* 1.திருமீயச்சூர் கோயிலில் இன்று லட்சார்ச்சனை விழா
திருவாரூர்:பேரளம் அருகே திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயிலில் இன்று(8ம் தேதி) லட்சார்ச்சனை நடக்கிறது.இன்று காலை முதல் மாலை வரை 10 காலம் லட்சார்ச்சனை. 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம், கலச பூஜை, அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. இரவு திருப்பாவாடை எனும் மகா நைவேத்யத்தில் சர்க்கரை பொங்கல் படையலை குளமாக அமைத்து அதன் நடுவே நெய்குளம் அமைத்து அம்பாளின் திருஉருவம் நெய் குளத்தில் தரிசன காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், நிர்வாக அதிகாரி கவியரசு, ஆதி சைவ சிவாச்சார்யார்கள் கைலாசம், ரவிச்சந்திரன் மற்றும் பலர் செய்துள்ளனர்.
Top
பொது
* 1.ஸ்ரீசாய்ராம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீசாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் மன்னார்குடி அரசு வக்கீல் தர்மராஜன் தலைமையில் நடந்தது. முதல்வர் லட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை தஞ்சை கிங்ஸ் கல்லூரி சேர்மன் ராஜா வழங்கினார். இதில், ஷர்மிளா ராஜா, சினிமா நடிகர்கள் மயில்சாமி, கிங்காங், சென்சன்பாஸ்கர் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்தினர்.
Top
* 2.இலவச கண் சிகிச்சை முகாம்
மன்னார்குடி: மன்னார்குடி லயன்ஸ் சங்கம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், டாக்டர் தர்மராஜன் ஆகியோர் பெற்றோர் சிவானந்தம், அரும்புஅம்மாள் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டாக்டர்கள் காவ்லிஅஸ்டூஷ், மேக்னா, ஸ்ருதி ராஜகோபால் தலைமையிலான மருத்துவக்குழுவினர் செய்தனர். 321 பே ருக்கு கண் பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், 62 பேர் கண் அறுவை சிகிச்�காக தேர்வு செய்யப்பட்டனர். லயன்ஸ் சங்க தலைவர் ராமச்சந்திரன், டாக்டர் அசோக்குமார், ஸ்ரீதர், மாவ ட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் ராஜப்பா, பின்லே பள் ளி என்.எஸ். எ ஸ்., திட்ட அலுவலர் தன்ராஜ் உட்பட பலர் பங்கே ற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், டாக்டர் தர்மராஜன் குடும்பத்தார் செய்திருந்தனர்.
Top
* 3.மெட்ரிக்.பள்ளி ஆண்டு விழா
மாயவரம்மயிலாடுதுறை ஏ.ஆர்.சி. காமாட்சி மெட்ரிக். பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.வருவாய்த்துறை அலுலவர் சபீதாதேவி தலைமை வகித்தார்.தாளாளர் ஏ.ஆர்.சி.விஸ்வநாதன்ச்ன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் சத்தியேந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முதல்வர் கண்ணகி ஆண்டறிக்கை வாசித்தார்.மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
Top
* 4.மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சந்திரசேகரன் பாராட்டு
திருவாரூர்:மாநில அளவில் நடந்த கேரம் விளையாட்டுப் போட்டியில் 2, 3ம் இடம் பெற்ற திருவாரூர் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சந்திரசேகரன் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூனியர் பிரிவில் கிருஷ்ணகிரியில் கேரம் போட்டி நடத்தப்பட்டது. இதில் திருவாரூர் கேம்ப்பைன் நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2, 3ம் இடங்களை பிடித்தனர். இதையடுத்து வெற்றிபெற்ற கேசியபிரியா, நிவேதா குமார் ஆகியோருக்கு வெள்ளிப்பதக்கம், தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் ஸ்ரீஹரிநிதீஷ், வசந்த் ஆகியோருக்கு வெண்கலப்பதக்கம், தலா 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசுபெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சந்திரசேகரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். நகராட்சி துணைத்தலைவர் சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Top
சம்பவம்
* 1.பூரண மதுவிலக்கு கோரி மறியல்: 80 பேர் கைது
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடைகள் முன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே த.மு.மு.க., மாவட்ட பொருளாளர் முகம்மது அலீம் தலைமையில் த.மு.மு.க.,வினர் டாஸ்மாக் கடை முன் மறியலில் ஈடுபட்டனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க.,வினர் 50 பேரை திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.
* தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் மனித நேய மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கு கோரி மதுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கலந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
Top
* 2.டிராக்டர் மோதி மாஜி பஞ்., தலைவர் சாவு
கோட்டூர்: கோட்டூர் ஒன்றியம் பைங்காட்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் (55). ஊராட்சி முன்னாள் தலைவர். இவர் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நெல் மூட்டை ஏற்றி வந்த டிராக்டர் திடீரென குணசேகரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசேகரன் அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தலையாமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாலிபர் பலி: கோட்டூர் ஒன்றியம் திருமக்கோட்டை சாலையில் உள்ள மின்மாற்றி அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த வாலிபர் திருமக்கோட்டை அருகே கனியாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (19) என்பது தெரியவந்தது. இவர் திருமக்கோட்டை சாலையில் இரவில் நடந்து சென்றபோது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவி சாவு : நாகை அருகே பரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமளா (18). பிளஸ் 2 மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் மனைவி சுபா (26). இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஷியாமளாவை, சுபா அவதூறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷியாமளா விஷம் குடித்து இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஷியாமளாவின் தந்தை மாணிக்கம், அண்ணன் பாலமுருகன் ஆகியோர் சுபாவை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த சுபா நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு தரப்பு புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment