Sunday, March 7, 2010

திருவண்ணாமலை

* 1.படிப்பில் ஆர்வத்தை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் : முதன்மைக்கல்வி அலுவலர் வலியுறுத்தல்

செய்யாறு: "சொல்லிக் கொடுக்கும் வகைகளில்தான் படிப்பில் ஆர்வம் வளரும். அதற்கான ஆர்வத்தை வளர்ப்பதில் ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டும்' என திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலமுருகன் கூறியுள்ளார். செய்யாறு அடுத்த மோரணம் வித்ய விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. தாளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.


செயலாளர் கந்தசாமி வரவேற்றார். முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் தளபதி, மாவட்ட கல்வி அதிகாரி புண்ணியகோட்டி, மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர்கள் கலைச்செல்வி, வாசுதேவன், நேர்முக அதிகாரிகள் சத்யநாதன், ஜோசப்ராஜ் மற்றும் மாநில இயக்குனரக கண்காணிப்பாளர் துரை, பள்ளி இயக்குனர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் மாவட்ட லயன்ஸ் ஆளுநர் தளபதி பள்ளிகளில் படிப்போடு சிறந்த பண்பாடு, ஒழுக்கம், சீரிய சிந்தனைகளை கற்றுத்தர வேண்டும் என்று பேசினார்.விழாவில், முதன்மைக்கல்வி அதிகாரி பாலமுருகன் பேசியதாவது: எங்கெல்லாம் தரமான கல்வி தரப்படுகிறதோ அங்கெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை தானாக பெருகிவிடும். கற்றுக்கொள்ள பள்ளிகளுக்கு ஆர்வமாக மாணவர்கள் வருவதே கல்வியின் வெற்றியாகும். அதற்கான சூழ்நிலைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும்.மாணவர்களுக்கு கற்றுகொடுக்கும் வகைகளில் தான் படிப்பின் மீது அவர்களுக்கு ஆர்வம் வரும். அதற்கான ஆர்வத்தை வளர்ப்பதில் ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.இளமையில் அளிக்கும் தரமான கல்வி தான், மாணவர்களின் வாழ்க்கையின் அடித்தளமாக அமையும்.கல்வியை வெறும் வேலை வாய்ப்பை தரும் கருவியாக மட்டும் பார்க் கக்கூடாது. பொறுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம், தேசப்பற்று இவைகளையும் கற்றுத்தரவேண்டும்.பெற்றோரின் சிரமங் களை பிள்ளைகள் உணரும் வகையில், பாடங்களைப் புகட்ட வேண்டும். எதிர்கால சமுதாயத்திற்கு பயன்தரும் வகையில் மாணவர்களுக்கு சிறந்த ஒழுக்க நெறிகளையும் கற்றுத்தரவேண்டும்.இவ்வாறு முதன்மைக்கல்வி அதிகாரி பேசினார்.நிகழ்ச்சிகளை பள்ளி முதல்வர் நர்மதா தேவி தொகுத்து வழங்கினார்.
Top

பொது

* 1.போளூரில் நடந்த காப்பீட்டு முகாமில் 202 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு

போளூர்: போளூரில் நடந்த உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 202 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.களம்பூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உயிர் காக்கும் உயர்சிகிச்சை காப்பீட்டு திட்டத் திற்கான சிறப்பு மருத்துவ முகாம் போளூரில் நடந்தது.

சென்னை செட்டிநாடு மருத் துவமனையை சேர்ந்த பல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிசோதனையும், சிகிச்சையும் பெற்றனர். 401 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில், 46 பேருக்கு பொது அறுவை சிகிச்சை, 54 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை, 49 பேருக்கு மகப்பேறு தொடர்பான அறுவை சிகிச்சைகள், 5 பேருக்கு காது, மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை, 38 பேருக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கும், 10 பேருக்கு கண் அறுவை சிகிச்சை என மொத்தம் 202 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறப்பு பஸ்கள் மூலம் சென்னை செட்டிநாடு மருத் துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.ஏற்பாடுகளை களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பிரகாஷ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் செய் திருந்தனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Top
* 2.அடிஅண்ணாமலையார் கோயில்திருப்பணி : மார்ச் 11ம் தேதி நடத்த ஏற்பாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடிஅண்ணாமலையார் கோயில் திருப்பணிக்காக வரும் 11ம் தேதி பாலாலயம் நடப்பதாக கோயில் இணை ஆணையர் பத்மநாபன் தெரிவித்தார்.இதுகுறித்துஅவர் மேலும் கூறியதாவது:அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிஅண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயிலில் 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது. இப்போது இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் தொடங்கப்படுகிறது. இதற்காக வரும் 11ம் தேதி பாலாலயம் நடக்கிறது.48.5 அடி உயரம் உள்ள ராஜகோபுரம், விநாயகர், மூலவர், அம்மன், பழனியாண்டவர் விமானங்கள், பரிவாரமூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் என்று அனைத்திலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.அறநிலையை துறை சார்பில் 25 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர விநாயகர், பழனியாண்டவர் விமானங்கள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னதிகளின் திருப்பணிகள், பக்தர் கள் நிதியுதவி மூலம் செய்யப்படுகிறது.கிரிவல பாதை ஆடையூர் ரோடு சந்திப்பில் உள்ள அபய மண்டபம் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பக்தர் ஒருவரின் நிதியுதவி மூலம் சீரமைக்கப்பட உள்ளது.

அடிஅண்ணாமலையில் உள்ள அபய மண்டப வடிவில் இந்த அபய மண்டபம் சீரமைக்கப்படும்.அடிஅண்ணாமலையார் கோயில் கோபுரங்கள், சுவர்களில் பறவைகளின் எச்சங்கள் மூலம் சிறு, சிறு செடிகள் வளர்க்கின்றன. இந்த செடிகள் வளராமல் தடுக்கும் வகையில் நவீன கெமிக்கல் பேஸ்ட் அந்த இடங்களில் பயன்படுத்தப்படும். வெயில் காலமாக இருப்பதால், கோயில் வளாகத்தில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக தேங்காய்நார் "மேட்' விரிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டு பகுதிகளில் நடந்தால் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்கும் வகையில் நவீன பெயின்ட் பூசப்படும். இவ்வாறு இணை ஆணையர் பத்மநாபன் தெரிவித்தார்.
Top
* 3.நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா

வந்தவாசி:தெள்ளார் ராஜா நந்திவர்மன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந் தது.கல்லூரி தலைவர் முத்து துவக்கி வைத்தார். பொருளாளர் பழனிச்சாமி, துணை முதல்வர் குஞ்சிதபாதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். திருவள்ளுவர் பல் கலை., என்.எஸ்.எஸ்., திட் ட ஒருங்கிணைப்பாளர் சிவசந்திரபோஸ் பேசினார். கல்லூரி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்தன், சங்கர், ராதாகிருஷ்ணன், மணி, கிருஷ்ணன், தருமபிள்ளை, ராமதாஸ், ரங்கசாமி உட்பட பலர் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர் மீனாசங்கரி, ராஜகோபால் மற் றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
Top
* 4.பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை : திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக் நகரில் உள்ள ஓம்சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி 21வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் நாகசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சுந்தரி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆலோசகர் எம்,எல்.ஏ., விஜயகுமார் வரவேற்றார். விழாவில் கலெக்டர் ராஜேந்திரன், எம்.பி., வேணுகோபால் ஆகியோர் பேசினர்.எம்,எல்.ஏ.,க்கள் பிச் சாண்டி, வேலுதுரை (சேரன்மாதேவி), பழனிச்சாமி (மொடக்குறிச்சி), ராமசுப்புராம் (திருமயம்), எதிரொலி மணியன் (பெரணமல்லூர்), தி.மலை நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள், ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.தி.மலை ஒன்றிய சேர்மன் காமாட்சி, முன்னாள் சேர் மன் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் கென்னடி, சிஷ் யா மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் மணி உட்பட பலர் கலந்துகொண்டனர். தாளாளர் கலா நன்றி கூறினார்.
Top

பிரச்னைகள்

* 1.வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தாதமம்

போளூர்: வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தாதமம் செய்து வருவதாக போளூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.போளூர் தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டம் தாசில்தார் செல்வரசு தலைமையில் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் பாரி, சமூக நல பாதுகாப்பு தாசில்தார் அனுஷா, துணை தாசில்தார் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கடந்த ஆண்டு போளூர் தாலுகாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால் ஏராளமான நெல் மற்றும் கரும்பு பயிர்கள் கருகிவிட்டன. வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான நஷ்டஈடு வழங்குவதாக கூறி இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாயிகளிடம் பிரிமியம் வசூல் செய்கின்றன. ஆனால் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்ட பின்னர் நஷ்டஈடு வழங்க கோரி விண்ணப்பித்தால், காலதாமதம் செய்து வருகின்றனர். இதுவரை போளூர் தாலுகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்தால்தான் நாங்கள் நஷ்டயீடு தருவோம் என கூறுகின்றனர். அப்படியென்றால் தனிநபரிடமும் பயிர் பாதுகாப்பு திட்டத்திற்காக இன்சூரன்ஸ் தொகை வசூல் செய்வது ஏன்? பிரிமியம் வசூல் செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன.


விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின் சப்ளை எப்போது வரும் என தெரியாமல் இரவும் பகலும் காத்திருக்கும் நிலை உள்ளது. மின் பற்றாக்குறை காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாததால், பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குப்பனத்தம் மற்றும் மிருகண்டா அணைகளை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது, வழியில் உள்ளவர்கள் தண்ணீரை தடுத்து, நிறுத்திவிடுகின்றனர். அல்லது வேறு பகுதிக்கு திருப்பிவிடுகின்றனர். எனவே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது கடைமடை வரை செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். நிலம் மற்றும் வீட்டுமனைகளை உட்பிரிவு செய்து பட்டா வழங்க கோரி மனு செய்தால் பெயர்கள் மாறி மாறி வந்துவிடுகிறது. கேட்டால் சரிவர பதில் சொல்லாமல் வருவாய் துறையினர் அலையவிடுகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தனிநபர் கடன்கள் வழங்கப்படுவதில்லை, குழுக்களாக வந்தால்தான் தருவோம் என்கிறார்கள். தனி நபர் கடன் தரக்கூடாது என அரசு உத்தரவு ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால் அதை தெரிவிக்க வேண்டும்.


கரையாம்பாடி பகுதியில் 200 ஏக்கர் வாழை சாகுபடி நடக்கிறது. ஆனால் வாழை பயிர்களுக்கான பயிர் காப்பீடு கரையாம்பாடி பகுதிக்கு பொருந்தாது எனவும், படவேடு பகுதிக்குதான் பொருந்தும் எனவும் முரண்பாடான தகவல்களை சொல்கின்றனர். எனவே அனைத்து பகுதி கிராமங்களுக்கும் வாழை பயிர்களுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.போளூர் தாலுகாவில் உள்ள வேளாண் டெப்போக்களில் யூரியா ஸ்டாக் இல்லை என தெரிவிக்கின்றனர். வெள்ளை பொட்டாஷ் வரவழைத்து வழங்கும்படி பல முறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே வேறு மாவட்டத்திற்கு சென்று வெள்ளை பொட்டாஷ் வாங்கி, பயன்படுத்தி வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் சுமை, செலவு ஏற்படுகிறது.கலசப்பாக்கம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் 30 விசாயிகளை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சுற்றுலா சென்று வந்தவர்களின் பட்டியலை தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் பேசினர்.இதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசியதாவது:பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காதது குறித்து விசாரித்து, அடுத்த கூட்டத்தில் உரிய பதில் அளிக்கப்படும்.தனிநபர் விவசாய கடன் வழங்கப்படுவதில்லை என கூறப்படுவது உண்மையல்ல. வெள்ளை பொட்டாஷ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பனத்தம் மற்றும் மிருகண்டா அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது கடைமடை வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
Top
* 2.100, 102 'சேவை' முடக்கம் அதிருப்தியில் பொதுமக்கள்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை பகுதியில் அவசர போலீஸ் 100, ஆம்புலன்ஸ் 102 டெலிபோன் சேவை இயங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் டெலிபோன் எண்கள் "100' அவசர போலீசுக்கும், "101' தீயணைப்பு துறைக்கும், "102' ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கும் இந்த சேவை எண்களை பொது மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.திருவண்ணாமலை அருகே 2 அரசு பஸ்கள் மோதி நேற்று விபத்து ஏற்பட்டபோது பொதுமக்கள் 102 எண்ணையும், 100 எண்ணையும் பலமுறை டயல் செய்தும் தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி யடைந்தனர். ஆம்புலன்ஸ் எண்ணான 102ஐ தொடர்பு கொள்ள முடியவில்லை.ஆபத்து காலத்தில் அவசர தொடர்புக்காக பயன்படும் 100, 102 எண்களை மீண்டும் இயங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Top
* 3.திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 'சிடி ஸ்கேன்' அடிக்கடி பழுது ஆவதால் நோயாளிகள் அவதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் "சிடி ஸ்கேன்' அடிக்கடி பழுது ஆவதால் நோயாளிகள், தனியாரிடம் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நவீன புதிய ஸ்கேன் வசதிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.திருவண்ணாமலை தனி மாவட்டமாக 1989ல் உதயமானபோது இங்கு செயல்பட்ட தாலுகா மருத்துவமனை மாவட்ட மருத்துவமனை அந்தஸ்து பெற்றது. 2000ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தி.மலையில் புதிய கலெக்டர் அலுவலகம் திறந்து வைக்க வந்தபோது அரசு மருத்துவமனையில் "சிடி ஸ்கேன்' எடுக்கும் புதிய மையத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மருத்துவ கழகம் மூலம் இந்த ஸ்கேன் சென்டர், அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டது.இங்கு "ஸ்கேன்' எடுக்க, உள்நோயாளிக்கு ரூ.350ம், வெளிநோயாளிகளுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தினமும் 30 முதல் 50 பேருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. தனியார் டாக்டர்களும் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இங்கு ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தனர். இதனால் இதன்மூலம் அரசுக்கும் வருமானம் கிடைத்தது. இந்த துறையில் 4 டெக்னீசியன்கள் பணிபுரிகிறார்கள்.இந்நிலையில் இப்போது ஸ்கேன் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க முடியாத நிலை உள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:நவீன "எம்ஆர்ஐ ஸ்கேன் மிஷின்' வருவதாக மருத்துவ அதிகாரிகள் சொன்னார்கள்.

இதுவரை வரவில்லை, ஏற்கனவே இருந்த ஸ்கேன் பழுதாகி உள்ளதால் தனியாரிடம் ஸ்கேன் எடுக்க போகிறோம். அங்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகிறது. இந்த மாவட்டத்தில் பெரும் பாலும் கூலித்தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் வாழ்கிறார்கள். எனவே புதிய மிஷின் வாங்க மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து மருத்துவத்துறை வட்டாரங்களில் கூறியதாவது:சி.டி.ஸ்கேன் என்பது கம்யூட்டர் மையமாக்கப்பட்ட நவீன ஸ்கேன் ஆகும். இதன் மூலம் மூளையில் ஏற்படும் கசிவு, நுட்பமான எலும்பு முறிவுகள், கட்டிகள், சிறுநீர் பையில் உள்ள கற்கள் மற்றும் காயங்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.இந்த கருவி, மருத்துவமனைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. வழக்கமான உழைப்பை விட அதிகமாக உழைத்து விட்டது.

எனவேதான் அடிக்கடி பழதாகிவிடுகிறது. புதிய ஸ்கேன் கருவி வராததால் இந்த கருவியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதனால் அடிக்கடி மின்சர்க்கியூட்களில் பழுது ஏற்படுகிறது.இப்போது நவீன "ஸ்பிரிட்டல் ஸ்கேன்' என்ற கருவி நிறுவலாம். இதன் மூலம் விரைவாக ஸ்கேன் எடுக்கலாம். தொழில்நுட்பமும் உயர்வாக இருக்கும். இங்கு பணி புரிந்த ஸ்கேன் டாக்டரும், அதற்கான பணி வாய்ப்பு தொடர்ந்து இல்லாததால் விழுப்புரம் மருத்துவக்கல்லூரிக்கு மாற்றி சென்றுவிட்டார்.எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பழுதடைந்த சிடி ஸ்கேன் கருவி மாற்றப்பட்டு, நவீன ஸ்கேன் வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்'இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Top

பொழுது போக்கு

* 1.மாநில கேரம் போட்டி மாணவிகள் சாதனை

திருவண்ணாமலை: திருவண்ணாலை கெங்குசாமி நாயுடு பள்ளி மாணவிகள், மாநில கேரம் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கிருஷ்ணகிரி மா வட்ட விளையாட்டு அரங் கில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி நடந்தது.இதில், ஜூனியர் இரட்டையர் பிரிவில் திருவண்ணாமலை மாவட் டத்தில் இருந்து கலந்து கொண்ட தி.மலை கெங்குசாமிநாயடு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முஹமத்பீ, முபஷிராபானு ஆகியோர் மாநில அளவில் வெண்கல பதக்கம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசு தொகை பெற்றனர்.சாதனை படைத்த மாணவிகளை, பள்ளித்தலைவர் சின்ராஜ், செயலாளர் புகழேந்தி, பொருளாளர் சம்பத், முதல்வர் சிவரங்கன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புகழேந்தி, கைப்பந்து பயிற்சியாளர் முனுசாமி மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment