'டிவி' சுயம்வரம் நிகழ்ச்சியில் டிம்பியை மணந்தார் ராகுல்
மும்பை:"டிவி'யில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் ராகுல் மகாஜன், மேற்கு வங்க மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவில் தேனிலவு கொண் டாட வசதியாக, தனது பாஸ்போர்ட் முடக்கத்தை நீக்கும்படி அவர் கோரியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜன், கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் தனது சகோதரர் பிரவீன் மகாஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பிரவீன் மகாஜன், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் கோமா நிலைக்கு சென்று கடந்த வாரம் காலமானார்.
இந்நிலையில், என்.டி."டிவி'யின் ரியாலிட்டி �ஷாவில் சுயம்வரம் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே, பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தை வைத்து நடைபெற்ற இந்தத் தொடர் மிக பிரபலமானது.தற்போது ராகுல் மகாஜனை வைத்து மணமகள்களை தேர்வு செய்யும் தொடரும் பிரபலமானது. ராகுல் மகாஜனை மணக்க 16 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 14 பேர் மட்டுமே அனைத்து நிபந்தனைகளுக்கும் பொருந்தியதால் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றில் டிம்பி, நிகுஞ்ச், ஹர்ப்ரீத் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
இந்த மூன்று பேரில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த டிம்பி கங்குலியை(21), ராகுல் மணமகளாக தேர்வு செய்தார். நடிகை ராக்கி சாவந்தை போல நடக் காமல், ராகுல் தான் தேர்வு செய்த டிம் பியை மும்பை ஓட்டலில் "டிவி' பிரபலங்களுக்கு முன்னால் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.ராகுல்(34) ஏற்கனவே தனது குழந்தைப் பருவ நண்பர் ஸ்வேதா சிங்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால், போதை மருந்து பயன் படுத்தியது தொடர்பாக ராகுலை பிடிக்காமல் அவர் விவாகரத்து செய்து விட்டார். இந்த போதைமருந்து வழக்கில் ராகுலின் பாஸ்போர்ட் முடக்கப் பட்டது.தற்போது புதிய மனைவி டிம்பியுடன் மாலத் தீவில் தேனிலவு கொண்டாட மகாஜன் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது பாஸ்போர்ட் முடக்கத்தை நீக்கும் படி அவர், கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
திருமலை லட்டுக்குஅரியானா நெய்
நகரி:திருமலை திருப்பதி தேவஸ்தானம், அரியானா அரசிடம் நெய் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க நெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப லட்டு பிரசாதம் வழங்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்தது. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் லட்டுகள் வரை மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதற்கு லட்டு தயாரிக்க தேவையான நெய் பற்றாக்குறையும் ஒரு காரணம் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம், தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மாநில அரசு சார்பில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தி கழகத்திடம் இருந்து நெய் டின்களை வாங்கி வருகிறது. தினசரி லட்டு தேவைக்கு ஏற்ப நெய் சப்ளை செய்ய இந்த இரு நிறுவனங்களால் இயலவில்லை. இதனால், நெய் பற்றாக்குறையை சமாளிக்க அரியானா பால் உற்பத்திக் கழகத்திடம் இருந்து நெய் வாங்க தேவஸ்தான அதிகாரிகள், அம்மாநில அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெய் சப்ளை செய்ய அரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். போதுமான அளவு நெய் கிடைத்த பின் லட்டு உற்பத்தியை பெருக்கி, பக்தர்களின் லட்டு தேவை பூர்த்தி செய்யப்படும்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு குவிகிறது : 13 ஆண்டு கனவை நனவாக்க மத்திய அரசு தீவிரம்
புதுடில்லி : லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்மசோதாவை நிறைவேற்றி 13 ஆண்டு கனவை நனவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும், சர்வதேச பெண்கள் தினமான இன்று, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
"பெண்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பங்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்தியாவில் பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது.முதல் முதலாக, 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அம்முயற்சி நிறைவேறவில்லை.
இந்நிலையில், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் காய் நகர்த்தியது. ஜனாதிபதி, லோக்சபா சபாநாயகர், ஆளும் கட்சி கூட்டணித் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என, நாட்டின் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் தற்போது பெண்களே உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தான் நல்லது என, காங்கிரஸ் முடிவு செய்தது.
இதன்படி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா, சர்வதேச பெண்கள் தினமான இன்று, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.மசோதா நிறைவேறும்போது, அனைத்து எம்.பி.,க்களும் சபையில் இருந்து, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும், என, பா.ஜ.,சார்பில் கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இடதுசாரி கட்சிகளும் மசோதாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
அதே நேரத்தில், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற முக்கிய கட்சிகள், மசோதாவை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளன. "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' என்று, இந்தக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இன்னும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,"இந்த மசோதா மிகவும் அபாயகரமானது. தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள், பார்லிமென்டுக்கு தேர்வு செய்யப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கை இது' என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரேம் சந்த் குப்தா கூறுகையில்,"ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எங்கள் எம்.பி.,க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். இதற்கான கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
ஆதரவு: பெண்கள் மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறுவதற்கு 156 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில், காங்கிரசுக்கு 71 உறுப்பினர்களும், பா.ஜ.,வுக்கு 45 உறுப்பினர்களும், இடதுசாரி கட்சிகளுக்கு 20 பேரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுதவிர, தேசியவாத காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க., - பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. இதனால், இந்த மசோதா எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment