்கள் கமாண்டோ படைகளை அமைத்தார்.
அ.தி.மு.க.,ஆட்சியில் தான் அதிகளவில் பெண் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். பெண்களுக்கு முதன் முதலில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர் ஜெயலலிதா. பெண் கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தார். இப்படி பெண்களின் முன்னேற் றத்திற்காக பாடுபடும் ஜெயலலிதாவை நமக்கு வழங்கிய எம்.ஜி. ஆரை நாம் நினைவு கூர்வோம். வரும் காலகட்டங்களில் அ.தி.மு.க., ஆட்சி மலர பாடுபடுவோம். இவ்வாறு வளர்மதி பேசினார்.
இதையடுத்து, பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன், எக்கோ, எக்ஸ்ரே, கர்ப்பவாய் புற்றுநோய், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. சர்க்கரை, தோல், கண், காது, குழந்தைகள், பொது ஆகிய மருத்துவங்கள் பார்க்கப் பட்டன. இதில், ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை மாவட்ட செயலர் சேகர் பாபு எம்.எல்.ஏ., செய்திருந்தார்.

1.ஸ்குரூ டிரைவரால் குத்தி மாமனார் கொலை

மருமகனுக்கு போலீஸ் வலை : திருவொற்றியூர் செக்ஸ் கொடுமை தாங்காமல் தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை அழைத்தபோது, ஏற்பட்ட தகராறில் மாமனாரை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர், கல்யாணிசெட்டி நகரை சேர்ந்தவர் முனுசாமி(47); வெல்டர். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மகள் உமாமகேஷ்வரி(20). இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த டிரைலர் லாரி டிரைவரான கிரண்(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கிரணுக்கு செக்ஸ் விஷயத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அடிக்கடி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் உல்லாசமாக இருக்க விரும்புவார். ஆபத்தான செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு, உமாமகேஷ்வரியை கொடுமை படுத்தி வந்தார்.
கணவரின் மூர்க்கத்தனமான செக்ஸ் கொடுமை தாங்காமல் உமாமகேஷ்வரி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆபாச பட "டிவிடி'க்களை கொண்டு வந்து போட்டு, அதில் உள்ளபடி உறவு கொள்ள வேண்டும் என கிரண் மனைவியை வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உமாமகேஷ்வரி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு மீண்டும் சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலை மாமனார் வீட்டிற்கு சென்ற கிரண், மனைவியை அழைத்தார்.
அப்போது மாமனார் முனுசாமிக்கும், கிரணுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், முனுசாமி கோபமடைந்து கிரணை கன்னத்தில் அறைந்து துரத்தினார். இந்நிலையில், நள்ளிரவு மாமனார் வீட்டிற்கு தனது நண்பர் மதன் என்பவருடன் கிரண் சென்றார். முனுசாமியை ஸ்குரூ டிரைவரால் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திய கிரண், தனது நண்பருடன் தப்பியோடினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முனுசாமி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், முனுசாமி வரும் வழியி லேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவொற்றியூர் இன்ஸ் பெக்டர் செந்தில்முருகன் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள கிரண் மற்றும் அவரின் நண்பர் மதன் ஆகியோரை தேடி வருகிறார்.
2.மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை : மதுக்கடைகளை மூடக்கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பாக நேற்று தமிழகம் முழுவதும் கண் டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் ஐஸ்ஹவுஸ், அயனாவரம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத் திய மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டவர் களை போலீசார் கைது செய்தனர். அதே போன்று அயனாவரத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட சிலர், போலீஸ் கைதில் இருந்து தப்பி திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் கடையின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலின் போது இருவர் காயமடைந்தனர். அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேர், போலீசாரால் கைது செய்யப் பட்டனர்.
பல்லாவரத்தில் நேற்று மறியல் போராட் டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலர் யாக்கூப் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மதுவுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment