Sunday, March 7, 2010

பெரம்பலூர்

* 1.பெரம்பலூரில் இம்மாத இறுதிக்குள் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவக்கம் : அமைச்சர் சாமிநாதன் தகவல்

பெரம்பலூர்:பெரம்பலூரில் இம்மாத இறுதிக்குள் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் கூறினார்.பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் பெரம்பலூரில் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. இதில் தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 61 ஆயிரத்து 641 கிமீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நிதியாண்டிற்குள் அனைத்து சாலைகளும் 7 மீட்டர் அகலம் கொண்ட இருவழிச்சாலைகளாக மாற்றப்படும். அரியலூரில் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். அரியலூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு விட்டது. அந்த பணி விரைவில் தொடங்கப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் 574 கி.மீ. சாலைப்பணிகளுக்கும், 55 பாலங்களுக்கும் ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 500 சாலைப்பணிகளும், 61 பாலங்களுக்கான பணிகளும் ரூ116 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 795கி.மீ. சாலைப்பணிகளுக்கும், 55 பாலங்களுக்கும் ரூ.195 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதில் 677 சாலைப்பணிகளும் 51 பாலங்களும் ரூ.148 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டத்திலும் மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கபட்டுவிடும்.


பெரம்பலூரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கனவான புறவழிச்சாலையை 10. கி.மீ. நீளத்தில் அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் புறவழிச்சாலைப்பணிகள் துவங்கி விடும் இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வுக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் சந்தானம், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட கலெக்டர்(பொ) பிச்சை, எம்எல்ஏக்கள் பெரம்பலூர் ராஜ்குமார், அரியலூர் அமரமூர்த்தி, ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் கொடியரசி, நகராட்சி தலைவர் ராஜா, ஒன்றியகுழுத் தலைவர்கள் பெரம்பலூர் பெரியசாமி, ஆலத்தூர் முத்துக்கண்ணு, வேப்பந்தட்டை மகாதேவி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலாஜி, டிஆர்ஓ பழனிச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேவதாஸ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தீர்த்தகிரி, பிஆர்ஓ கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top

பொது

* 1.ரேஷன்கார்டுதாரர்களுக்கு கையடக்க அச்சு இயந்திர ரசீது வழங்க ஏற்பாடு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் கையடக்க ரசீது அச்சு இயந்திரம் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பில் வழங்கப்படுகிறது என கூட்டுறவு சங்கங்களின் பெரம்பலூர் மண்டல ணைப்பதிவாளர் ருகுணஐயப்பதுரை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் மார்ச்.,1லிருந்து கையடக்க ரசீது அச்சு இயந்திரம் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பில் வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கீழப்பழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் கையடக்க ரசீது அச்சு இயந்திரம் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பில் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் காத்திருக்கும் நேரம் குறையும், விற்பனையாளர் விற்பனை சிட்டா, வழங்கல் பதிவேடு, இருப்பு பதிவேடு போன்ற பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை. ரேஷன் கார்டுதாரர்களிடம் கார்டுகளை பெற்று பல பதிவுகள் மேற்கொள்ளக்கூடிய காலதாமதம் குறைந்து துரித சேவை பொதுமக்களுக்கு கிடைக்கும்.ஆய்வு அலுவலர்கள் எந்த நேரத்திலும் கடைகளை ஆய்வு செய்யலாம். எழுது பொருட்களின் தேவை குறைக்கப்படுவதால் செலவினங்கள் குறையும். சரக்கிருப்பு நிலையினை தேவைப்படும் போது இயந்திரத்தில் இருந்தும், வலை தளத்திலும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Top
* 2.பா.ஜ. தலைவருக்கு வரவேற்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பா.ஜ. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று பெரம்பலூர் வந்த மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மாவட்ட எல்லையில் மாவட்ட பாஜ சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் சந்திரசேகர், திருச்சி கோட்ட பொறுப்பாளர் திருமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் சிவ சுப்பிரமணியன், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் அய்யாரப்பன், மாவட்ட பொருளாளர் வாசுதேவன், மாவட்ட துணைத்தலைவர்கள் கண்ணன், ஈஸ்வர் மணி, நகரதலைவர் குருராஜேஷ், நகர செயலாளர் துரைசக்திவேல் செய்திதொடர்பாளர் முத்துக்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் பூபதி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராமசாமி உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக அழைத்துசெல்லப்பட்ட அவர், ஒரு சில இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்த பின் பா.ஜ செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
Top
* 3.ஆலோசனை மையம் துவக்கம்

பெரம்பலூர்:பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் குடும்ப வள ஆலோசனை மையம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு பெரம்பலூர் டிஎஸ்பி காஜாமொய்தீன் தலைமை வகித்து குடும்ப உறவுகள் பற்றி பேசினார். மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறங்காவலர் அகல்யா முன்னிலை வகித்தார். பிஸியோதெரப்பிஸ்ட் சுமதி அறிமுக உரையாற்றினார். பெரம்பலூர் எல்ஐசி வளர்ச்சி அலுவலர் ஜாஹிர் ஹூசைன், மனவளக்கலை மன்ற மூத்தபேராசிரியர் மாலா, நகை கடை உரிமையாளர் கருப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் சாந்தகுமார் வரவேற்றார். சீனிவாசன் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் வெங்கடகிருஷ்ணராஜூ நன்றி கூறினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Top
* 4.கணிப்பொறி மாணவர் சங்கம் துவக்க விழா

பெரம்பலூர்:பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் திருச்சி மண்டல கணிப்பொறி மாணவர் சங்கம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராஜசேகரன், கல்லூரி டீன் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி எம்ஏஎம் பொறியியல் கல்லூரி முதல்வரும், திருச்சி மண்டல கணிப்பொறி சங்க தலைவருமான மாலுக்முகமுது குத்துவிளக்கேற்றி வைத்து சங்கத்தை துவக்கி வைத்தார்.விழாவில் ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பகல்லூரி முதல்வர் கோதண்டபாணி, மேலாண்மை பயிலக இயக்குநர் சந்திரகுமார் உட்பட பலர் பேசினர். இதில் துறைத்தலைவர்கள் சதீஷ், இளையராஜா, தமிழ்ச்செல்வம், மணிகண்டன், பெரியசாமி, சிவானந்தம் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சிவக்குமார், அலுவலக மேலாளர் பால்ராஜ், செய்திதொடர்பாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
Top
* 5.கெரசின் வழங்கும் நிலையங்களில் லேப்டாப் பில்லிங் மெஷின் பில்கள்

பெரம்பலூர்:மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் லேப்டாப் பில்லிங் மெஷின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பில்கள் வழங்கப்படுகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் செயற்படும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் குரும்பலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவை நடத்தும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் கடந்த 1ம்தேதி முதல் லேப்டாப் பில்லிங் மெஷின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பில்கள் வழங்கப்படுகிறது.

இதே போல அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கீழப்பழூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் பில்கள் வழங்கப்படுகிறது. லேப்டாப் பில்லிங் மெஷின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பில்கள் வழங்கப்படுவதால் அவர்கள் காத்திருக்கும் நேரம் குறைவதோடு, விற்பனையாளர் விற்பனை சிட்டா, வழங்கல் பதிவேடு, இருப்பு பதிவேடு போன்ற ஆவணங்களை பராமரிக்க தேவையில்லை. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விரைந்து பணியாற்ற முடியும். குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி ஆய்வு அலுவலர்கள் எந்த நேரத்திலும் கடைகளை ஆய்வு செய்ய முடியும். மேலும் தேவையான விவரங்களை விரைவாக தெரிந்துகொள்ளமுடியும். இத்தகவலை பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குணஐயப்பதுரை தெரிவித்துள்ளார்.
Top
* 6.பெரம்பலூரில் இலவச மகளிர் மருத்துவ முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆஸ்பத்திரியில் இலவச மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஆஸ்பத்திரி டாக்டர் சரஸ்வதி தலைமை வகித்தார். பெரம்பலூர் கலெக்டரின் மனைவி லதா பெண்கள் தினம் பற்றி சிறப்புரையாற்றினார். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாமை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அனந்தலட்சுமி பேசினார். மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணைஇயக்குநர் குணகோமதி வாழ்த்தி பேசினார். முகாம் குறித்து தனலட்சுமி சீனிவாசன் ஆஸ்பத்திரியின் நிர்வாக அலுவலர் கல்யாணி கூறுகையில், இந்த ஆஸ்பத்திரியில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளும் சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட்டது.

டாக்டர்கள் சரஸ்வதி, பிரியா உட்பட5க்கும் மேற்பட்ட டாக்டர்களும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களும் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்து ரூ.50 ஆயிரத்திற்கான மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். முகாமில் குழந்தையின்மை, மகப்பேறு, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பப்பை புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கர்ப்பப்பைவாய் புற்று நோய் கண்டறியும் சோதனை உட்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு தேவையான ஆலோசனைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார். முன்னதாக மெர்சி வரவேற்றார். நிறைவில் சந்திரபிரியா நன்றி கூறினார்.
Top
* 7.இலக்கிய மன்ற விழா

பெரம்பலூர்:பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடந்தது.விழாவை கல்லூரி தாளாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். புத்தனாம்பட்டி நேரு நினைவுகல்லூரி இணைப்பேராசிரியர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அன்னை தெரசாவின் வாழ்க்கை முறையை கவிதையாக வெளிப்படுத்தி எப்படி அவர் வெற்றிபெற்றார் என்பதை எடுத்துக்கூறினார்.கல்லூரி முதல்வர் ராஜசேகரன் பேசுகையில், உலகத்தின் உயிர்நாடி பெண்கள். அப்பெண்கள் மதிப்போடு இருக்கவேண்டும் என்றார். விழா ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் செந்தமிழ்செல்வி, மாலதி, சங்கீதா, சர்மிளா, கோகிலா மற்றும் செய்திதொடர்பாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Top
* 8.கலை நிகழ்ச்சி

அரும்பாவூர்தமிழக அரசின் சார்பில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி சார்பில் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.அரும்பாவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கராசு, செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போல பூலாம்பாடியில் பேரூராட்சி தலைவர் ராமதிலகம் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.



Top
* 9.பெரம்பலூரில் இலவச மகப்பேறு மருத்துவ முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் இலவச மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் நேற்று மருத்துவமனையில் நடந்தது. முகாமுக்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமை இயக்குநர் அனந்தலட்சுமி கதிரவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முகாம் பற்றி பேசினார். முகாமில் கலெக்டரின் மனைவி லதா விஜயகுமார், பெண்கள் தினம் பற்றி பேசினார். நலப்பணிகள் இணை இயக்குநர் குணகோமதி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக மேரி வரவேற்றார். அலுவலக மேலாளர் சந்திரபிரியா நன்றி கூறினார். முகாமில் குழந்தையி ன்மை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மகப்பேறு கால சிகிச்சை ஆகியவைகளுக்கு டாக்டர்கள் பிரியா, சரஸ்வதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனைகளுடன், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் அல்டரா ஸ்கேன், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.முகாமில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவமனை டீன் ரெங்கநாதன், நிர்வாக அலுவலர் கல்யாணி தலைமையில் மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர்.
Top
* 10.மருத்துவமுகாம்

பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார தலைமை மருத்துவ அலுவலர் வசந்தா தலைமை வகித்தார். டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் தனலட்சுமி முகாமை துவக்கி வைத்தார்.டாக்டர்கள் அரவிந்த், கொளஞ்சிநாதன், செந்தில், விமல், லெட்சுமிநாத், குணசேகரன், மங்களபிரியா, மகாலட்சுமி, அனிதா கிரிஸ்டி, அனிதா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கினர். இதில் பொதுமருத்துவம் உட்பட பல்வேறு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ரத்தபரிசோதனை, இசிஜி, ஸ்கேன் போன்ற பரிசோதனை செய்யப்பட்டது.முகாமில் கலந்து கொண்டு 850 பேர் பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, சம்பத் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.
Top

சம்பவம்

* 1.கிரானைட் கல் கடத்த முயற்சி: பெரம்பலூரில் கும்பல் 'எஸ்கேப்'

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே விலை உயர்ந்த கிரானைட் கல்லை வெட்டி வெளி மாநிலங்களுக்கு கடத்த முயற்சித்த கும்பலை மங்கலமேடு போலீஸார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் அருகே உள்ள கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (45). இவர் இதே ஊரில் விவசாயம் செய்து வந்தார். இவரது வயலில் பெரிய பாராங்கல் இருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர், விவசாயி துரைசாமியை சந்தித்து இந்த கல்லை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். இந்த கல் முழுவதையும் கூலி ஆள் விட்டு வெட்டி எடுத்து தருவதுடன், அதற்கான செலவு தொகையை தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் பத்தாயிரம் ரூபாயை முன் பணமாக தந்துவிட்டு, கல் முழுவதும் வெட்டி வைக்குமாறும் மார்ச்., 6ம் தேதி இரவு லாரியுடன் வந்து எடுத்து செல்வதாவும் தெரிவித்துவிட்டு சென்றார். தொடர்ந்து துரைசாமி கூலி ஆட்கள் உதவியுடன் கல் முழுவதையும் வெட்டி ஒரு இடத்தில் (குவித்து)சேர்த்து வைத்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் திருவண்ணாமலையை சேர்ந்த அந்த நபர் அசோக்லைலேண்ட் லாரி, கிரேன் மற்றும் ஆட்களுடன் கே.புதூர் கிராமத்திற்கு வந்து கிரேன் உதவியுடன் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தார்.

இந்த கல் விலை உயர்ந்த கிரானைட் கல் என அறிந்த இக்கிராம மக்கள் மங்கலமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மங்கலமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸை கண்டதும் லாரி மற்றும் கிரைன் ஆகியவற்றை விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடி விட்டது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் ஆர்.டி.ஓ., பாலுசாமி, குன்னம் தாசில்தார் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கனிம வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த கிரானைட் கல்லின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இச்சம்பவம் குறித்து புகார் எதும் வழங்கப்படவில் லை என்பது குறிப்பிடத்தக்கது.
Top
* 2.மதுக்கடை முன் மறியல்: 78 பேர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூரில் மதுக்கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 78 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் கடைகளில் 13ஆயிரத்து 500கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. நடப்பாண்டில் 15 ஆயிரம் கோடி விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயில்துள்ளது.

குடிமக்களை "குடி' யின் மூலம் கெடுக்கும் வேலைகளை அரசு செய்வது தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறி மனித நேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சுல்தான் மைதீன் தலைமையில் பொருளாளர் ஜமால் முகமது, துணைச்செயலாளர் பஷீர் அகமது, ஒருங்கிணைப்பாளர் மீரான்மைதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சாகீர்மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் 4 ரோட்டில் இருந்து அரசு மதுக்கடைகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக புதிய பஸ்டாண்ட் பகுதிக்கு சென்றனர். அங்கு மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மொய்தீன் கண்டன உரையாற்றினார். பின்னர் புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள மதுக்கடைகளுக்கு முன்பு மறியல் செய்ய முயன்ற 78 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
Top

பொழுது போக்கு

* 1.பெரம்பலூரில் இன்ஜி., கல்லூரி விளையாட்டு விழா பரிசளிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.விழாவுக்கு தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.


செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் மணி, ராஜபூபதி, முதன்மை நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விளையாட்டு போட்டிகளை தாளாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கல்லூரியில் வளாகத்தில் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, திருச்சி பாரத மிகு மின் நிலைய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய பொது மேலாளர் தர்மலிங்கம் பரிசு வழங்கி பேசியதாவது: மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதை போல விளையாட்டிலும் சிறந்து விளங்கி கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும். கல்லூரிக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்றார் போல விளையாட்டுத்துறையில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

இந்த ஆண்டுக்கான கோப்பையை ஆறாவது முறையாக மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை மாணவர்கள் வென்றனர். பெண்களுக்கான பிரிவில் முதுகலை மாணவிகள் கோப்பையை வென்றனர். விழாவில் கல்லூரி முதல்வர் சார்லஸ், கல்லூரி ஆலோசகர் தாயுமாணவன், துணை முதல்வர் செந்தில் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ்குமார், தனபால், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment