Sunday, March 7, 2010

கரூர்

* 1.மாற்றுத்திறனாளருக்கு கரூரில் சுயம்வரம்

கரூர்: மாற்றுத்திறன் படைத்தோருக்கான சுயம்வரம் நிகழ்ச்சி கரூரில் மார்ச் 12ல் நடக்கிறது.கரூர் சைக்கோ அறக்கட்டளையின் கவசம் மாற்றுத்திறன் படைத்தோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐம்பெரும் விழா மார்ச் 12ல் கரூரில் நடக்கிறது. பெண்கள் தினவிழா, மாற்றுத்திறன் படைத்தோருக்கான சுயம்வரம், வேலைவாய்ப்பு முகாம், அங்கீகார விருது வழங்கும் விழா மற்றும் தொழில்பயிற்சி என ஐம்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது. காலையில் கரூர் எஸ்.பி., தினகரன் விழாவை துவக்கி வைக்கிறார். மாலையில் நடக்கும் விழாவில் கலெக்டர் உமாமகேஸ்வரி தொழில் பயிற்சியை துவக்கி வைக்கிறார். விழாவில் புதுமை முயற்சியாக மாற்றுத்திறன் படைத்தோருக்கான சுயம்வரம் நடத்தப்படுவது குறித்து அறக்கட்டளை இயக்குனர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:


மாற்றுத்திறன் படைத்தோர் பிரச்னைகளில் முக்கியமானது திருமணம். வேதனை மட்டுமே அனுபவித்த இவர்களுடைய வாழ்க்கையில் புதிய வாழ்வை அமைத்துக்கொள்ள வாய்ப்பு உருவாக்க சுயம்வரம் நடத்தப்படுகிறது. சுயம்வரத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டால், முன்னுரிமை அடிப்படையில் நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு பெரியவர்கள் தலைமையில் அன்றே திருமணம் முடித்து சீர்வரிசை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுயம்வரத்தில் பங்கெடுக்க விரும்புவோர் மார்ச் 8க்குள் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறன் படைத்தோரை திருமணம் செய்ய விரும்பும் எவரும் முன்பதிவு செய்யலாம். பதிவின்போது ஃபோட்டோ, ரேஷன் கார்டு, கல்வி சான்று, சிறப்பு தகுதி சான்று, வாரிசுதாரர் நலச்சான்று, மருத்துவ சான்று, ஊனமுற்றோர் தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை கொண்டுவர வேண்டும். மாற்றுத்திறன் படைத்தோரை, மனித நேயத்துடன் பணி வாய்ப்பு அளித்து மதிப்பளிக்கும் தனியார் நிறுவனங்கள் கவுரவிக்கப்படுகின்றன. மேலும், மாற்றுத்திறன் படைத்தோருக்கு தங்கள் நிறுவனத்தில் புதிதாக வாய்ப்பளிக்கவும் வேலைவாய்ப்பு முகாம் அன்று நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Top
* 2.வி.ஏ.ஓ., சான்று முறை ரத்து முதல்வருக்கு கோரிக்கை

கரூர்: நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு வி.ஏ.ஓ., சான்று முறையை ரத்து செய்ய கோரி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கரூரில் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி கரூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கரூரில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரம் பேர் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். நலவாரியத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்க ள் 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உட்பட மாநிலத்தில் 26 நலவாரியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து வாரியங்களிலும் நடைமுறையி ல்உள்ள உதவி திட்ட தொகை ஒரே சீராக்குவது குறித்து விரைவில் துணை முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்கவுள்ளது. வாரியம் இடையே உள்ள முரண்பாடு இதன் மூலம் களையப்படும். பென்னாகரம் இடை த்தேர்தலில் தி.மு.க., தோழமை கட்சியாக, அதன் வெற்றிக்கு பாடுபடுவோம்.


நலவாரியத்தில உறுப்பினராக சேர்வதற்கு வி.ஏ.ஓ., சான்று நடைமுறையால் காலதாமதமாவதாக குற்றச்சாட்டு உள்ளது. சில தொழிற்சங்கங்கள் தவறான நபரை உறுப்பினராக சேர்ப்பதால் வி.ஏ.ஓ., சான்று பெற அறிவிக்கப்பட்டது. தற்போது இதுவே தாமதத்துக்கு காரணமாக உள்ளதால், இந்நடைமுறை ரத்து செய்ய முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Top
* 3.குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு வசதி கோரி அரசுக்கு கருத்துரு

குளித்தலை: ""தாலுகா மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதியும் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அளிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்று நலப்பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன் கூறினார். குளித்தலை அரசு மருத்துவமனையில் தோகமலை, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், சிந்தாமணிப்பட்டி, நங்கவரம், நச்சலூர் என 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் புதிய மகப்பேறு கட்டிடத்துக்கு பெண்களை கொண்டு செல்லும் பாதை மிகவும் பழுதடைந்தும், குறுகிய நிலையிலும் உள்ளது. கர்ப்பிணிகளை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லும் சிரமப்படும் நிலையில்உள்ளது. குளித்தலை வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்வதால், சுற்றுவட்டாரத்தில் விபத்துகளும் அதிகம் நடக்கிறது.

ஆனால், சாலை விபத்தில் சிக்குவோருக்கு இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கவும், ஆப்ரேஷன் செய்யவும் இதற்கான டாக்டர், எலும்பு சிகிச்சை டாக்டர் பணியில் இல்லாததால் பாதிக்கப்படுவோர் 30 கி.மீ., தொலைவில் உள்ள திருச்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும், தினசரி வரும் 500க்கு மேற்பட்ட வெளிநோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்க மருந்தாளுநர் ஒருவர் மட்டுமே உள்ளதால், நோயாளிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. சம்மந்தப்பட்ட மருந்தாளுனரும் விடுமுறையில் சென்றால், மருந்து வழங்க பணியாளர் இல்லாமல் டாக்டர் மற்றும் நர்ஸ் மருந்து வழங்க வேண்டிய நிலையுள்ளது. பிரேதபரிசோத� ன நடக்கும்போதும் மருந்தாளுநர் உடனிருக்க வேண்டிய நேரத்தில், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்க ஆளில்லாமல், மருந்து விநியோகம் பா திக்கப்படுகிறது. பிரச்னையை சமாளிக்க கூடுதல் மருந்தாளுநரை பணியமர்த்தவும், பல மாதங்களாக பயன்பாட்டுக்கு வராத ஆப்ரேஷன் தியேட்டர் பழுது நீக்கவும் சுகாதாரத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர். மருத்துவமனைக்கு பற்றாக்குறையாக உள்ள டாக்டர், மருந்தாளுநர் மற்றும் சீரமைக்கப்படாத ஆப்ரேஷன் தியேட்டர் என குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு அமைப்புகள் பலமுறை கோரிக்கை வைத்தன.


இந்நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனையில், நலப்பணிகள் மருத்துவப்பணி இணை இயக்குநர் இளங்கோவன் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது:


குளித்தலை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர் சிறப்பாக செயல்பட்டதை அறிந்தேன். மருத்துவமனையின் உள் வளாகத்தில் இருந்த செடி, கொடி, முட்புதர் அகற்றிட கூறியுள்ளேன். பிரசவ வார்டுக்கு செல்லும் பாதைக்கு 108 ஆம்புலன்ஸ், தனியார் கார், ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் தடையில்லாத அளவு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பற்றாக்குறை டாக்டர், மருந்தாளுநர் நியமனம் உள்ளிட்ட தாலுகா மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதியும் குளித்தலைக்கு அளிக்க உயர் அதிகாரிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை சிறப்பாகவும், குறைபாடுகளின்றி செயல்படவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆப்ரேஷன் தியேட்டர் பரிசோதனை நடக்கிறது. விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Top

பொது

* 1.இளைஞர் காங்., நிர்வாகி தேர்தல் கரூரில் துவக்கம்

கரூர்: கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வுக்கான உட்கட்சி தேர்தல் நேற்று துவங்கியது. முதற்கட்டமாக கரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 15 பஞ்சாயத்து மற்றும் இனாம் கரூர் நகராட்சியில் நான்கு வார்டுகளுக்கான இளைஞர் காங்கிரஸ் கிளை நிர்வாகி தேர்தல் நேற்று நடந்தது. வரும் 10ம் தேதிவரை நான்கு நாள் தேர்தல் நடக்கிறது. நேற்றைய தேர்தலில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஓட்டளித்தனர்.

வெங்கமேடு மீனாட்சி திருமண மண்டபத்தில் நேற்று காலை எட்டு மணிக்கு துவங்கிய ஓட்டு பதிவு மாலை நான்கு மணிவரை நடந்தது. தேர்தலில் 100 பேர் போட்டியிட்டனர். மாலை ஆறு மணிக்கு மேல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளராக ரகுராஜ், சுமன் சிங் மிஷ்கா ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக, ஓட்டு பதிவு துவங்கியதும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், நகர தலைவர் சுப்பன் மற்றும் நிர்வாகிகள் சிலர் ஓட்டு சாவடி முன் அமர்ந்து ஓட்டு சேகரித்துள்ளனர். இதைக்கண்ட இளைஞர் காங்கிரஸின் ஒ ரு பிரிவினர், தங்கள் எதிர்ப்பை தெரிவித்து அ னைவரையும் அங்கிருந்து புறப்படவைத்தனர்
Top
* 2.காளேஸ்வரன் கோவிலில் கல்வெட்டு கண்டெடுப்பு

கரூர்: சிதிலமடைந்த நிலையில் உள்ள தேவர்மலை பஞ்சாயத்து 12ம் நூற்றாண்டு சிவன் கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே தேவர்மலை பஞ்சாயத்தில் ஈஸ்வரன்பாறை எனும் இடத்தில் காளேஸ்வரன் கோ வில் உள்ளது. இப்பகுதி ஈசனா ம்பாறை என்றும், குடிவண்டை என்றும் அழைக்கப்பட்டுள்ள து. இங்கு பாழடைந்த நிலையி ல் உள்ள கோவிலில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சை பல்கலைக்கழகம் கல்வெட்டியில் மற்றும் தொல்லியல்துறை கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன், டாக்டர் ராஜேவேல் வழிகாட்டுதலில் நடத்திய ஆய்வில் இந்த கல்வெட்டு மற்றும் தகவல் கண்டெடுக்கப்பட்டது. பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பாண்டி பெருந்தேவிக்கும், சோழிங்க அரையனுக்கும் பிறந்த அரட்டவி முத்தரையன், தன்னுடைய பெற்றோர் நினைவாக எட்டாம் நூற்றாண்டில் காளேஸ்வரரர் என்ற சிவன் கோவிலை பாறையின் மீது கட்டினார். கோவிலில், "தன்னுடைய காலத்துக்கு பிறகு கோவிலை எவர் பராமரித்து சுபகாரியம் செய்தாலும், அவர் கால் பாதங்களை தன் தலைமீது வைத்து வணங்குவேன்' என்று கோவில் முன் உள்ள பாறையில் எழுதிவைத்துள்ளார்.


தட்டையூர் நாடு என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பிற்காலத்தில் சோழர் ஆட்சியின் கீழ் வந்த பிறகு, பல நூற்றாண்டு பழமையான சிவன் கோவில் ஒன்று ஈசனாம் பாறையில் இருந்த தகவல் தெரிந்த மூன்றாம் குலோத்துங்க சோழன், நிலம் தானமளித்து, பொன்னும் பொருளும் அளித்து தேவதானத்தை உருவாக்கினார்.


மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலமான 1174 முதல் 1218க்கு இடையே இக்கோவிலை கட்டியுள்ளார். 12ம் நூற்றாண்டில் உருவான இக்கோவிலில், இத்தகவல் குறித்து கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் 16 சிறப்பு பெயர்களில் ஒன்றான திரிபுவன சக்ரவர்த்தி கோனாரிகொண்டான் என்ற பெயரில் கல்வெட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. "காளேஸ்வரனை வணங்க வருவோர், பொன், பொருள், தானியம், பணம் தானமாக செய்வோருக்கு சிவனின் சகல சௌபாக்கியமும் பெற்று நலமுடின் வாழ்வர். இந்த ஆணையை ஓலை நாயகன் நாட்டு அதிகாரி காடகவின முதலி, கல்லிலும் செம்பிலும் செதுக்கி கொள்ளலாம் என்று ஆணையிட, வையமாந்தவராயன் எழுதியதாக' கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள து. மேலும், "இந்த செய்தி சூரியனும், சந்திரனும் உள்ளகாலம் வரை செல்லுபடியாகும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார். தற்போது இக்கோவில் இடிபட்டு, சிலைகள் சிதைந்து, வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. அரட்டரவி முத்தரையன், மூன்றாம் குலோத்துங்க சோழனை போன்று எவராவது இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Top
* 3.தி.மு.க., இளைஞரணி அன்னதானம் வழங்கல்

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், துணை முதல்வர் ஸ்டாலின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது.வெண்ணெய்மலை அன்புகரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் காப்பகத்தைச் சேர்ந்த 119 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டன.

தாந்தோணிமலை அன்பாலயம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தைச் சேர்ந்த 61பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வெள்ளியணை ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளைச் சேர்ந்த 38 குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மதிய உணவு உபய திட்டத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டது. கரூர் யூனியன், நகரம், தாந்தோணி, இனாம் கரூர் மற்றும் தாந்தோணி நகரம் ஆகியவற்றுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆறாயிரத்து 152 தேர்வு அட்டைகள் வழங்கப்பட்டன.தொண்டரணி அமைப்பாளர் ஜெயபால், டி.என்.பி.எல்., மனோகர், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment