* 1.எதிர்கட்சிகள் போராட காரணம் தேடுகின்றன : அமைச்சர் பொன்முடி ஆவேசம்
விக்கிரவாண்டி : முதல்வர் செய்து வரும் சாதனைகளால் எதிர்கட்சியினர் போராட காரணம் தேடுகின்றனர் என அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் நடந்த அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டத்திலும் 86 வயதிலும் முதல் வர் கருணாநிதி பங்கேற்றுள்ளார். இந்த மருத்துவக் கல்லூரி ஏற்பட பல தடங்கல் ஏற்பட்டது. இதையெல்லாம் தகர்த்து முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உதவியோடு கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக 25ம் இடத்தில் உள்ளது. முதல்வர் கருணாநிதி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும். முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் விழுப்புரம் மாவட்டம் சிறப்பு பெற்று வருகிறது. தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவது தான் முதல்வர் கருணாநிதியின் சாதனை. விழுப்புரம் மாவட்டத்திற்கு இரு பொறியியல் கல்லூரிகள் கொடுத்தார். தற்போது மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து மாவட்டத்தை கல்வியில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவியுள்ளார். விழுப்புரம் மாவட் டத்திற்கு சிப்காட் அமைக்கவும், திருவள்ளுர் பல்கலைக் கழகம் சார் பில் முதுகலை மையத்தை துவக்க அனுமதி வழங்க வேண்டும்.
தற்போது 5ம் முறையாக முதல் வராக இருக்கும் போது செய்த சாதனை திட்டங்களை போல் யாரும் செய்ததில்லை. இது போன்ற எண்ணற்ற சாதனைகள் செய்வதால் எதிர்க்கட்சியினர் போராட காரணம் தேடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மட்டும் பின் தங்கி இருக்க வில்லை. தற்போது முதல்வர் அறிவித்த திட்டமான கான்கிரீட் வீடு திட்டத்தில் பயன் பெறப்போவது விழுப்புரம் மாவட்ட மக்கள் தான் அதிகம். ஏனென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தான் குடிசைகள் அதிகம் உள்ளன. மக்கள் திட்டங்கள் சென்றடைய விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் பக்கம் இருப்பர். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
அமைச்சர் துறைமுருகன் பேசுகையில், இந்த விழா அரசு விழாவாக நடக்காமல் மக்கள் விழாவாக நடக்கிறது. பணத்தின் மதிப்பு குறைந்து வரும் போது ஒரு ரூபாய்க்கு எதுவும் கிடைக்காது என இருந்த நிலையை மாற்றி ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கியது தமிழக முதல்வர் தான். தி.மு.க.,ஆட்சியில் கூடுதல் வரி விதிக்கவில்லை. சாதிக்கும் திறன் இருப்பதால் இலவச திட் டங்கள் அறிவிக்க முடிகிறது. பின் தங்கிய மாவட்டமாக இருப்பதை மாற்ற அரசு எடுக்கும் நடவடிக் கைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
Top
* 2.விழுப்புரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சிறப்பான வரவேற்பு
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா, மருத்துவக் கல் லூரி திறப்பு விழா மற்றும் தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று காலை 10.25 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுப்புரம் வந்தார்.
முதல்வர் வந்த கோச் ரயிலின் கடைசியில் இருந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கிய பிறகு ரயிலை முன்னே நகர்த்தி வந்தனர். முதல்வரின் கோச் இருக்குமிடம் வந்த பிறகு துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி முதலில் ஏறிச் சென்று முதல்வரை பார்த்து வந்தனர். அவருக்கு பின்னால் 10.40 மணிக்கு முதல்வர் வெளியே வந்தார். அருகில் இருந்த மற்றொரு வழியாக உதவியாளர் சண்முகநாதன் வெளியே வந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பழனிசாமி, டி.ஐ.ஜி., மாசானமுத்து, டி.ஆர்.ஓ.,கதிரவன், எஸ்.பி.,பகலவன் வரவேற்றனர்.
அங்கிருந்து சக்கர நாற்காலியில் ஏற்கனவே தயாராக இருந்த காரில் முதல்வர் அமர்ந்தார். 10.45 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்து கலைஞர் அறிவாலயத்திற்கு புறப்பட்டுச் சென்றார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் முதல்வருடன் காரில் வந்தனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், புஷ்பராஜ், திருநாவுக்கரசு, கண் ணன், அங்கையற்கண்ணி, மாவட்ட விற்பனைக் குழு தலைவர் ராதாமணி, காங்.,எம்.எல்.ஏ.,சிவராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மைதிலி, நகராட்சி சேர்மன் ஜனகராஜ், ஒன்றிய சேர்மன்கள் பிரசன்னதேவி, ரத்னாகணபதி, முன் னாள் எம்.எல்.ஏ.,ஏ.ஜி.சம்பத், தள பதி நற்பணி மன்ற தலைவர் கவுதம் சிகாமணி உட்பட பலர் உடனிருந்தனர்.
Top
* 3.ஆட்சிக்கு துணை நிற்க வேண்டும்: ஸ்டாலின்
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் பேசுகையில், "ஐந் தாவது முறை முதல்வராக கருணாநிதி பதவியேற்ற பிறகு தேர்தல் நேரத்தில் தரப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டுள்ளதாக இங்கே பேசினர். சொன்னது மட் டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றும் ஆட்சி கருணாநிதி ஆட்சியாகும். இந்த ஆட்சிக்கு என்றும் துணை நிற்க வேண்டும்' என்றார்.
அமைச்சர் பன்னீர்செல் வம்: அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் பேசுகையில், "96ம் ஆண்டு பொன்முடி வைத்த கோரிக்கை 2006ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது மாவட்டம்தோறும் புதிய மருத்துவ கல் லூரிகள் துவங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி விழுப்புரம் மாவட்ட மருத்துவ கல் லூரி இன்று திறக்கப்பட் டுள்ளது. 62 வயதில் வீட் டில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விட்ட ஜெ., இப்போது 6 மாத ஓய்விற் காக குளுகுளு பிரதேசம் செல்கிறார். ஆனால் 86 வயதிலும் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்முதல்வர் கரணாநிதி.
முதல்வர் இப்போது சொல்லாததையும் செய் யும் வகையில் குடிசை வீடுகளை கான்கீரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கலெக்டர் பெருந் திட்ட வளாகம், நீதிமன்ற வளாகம், புதிய மருத்துவகல்லூரி, பொறியியல் கல்லூரிகள் என விழுப்புரம் மாவட்டம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றார்.
Top
* 4.நிதி ஆதாரம் பார்த்து திட்டம் போடுவது மக்கள் நல அரசாக இருக்க முடியாது: கருணாநிதி
விழுப்புரம் : திட்டம் போட்டுவிட்டு செலவினைப் பார்ப்பதுதான் மக்கள் நல அரசாக இருக்க முடியும் என கருணாநிதி பேசினார்.
விழுப்புரத்தில் நேற்று இரவு நடந்த தி.மு.க., அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல் வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1949ல் அண்ணாதுரை தி.மு.க., உருவாக்கியபோது, அதில் பிரசாரக் குழு உறுப்பினராக இருந்து பின் பொருளாளர், அமைச்சராக இருந்து, தற்போது முதல்வராக இருக்கிறேன். 50 ஆண்டுகள் தோல்வி காணாத எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி வருகிறேன். தொடர வேண்டும் என அமைச்சர்கள் பேசியுள்ளனர்.
நான் செய்தது போதும், இருப் பவர்கள் செய்யட்டும் என 86 வயதை சுட்டிக்காட்டி, மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். வயதைக் கூறியதால் சோர்வை ஏற்படுத்தியது. எனது மனைவி வந்திருந்தால் வேதனையடைந்திருப்பார். சுறுசுறுப்பாக பணியாற் றும் வயதில் தூங்குபவர்களை எழுப்ப, வயதை சுட்டிக்காட்டி இளைஞர்களிடம் உற்சாகம் ஏற்படுத்த கூறியுள்ளனர்.
மற்ற இயக்கங்கள் லட்சியம், கொள்கைகளை சொல்லி ஆள் சேர்த்து நடத்துவார்கள். இது தி.மு.க.,வில் கிடையாது. 60 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி பெயரில் நீதி கேட்கும் கட்சியாக உருவானது. தற்போது தி.மு.க., பெயரில் இருந்தாலும் நீதிகட்சியின் கோரிக்கை மாறவில்லை.
நீதிக்கட்சியின் வேர் பட்டுப் போகவில்லை, விழுதாக பிரிந்த கட்சிகள் பட்டுப் போயிருக்கலாம். கொள்கை, திட்டங்களை ஜனநாயக ரீதியில் மக்களை திரட்டி சாத்வீக போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழ் மொழிக் காக போராடி 60 உயிர்களை கொடுத்தோம். பின் ஆட்சியை பிடித்து தமிழ்நாடு என பெயர் மாற்றத்தை கொண்டு வந்தோம்.
கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து போராடினோம், அதில் தாளமுத்து நடராசன், சின்னசாமி உள்ளிட்டோர் இறந்தனர். பிற மொழி ஆதிக்கத்தை தடுத்து தமிழை வாழவைக்க இந்த போராட்டங் கள். இதனால் ஏற்பட்ட புரட்சித் தீ தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தியது. தமிழனின் உணர்வை, பெருமையை காட்டி அதனை நிலைநாட்டிட அறப்போர் நடத்தி வெற்றி கொண்டோம். அன்று அண்ணா நடந்ததைப் போல் இன்றும் நடக்கிறேன். மற்றவர்களும் நடக்க வேண்டுகிறேன்.
இங்கே பொன்னால் ஆன நினை வுப் பரிசினை கொடுத்தபோது, அதில் அண்ணா, பெரியார் இருந்ததால் ஏற்றேன். இது நேராக கலைஞர் கருவூலத்திற்குத்தான் செல் லும். இதனை கருணாநிதி, ஸ்டாலின் சந்ததியினர் பார்த்து, கொள் கைக்காக பாடுபட்டதையும், மக் கள் ஏற்றதையும் தெரிந்து கொள் வார்கள்.
இது போன்ற நினைவுப் பரிசினை இதோடு நிறுத்திக் கொள் ளுங்கள். வாயால் வாழ்த்துங்கள் போதும். ஏழை மக்கள் ஏங்கிடும் வகையில் பொன்னால் ஆன பரிசுகளை கொடுக்க வேண்டாம். நான் ஏழையாகவே வாழ ஆசைப்படுகிறேன். கோபாலபுரம் வீட்டை மருத்துவமனைக்கு கொடுப்பதாக சொல்லியிருந்தேன். வரும் ஜூன் 3ம் தேதி எனது பிறந்த நாள் என கூறுகின்றனர், அன்று கொடுத்துவிடப் போகிறேன். பற்றில்லாமல் வாழ வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும். நம்மைப் பார்த்துதான் மக்களும் நடப்பர்.
மக்களைப் போல் ஏழையாக கூறவில்லை, மக்களையும் சமமான வசதியில் கொண்டு வர வேண்டும். ஊருக்கு உபதேசம் கூடாது நாமும் பின்பற்ற வேண்டும். பொன், பொருள் வாழ்விற்கு பயன்படாது, இதனை வெறுக்க கற்க வேண்டும். புத்தனைப் போல் துறவியாக சொல் லவில்லை, காந்தி, அண்ணா போல் எளிமையாக இருக்க வேண்டும்.
இனி தமிழகத்தில் குடிசை வீடுகள் கிடையாது, அத்தனையும் கான் கிரீட் வீடுகள் தான். அதிக குடிசையுள்ள இங்குதான் களமிறங்க உள் ளோம். இந்தாண்டு மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படும். எப்படி நிதி வரும் என சிலரது குரல் கேட்கிறது. நாங்கள் நினைத்தால் நிதிக்கு என்ன பஞ்சமா, ஏழைகளுக்கு உதவ எங்கு திரும்பினாலும் நிதி கிடைக்கும். பணம் எவ்வளவு உள் ளது என பார்த்து திட்டம் தீட்டக் கூடாது. திட்டம் போட்டுவிட்டு செலவை பார்ப்பதே மக்கள் நல அரசாக இருக்கும். இப்போதும் சென்னையில் வீடில்லாத ஏழை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் கேட்பதால் நாங்கள் செய்கிறோம்.
விரைவில் வரவு-செலவு திட் டத்தில் அறிவித்து 1800 கோடியில் நிறைவேறும். ஐ.நா. ஒப்பந்தப் படி ஊனமுற்றோர்களை இனி மாற்றுத் திறன் படைத்தவர்கள் என அழைக்க வேண்டும். தனி இலாகா கொண்டு வர 7வதாக இந்தியா கையெழுத்திட்டதோடு சரி. மத்திய அரசுக்கு நினைவுபடுத்துவோம். நிதி நிலை அறிக்கை முடிந்து தனி இலாகா அமைக்கப் படும். திட்டங்களை கொண்டு வர உங்கள் ஆதரவு தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
Top
* 5.அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்
விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 90 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் 79 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் 180 புதிய கட்டடங்கள் திறப்பு விழா, 75 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 203 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 90 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் உட்பட 245 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் 22 ஆயிரத்து 500 பயனாளிகள் பயன் பெறும் விழா நடந்தது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். கலெக்டர் பழனிசாமி வரவேற்றார். மருத்துவத் துறை முதன்மை செயலர் சுப்புராஜ் திட்ட விளக்கவுரையாற்றினார். சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். எம்.பி.,க்கள் கிருஷ்ணசாமி, ஆதிசங்கர், எம்.எல். ஏ.,க்கள் உதய சூரியன், புஷ்பராஜ், அங்கையற்கண்ணி, சிவராஜ், கண் ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி துணை முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டடங்களை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றினார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
விழாவில் டி.ஆர்.ஓ.,கதிரவன், முன்னாள் அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், வெங்கட்ராமன், வேங்கடபதி, முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் சம்பத், சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான், மாவட்ட விற்பனைக் குழு தலைவர் ராதாமணி, ஊராட்சி குழு துணைத் தலைவர் மைதிலி, ஒன்றிய கவுன்சிலர் மகாராணி, ஊராட்சி தலைவர் சாந்தி, காங்.,நகர தலைவர் குலாம்மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பி.ஆர்.ஓ.,பழனிசாமி தொகுத்து வழங்கினார். கல்லூரி டீன் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
Top
* 6.மகளிர் மசோதா ஸ்டாலின் நம்பிக்கை
விழுப்புரம் : ""முதல்வர் கருணாநிதி, விரைவில் மகளிர் மசோதாவையும் நிறைவேற்றித் தந்து பெருமை சேர்ப்பார்,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., கட்சி அலுவலக திறப்பு விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் பேசுகையில், ""தமிழுக்கு செம் மொழி அந் தஸ்தை பெற்றுத் தந்த தலைவர் கருணாநிதி. விரைவில் மகளிர் மசோதாவையும் நிறைவேற் றித் தந்து பெருமை சேர்ப்பார். ""இங்கு சீர்திருத்த, சுயமரியாதை திருமணத்தை அங்கீகரித்து கொடுத்ததோடு, நாடு முழுவதும் இதை நடைமுறைபடுத்த குரல்கொடுத்து வருகிறார் கருணாநிதி,'' என்றார்.
Top
* 7.நாடகம் நடத்தி வளர்ந்த கட்சி : துரைமுருகன் உருக்கம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் நாடகம் நடத்தி கட்சி வளர்த்த பழைய நினைவுகள் முதல் வருக்கு தோன்றும் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
விழுப்புரம் அறிவாலய கட்டட திறப்பு விழாவில் அவர் வாழ்த்தி பேசியதாவது: நகரங்கள் தோறும் தி.மு.க.,விற்கு சொந்தமான ஒரு இடம் இருக்க வேண்டும், அதற்கான சாவி என்னிடத்தில் இருக்க வேண்டும். வெளியூர்களுக் குச் செல்லும்போது அங்கு தங்கி செல்ல வேண்டும் என அண்ணா சொல்லுவார் என முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார். அண்ணாவின் அந்த கனவை தலைவர் கருணாநிதி தற்போது நிறைவேற்றி வருகிறார். ஒரு தலைவர் எப்படி நடக்க வேண்டும்,
தொண்டன் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கருணாநிதி திகழ்ந்து வருகிறார். பொன்முடியின் காலம் விழுப்புரத்தின் பொற் காலம் தான். விழுப்புரம் நிகழ்வு முதல்வரை பழைய நினைவிற்கு கொண்டு சென்றிருக்கும், அப்போது நாடகத் திற்கு வந்து துணிகளை உலர்த்தி போட்டுக் கொண்டு நடந்து சென்றதை நினைத்து பார்ப்பார். அப்படியெல்லாம் எளிமையாக இருந்து கட்சி வளர்த்து இன்று பிரமாண்ட கட்டடத்தை திறந்து வைக்கிறார் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
Top
* 8.வல்லம் ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 2.27 கோடி உதவித் தொகை: எம்.எல்.ஏ.,பேச்சு
செஞ்சி : வல்லம் ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு 2.27 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளதாக எம்.எல்.ஏ., கண்ணன் குறிப்பிட்டார். வல்லம் ஒன்றியம் மேல்களவாய் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ., கண்ணன் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி ஏழைகள் பயனடைவதற்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வல்லம் ஒன்றியத்தில் இதுவரை 10 மருத்துவ முகாம் கள் நடத்தப்பட்டு, 8,985 பேர் சிகிச்சை பெற்றனர். 365 பேர் மேல்சிகிச்சைக் காக பரிந்துரை செய்யப் பட்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான உதவி திட்டத்தில் தலா 6,000 ரூபாய் வீதம் 3,780 பெண்களுக்கு 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்ப் பட்டுள்ளது.
பிரசவ உதவித்தொகையாக 1,441 பெண்களுக்கு தலா 700 ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. உயிர் காக்கும் காப் பீட்டு திட்டத்தில் 244 நபர்கள் சிகிச்சை பெற் றுள்ளனர். 30 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய் துள்ளனர். அவசரத்திற்கும், பிரசவத்திற்கும் வாகனங்களுக்கு அவதிப்பட்ட கிராம மக்களுக்கு கிடைத் திருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை முதல்வர் கருணாநிதி ஆட்சியின் சாதனையில் கிடைத்தது என எம்.எல்.ஏ., கண்ணன் பேசினார்.
Top
பொது
* 1.அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
ரிஷிவந்தியத்திலிருந்து அரியந் தக்கா செல்லும் சாலையில் வயல் வெளிகளை ஒட்டியவாறு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைந் துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தை ஒட்டி நீர் நிரம்பிய பெரியகுளம் ஒன்று உள்ளதால் மாணவிகளுக்கு பாதுகாப் பில்லாத நிலை உள்ளது. பள்ளி வளாகத்தை ஒட்டி கரும்பு தோட்டங்களும், ஓடைகளும் உள்ளதால் மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்ததையடுத்து மாணவிகள் அவசரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போலீசார் பள்ளி வளாகத்தை முழுமையாக சோதனையிட்டும், பள்ளி வளாகம் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் எந்த இடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதோ என்ற அச்சத்தில் போலீசார் அலைக்கழிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கரும்பு தோட்டங்களையும், முள் வெளிகளையும் சோதனையிட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பள்ளி வளாகத்திற்குள் யார் வேண்டுமானாலும் எந்த பக்கம் வழியாகவும் அத்துமீறி உள்ளே நுழையலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு தீர்வாக பள்ளிக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Top
* 2.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயம் திறக்க வந்த முதல்வர் கருணாநிதிக்கு தி.மு.க., வினர் உற் சாக வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம் ரயில்நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அசோகன், ஒன் றிய செயலாளர் கள் வசந்தவேல், விஜயகுமார், கண்ணன், தங்கம், வக்கீல் நெடுஞ்செழியன், வேம்பி ரவி, துரைராஜ், வசந்தம் கார்த்திகேயன், ஜெயச் சந்திரன், அண்ணாதுரை, ஆறுமுகம், ராஜாராம், நகர செயலாளர்கள் பொன் ராமகிருஷ்ணன், காஜாநசீர், கல்யாண் குமார், சடையாண்டி, கபிலன், முனுசாமி, செல்வராஜ் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், தி.மு.க., நிர்வாகிகள் மாவட்ட தொண்டர்படை அமைப் பாளர் ரவிதுரை, துணை அமைப்பாளர் சிட் டிபாபு, நகர துணை அமைப்பாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள் நமச்சிவாயம், குமுதம், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளிதாஸ், தென்றல் சம்பத், நாகராஜன், காளிதாசன், விஸ்வநாதன், அலெக்ஸ் ராஜ், ஒன்றிய அமைப்பாளர் அன்புமணிமாறன், தளபதி நற்பணி மன்றம் செந் தில், ராம்குமார், சிவராமகிருஷ்ணன், எக்ஸ் சலண்ட் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் திருசங்கு, பி.எஸ். கே., கன்ஸ்ட் ரக்ஷன்ஸ் பெரிய சாமி, தங்கவேலு, தென்னரசு, பழனிசாமி, அருண் குமார், அசோக்குமார் கலந்து கொண்டனர்.
Top
* 3.பள்ளி ஆண்டு விழா
திண்டிவனம் : திண்டிவனம் மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு டாக்டர் மனோகர் தாஸ் தலைமை தாங்கினார். மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகி ஆனந்த் வரவேற் றார். பள்ளி முதல்வர் சர்மிளா ஆனந்த் ஆண்டறிக்கை வாசித்தார். வால் டர் ஸ்கடர் மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேக்கப் ராஜரத் தினம் பேசினார். ஆசிரியர்கள் பிரேம் நாத், நித் தியானந்தம், அரிமா கார்த்திக் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Top
* 4.அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
திண்டிவனம் : திண்டிவனம் காந்தியார் திடலில் ஜெ.,பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் வெங் கடேசன் தலைமை தாங் கினார். மகேஷ், ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண் முகம் தலைமை கழக பேச் சாளர் நெத்தியடி நாகை யன், புலவர் நல்லியக் கோடன், மணிமாறன் உட் பட பலர் பேசினர். மாவட்ட துணை செயலா ளர் பாலசுந்தரம், நிர்வா கிகள் தீனதயாளன், அப் பாஸ் மந்திரி, சேகர், டாக்டர் கணேசன், முகமது ஷெரீப், ஒன்றிய செயலா ளர்கள் நாகராஜன், பன்னீர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Top
* 5.நியமனம்
விழுப்புரம் : இந்திய தேசிய மனித உரிமை பாது காப்பு இயக்க தமிழ் மாநில தலைவ ராக ராமச்சந் திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நிய மனத்தை இந்திய தேசிய மனித உரிமை பாதுகாப்பு இயக்க தேசிய தலைவர் யோகனன் ஜார்ஜ் செய்துள்ளார்.
Top
* 6.தையற் தொழிலாளர் சங்க கூட்டம்
விழுப்புரம் : மாவட்ட தையற் கலை தொழிலாளர்கள் முன் னேற்ற சங்க கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் புரு ஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் தண்டபாணி முன் னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தமிழ் மணி, விழுப்புரம் நகர தலைவர் சந்தானம், செய லாளர் இளங்கோவன், விக்கிரவாண்டி நகர செயலாளர் பழனிசாமி, பிருதிவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் காப்பீட்டு திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரி விப்பது உட்பட பல தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Top
* 7.பாரத சாரண சாரணியர் இயக்கத்திற்கு விருதுகள்
விழுப்புரம் : பாரத சாரண சாரணியர் இயக்க செயல்பாடுகளில் முதலிடம் பிடித்த விழுப் புரம் மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது
விழுப்பரம் மாவட்ட பாரத சாரண சரணியர் இயக்கம் 2007-08ம் கல்வி யாண்டில் பல செயல் பாடு களில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தமிழக ஆளுநர் விருது (ராஜ புரஸ் கர்) பெற்றது. இதனை யொட்டி மாநில தலை மையகத்தில் நடந்த மாநில பொதுக் குழு கூட் டத்தில் பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந் திரன் பாராட்டு கேடயம் மற்றும் சான்றி தழ்கள் வழங்கினார். விருதை மாவட்ட செயலர் ரகுபதி, மாவட்ட கல்வி அலுவலர் கள் (பொறுப்பு) பாவா ணன், கலியப்படையாட்சி, சாரண ஆணையர் சந்திர சேகரன், செயலர் பாக்கிய நாதன், இணைச் செயலர் மீனா குமாரி பெற்றனர். மாநில சாரண ஆணை யர் வசுந்தரா தேவி, முறை சாரா கல்வி இணை இயக் குனர் லட்சுமி, மாநில பொருளர் விஜயன் உடனிருந்தனர்.
Top
* 8.சட்ட உதவி மையத்தில் விசாரணை ஒரே நாளில் 70 வழக்குகள் தீர்வு
திண்டிவனம் : பி.எஸ்.என்.எல்., தொலைபேசி கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் திண்டிவனம் சட்ட உதவி மையத்தில் நடந்த விசாரணையில், ஒரே நாளில் 70 வழக்குகள் தீர்வு காணப் பட்டன.
பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனத்தில் இணைப்பு பெற்று மாதாந்திர கட்டணம் செலுத்தாமல், பாக்கி வைத்துள்ள 400 சந்தாதாரர்கள் மீது திண்டிவனம் சட்டப் பணிகள் குழு நடத் தும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இது தொடர்பாக திண் டிவனம் கோர்ட் வளாகத் தில் உள்ள சட்ட உதவி மையத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அதன்படி ஓய்வுபெற்ற சார்பு நீதிபதி சுப்ரமணியன், உறுப்பினர் வக் கீல் செல்லவேல், சமூக சேவை உறுப்பினர் நக்கீரன் ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவும், ஓய்வுபெற்ற சார்பு நீதிபதி பாஸ்கர், உறுப்பினர் வக்கீல் முனுசாமி, சமூக சேவை உறுப்பினர் அரிதாஸ் ஆகியோரைக் கொண்ட மற் றொரு குழுவினரும், வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தி, கட்டண பாக்கியை உடன் திரும்ப செலுத்துமாறு உத்தரவிட்டனர். இதில் ஒரே நாளில் 70 வழக்குகள் தீர்வு காணப் பட்டது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனத்திற்கு 1.60 லட்சம் ரூபாய் வசூலானது. நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல்., நிர்வாக அலுவலர் தயாளன் உட் பட பலர் கலந்து கொண் டனர்.
Top
* 9.முதல்வர் வருகையால் தி.மு.க.,வினர் உற்சாகம்! வரவேற்பு ஏற்பாடுகள் 'தடபுடல்'
விழுப்புரம் : விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் கருணாநிதிக்கு சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட் டது. முதல்வர், துணை முதல்வர் வருகையால் தி.மு.க., வினர் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று விழுப்புரத்திற்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வருகை புரிந்தார். இதனையொட்டி ரயில் நிலையம் முதல் கலைஞர் அறிவாலயம் வரை சி.இ.ஓ., குப்புசாமி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இலவச சைக்கிள், கல்விக் கடன் உள்ளிட்ட வாசகங்களை கையில் ஏந்தியவாறு வரவேற்றனர். நலவாரியம் அமைத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரவாணிகள், நரிக்குறவர்கள் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் சாலை பணியா ளர்கள், தொழிலாளர்கள், மகளிர் அணியினர் தொழிலாளர்கள் முன் னேற்ற சங்கம், தொண்டரணி நிர்வாகிகள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்றனர்.
மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் காந்தி சிலை வரை பம்பையுடன் கூடிய சிலம் பாட்டம், கரகாட்டம், பொம்மைகள் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்க முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சேர்மன் ஜனகராஜ் காலை 9.20 மணிக்கு சாலையில் குதிரை வண்டியில் வலம் வந்து தொண் டர்களை உற்சாகப்படுத்
தினார்.
தளபதி நற்பணி மன்ற தலைவர் பொன்கவுதமசிகாமணி தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் "டி-சர்ட்' சகிதமாக ஆஜராகி அசத்தினர். சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களுக்கு காணை ஒன்றிய தி.மு.க., சார்பில் தொப்பிகள் வழங்கப்பட்டது.
முதல்வர் வருகையை ஒட்டி அரசு பஸ்கள் பல்வேறு ஊர் களிலிருந்து வரும் போது நகருக்கு வெளியே 3 கி.மீ., தொலைவில் பயணிகள் இறக்கி விடப் பட்டனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலையம் மற்றும் நான்குமுனை சிக்னல் சந்திப்பு ஆகிய பகுதிகள் நேற்று காலை வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
போலீஸ் கட்டுப்பாட்டில் விழுப்புரம் நகரம் வந்தது : முதல்வரின் பங்கேற்கும் விழாவிற்காக போலீசார் விழுப்புரம் நகரத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 10.51 மணிக்கு அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி அவரது குடும்பத்தினருடன் கலைஞர் அறிவாலயத்திற்கு காரில் வந்தனர். புதிய பஸ்நிலையம் எதிரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை நிறுத்தி அனுமதி மறுத்தனர். பின்னர் காரில் அமைச்சரின் குடும்பத்தினர் வந்ததை அறிந்த போலீசார் வழி விட்டனர். இதேப்போல் முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி வந்த காரை 9.57 மணிக்கு அரசு போக்குவரத்து கழகம் எதிரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் அவர் யார் என்பதை அறிந்த பிறகு உள்ளே அனுமதித்தனர்.
Top
* 10.ஆயந்தூரில் அ.தி.மு.க., பொதுக் கூட்ட நிகழ்ச்சி
திருக்கோவிலூர் : முகையூர் அடுத்த ஆயந்தூரில் அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி செயலாளர் சிவ ஞானம் வரவேற்றார். கிளை செயலாளர் ஆறு முகம், ஒன்றிய இணை செயலா ளர் மாலதி முன் னிலை வகித்தனர். ஒன்றிய செய லாளரான முன்னாள் எம். எல்.ஏ., கோதண்ட ராமன் தலைமை தாங்கினார். தலை மைக் கழக பேச்சா ளர் சிராஜிதீன் பேசினார். தொகுதி செயலாளர் லட்சாதிபதி, இணை செய லாளர் சந்திரபாபு, பொதுக் குழு உறுப்பினர் முனு சாமி, ஒன்றிய பொரு ளாளர் துரைராஜ், மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி, ராமச் சந்திரன், சீனுவாசன், இளங் கோவன், தெய்வ சிகா மணி, மனோகரன், ரகோத் தமன், பாசறை செயலர் ஏழுமலை, பால கிருஷ்ணன், மகளிரணி பாக்கியம் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Top
* 11.முதல்வருக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்பு
விழுப்புரம் : விழுப்புரம் வந்த முதல்வருக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நகர் மன்ற சேர்மன்கள் ஜனகராஜ், பூபாலன், துணைச் சேர்மன்கள் அசோகன், கவிதா முரளிதரன், ஒன் றிய சேர்மன்கள் வெங்கடாசலம், வசந்தி பாண்டியன், திலகவதிமூர்த்தி, பிரசன்னதேவி செல்வகுமார், காந்திமதி கண்ணன், ரத்னா கணபதி, சரவணன், சந்திரன், அலமேலு சின்னதுரை, நாகப்பன், சீத்தாபதி சொக்கலிங்கம், கல்பட்டு ராஜா, மலர்மன்னன், அன்பழகன், துணை சேர்மன்கள் முரு கவேல், அருணாசலம், வசந்தா விஸ் வநாதன், ஜெயராஜ், முருகன், சத்தியமூர்த்தி, முரளி, பழனிவேல், ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேரூராட்சி தலைவர்கள் மஸ் தான், ஆண்டாள், சம்பத், வனிதா, அர்ச்சுணன், அருணா மணிமாறன், ஊராட்சி தலைவர்கள் தவமணி, கலையரசி பாலு, கமலா ஜெயராமன், சாலாமேடு குமார், பூங்குன்றம், ஜெயபிரகாஷ், சிவலிங்கம், தனசேகர், மயிலதிபதி, பழனி, ரகோத்தமன், ஜான்பீட்டர், சாந்தா மாயவன், ராஜாபாதர், வெள்ளையன், ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்தி,அரசகுமார், பாண்டியன், பாண்டியராஜன், பிரான் சிஸ்காமேரி அன்துவான், ராமமூர்த்தி, திருமால், கவுரிஏழுமலை, சிவக்குமார், ஜோதி குணசேகரன், சுதா சீனுவாசன், கலாகுலசேகரன், கண்ணன், ராமச்சந்திரன், குணசேகரன், கண்ணன், பழனி, சாந்திவிஜயகுமார், அபிராம்பாள், பானுரேகா, ஜெயம் பிச்சன், காமராஜ்,சின்னதம்பி, சம்பத்,ராம்குமார், சுரேஷ், கருணாநிதி,வேலு, காமாட்சி,ஏழுமலை, ரகுபதி, ரவி, ராஜாராமன், சாந்தி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Top
* 12.யோகாசனப் பயிற்சி
செஞ்சி : செஞ்சியில் சிறப்பு யோகாசனப் பயிற்சி துவக்க விழா நடந்தது.
செஞ்சியில் ஜே.சி.ஐ., மற்றும் மன வளக் கலை மன்ற அறக் கட்டளை இணைந்து சிறப்பு யோகா சனப் பயிற்சி நடத்தினர். டாக்டர் ரமேஷ் பாபு பயிற் சியை துவக்கி வைத்தார். பயிற்சியில் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் சிறப்பு மிக்க எளிய உடற் பயிற்சி முறைகள் இலவச மாக கற்று தருகின்றனர். ஜே.சி.ஐ., தலைவர் லட் சுமி நாராயணன், துணை தலைவர் வேலுத்தம்பி, செயலாளர் காண்டீபன், இயக்குனர் செல்லபெரு மாள், ராஜசேகர் பங்கேற்றனர்.
Top
* 13.ஜோசப் பள்ளி ஆண்டு விழா
சங்கராபுரம் : சங்கராபுரம் ஜோசப் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். நகர தி.மு.க., தலைவர் குமார், வக்கீல் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாகி ஜோசப் சீனிவாசன் வரவேற்றார். முதல்வர் சாராள் சீனுவாசன் ஆண்டறிக்கை வாசித் தார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந் தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் முனுசாமி, குமார், அஸ்கர்அலி ஆகியோர் பரிசுகள் வழங் கினர். ஆசிரியர் ஜெயகுமார் நன்றி கூறினார்.
Top
* 14.649 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு
விழுப்புரம் : மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு மார்ச் மாதத்திற்கு 649 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிச் சந்தையில் பொது மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மார்ச் மாதத்திற்கு 649 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்து அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கார்டுதாரர்களும் அரசால் ஒதுக்கீடு செய்துள்ள துவரம் பருப்பை கிலோ 40 ரூபாய்க்கு பெற்று பயன் பெறலாம்.
Top
* 15.அம்மன் கோவிலில் 12ம் தேதி தீமிதி விழா
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல் லூர் திரவுபதிஅம்மன் கோவிலில் வரும் 12ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.
திருவெண்ணெய் நல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த மகோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. கடந்த 3ம் தேதி மகா பாரதம் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து 5ம் தேதி திருக் கல்யாணம் நடந்தது. தீமிதி விழா வரும் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. 13 ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும், 14ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.
Top
* 16.ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம் : வேலை உறுதி திட்டம் குறித்து களப்பணி ஆய்வுக் கூட்டம் இந்திய கம்யூ., (எம்.எல்) சார்பில் விழுப் புரத்தில் நடந்தது.
மாநில செயலாளர் வெங் கடேசன் தலைமை தாங் கினார். அகில இந்திய முற் போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர் சுசீலா வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க தேசிய துணைத் தலைவர் பால சுந்தரம், மாநில தலைவர் ஜனார்த்தன், மாநில பொது செயலாளர் ஜானகிராமன், மாவட்ட தலைவர் தட் சிணாமூர்த்தி பங்கேற்றனர்.
Top
* 17.கள்ளக்குறிச்சி பள்ளி ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகாடமியின் சி.சி.எஸ். இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஏ.கே.டி., கல்வி நிறு வனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங் கினார். செயலாளர் லட்சு மிபிரியா முன்னிலை வகித்தார். மாணவி பிரிய தர்ஷினி வரவேற்றார். பள்ளி முதல்வர் லெஸி போஸ்கோ ஆண்டு அறிக்கை வாசித்தார். பல் வேறு போட்டிகள் மற்றும் கல்வியில் சாதனை படைத்த மாணவ, மாணவி களுக்கு தாசில்தார் சண் முகம் பரிசுகள் வழங் கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏ.கே.டி., அகாடமி மெட் ரிக் பள்ளி முதல் வர்கள் இப்ராகிம்ஷெரீப், ஜெக தீஷ், ஜெயந்தி, இன்ஜினி யரிங் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார், பாலி டெக்னிக் கல்லூரி முதல் வர் வெங்கட்ராமன் மற்றும் ஆசிரிய, ஆசிரி யைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவி சிவகாமி நன்றி கூறினார்.
Top
* 18.திம்மலையில் பூமி பூஜை
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தில் தர்மதேவதைக்கு கோவில் அமைக்க பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Top
* 19.கள்ளக்குறிச்சியில் இன்று மகளிர் தினவிழா பேரணி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நக ராட்சி திருமண மண்ட பத்தில் இன்று மகளிர் தின விழா நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மகிமா பசுமை அறக்கட்டளை, வட்ட சட்டப்பணிக்குழு இணைந்து இன்று மாலை மகளிர் தின விழாவை கொண்டாடுகின்றன. முன்னதாக மாலை 3 மணிக்கு மந்தைவெளி திடலில் இருந்து மகளிர் பேரணியை ஆர்.டி.ஓ., வனிதா, டாக்டர் வனிதா மணி துவக்கி வைக்கின் றனர். மாலை 6 மணிக்கு கரூர் நர்த்தகி ஸ்வேதா சரண் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசளிக்கப் படுகிறது. நீதிபதிகள், டி.எஸ்.பி., வங்கி மேலா ளர்கள் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொள்கின்றனர்.
Top
* 20.உலகளந்த பெருமாள் புறப்பாடு
திருவெண்ணெய் நல்லூர் : உலகளந்த பெருமாள் நேற்று காலை திருவெண் ணெய்நல்லூர் பெருமாள் கோவிலிலிருந்து திருக் கோவிலூர் புறப்பட்டார்.
திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக கடந்த 23ம் தேதி பெருமாள் திருக்கோவிலூரிலிருந்து புறப்பாடானார். தொடர்ந்து பெண்ணைவலம், திருவாமூர், திருவதிகை வழியாக 27ம் தேதி இரவு திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் தங்கினார்.
மறுநாள் (28ம் தேதி) தேவனாம்பட்டினம் கடலில் நடந்த தீர்த்தவாரியில் கலந்து கொண்டு மீண்டும் திருப்பாதிரிபுலியூர், திருவந்திபுரம், பண்ருட்டி, சேமங்கலம் வழியாக பெரு மாள் புறப்பாடு துவங்கியது. நேற்று முன் தினம் இரவு திருவெண் ணெய் நல்லூர் வைகுண் டவாசகப்பெருமாள் கோவிலில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை எடையார், புதுப்பாளையம் வழியாக இரவு சி.மெய்யூரில் தங்கி னார். இன்று( 8 ம் தேதி) திருக் கோவிலூரில் சிறப் பான வரவேற்பு கொடுத்து கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். சுவாமியை பக்தர்கள் நடந்தே சுமந்து செல்கின் றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
Top
* 21.ரிஷிவந்தியத்தில் கொடியேற்று விழா
விழுப்புரம் : ரிஷிவந்தியம் ஒன்றிய மாணவரணி சார்பில் ஜெ., பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழையில் நடந்த விழாவிற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் சேட்டு தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா, கிளை செயலாளர் காந்தி ஆகியோர் இலவச நோட்டு புத்தகங் களை வழங்கினர். ரிஷிவந்தியம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பால், பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கினர். வக்கீல் துரை, நவாப் ஜான், ரஜினி, ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 22.மின்வாரிய தலைமை பொறியாளருக்கு மனு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தினசரி மின்தடை நேரத்தை மாற்றக்கோரி தமிழ்நாடு மின்வாரிய தலைமை பொறியாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் லக்கி சிவானந் தன் மனு: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தற்சமயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான மின் தடை நேரத்தை, காலை 9 மணி முதல் 11 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், காலை நேரத்தில் உணவு தயாரிக்கும் தாய்மார்கள் சிரமத்தை போக்கும் வகையில் மின்தடை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
Top
* 23.நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நலச்சங்க நிர்வாக குழு கூட்டம்
செஞ்சி : செஞ்சியில் மக்கள் உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நலச் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் துரைசோழன் வரவேற்றார். மாநில துணைப்பொதுச் செயலாளர் வில்வநாதன், நிர்வாக குழு உறுப்பினர் மாதவன், துணை தலைவர் தங்கவேலு, அமைப்பு செயலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். சந்தோஷ் குமார் நன்றி கூறினார். இதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் உயர்த்தப் பட்ட டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் விலையை குறைக்க வேண்டும். ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
Top
* 24.மயிலத்தில் இலவச மருத்துவ முகாம்
மயிலம் : மயிலத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் ரவி வரவேற்றார். டாக்டர்கள் தேன் மொழி, சீத்தாலட்சுமி, சுப்பரமணி, சாந்தி, வட்டார கல்வியாளர் மனோகரன், செவிலியர் ஆனி சரோஜனி, வட்டார சுகாதார ஆய்வாளர் துரைசாமி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ரத்த பரிசோதனை மூலம் நோய் கண்டறியப்பட்டு சிறப்பு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
Top
* 25.வருமுன் காப்போம் முகாம்
விழுப்புரம் : பனமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் கெடார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சுபாஷ் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ரவி முன்னிலை வகித்தார். காணை ஒன்றிய சேர்மன் கல்பட்டு ராஜா முகாமை துவக்கி வைத்து பேசினார். டாக்டர்கள் சுதா, தேன் மொழி, மணிவண்ணன், ஆர்த்தி, ஆயிஷா சிகிச்சையளித்தனர். ஒன்றிய துணை சேர்மன் முருகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன், கெடார் ரவி, ஏழு மலை, அரிகிருஷ்ணன், தண்ட பாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 825 பேர் சிகிச்சை பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், முருகன், கணேசன் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் சித்தார்த்தன் நன்றி கூறினார்.
Top
* 26.சின்னசேலத்தில் சாலை பணிகள்
சின்னசேலம் : சின்னசேலம் பேரூராட்சியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலங்கள், சாலைப்பணிகள் நடந்து வருகிறது.
சின்னசேலம் சிவன் கோவில் எதிரே பாலம் கட் டும் பணியும், அம்சாகுளம் அருகில் பாலம் கட் டும் பணியும், டேனிஷ் மிஷன் பள்ளிக்கு பின்புறமாக பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. பணிகளை சேர்மன் மீனாட்சி, பி.டி.ஓ., கபினி, இன்ஜினியர் மாரிமுத்து பார்வையிட்டனர்.
Top
* 27.மாணவர்களுக்கு உணவு வழங்கல்
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை ஹரிக்ஷா மனவளர்ச்சி குன்றிய பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் ஊராட்சி தலைவர் அருணாசலம் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பானுரேகா தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின், சித்தகிரி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனி, ராஜவேலாயுதம், அரிமா சங்க செயலாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 28.படைப்பாற்றல் பயிற்சி முகாம்
விழுப்புரம் : அனைவருக்கும் கல்வி இயக்கம் விழுப்புரம் வட்டார வள மையம் சார்பில் விழுப்புரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான எளிமைப் படுத்தப்பட்ட படைப்பாற்றல் பயிற்சி முகாம் நடந்தது.
விழுப்புரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் பயிற்சியை துவக்கி வைத் தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியநாராயணன் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார். 22 ஒன்றியங்களிலிருந்தும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். 5 பாடத்திற்கும் அறிமுகம், கடின வார்த்தை, மன வரைபடம், தொகுத்தல், வலுவூட்டல், மதிப்பீடு, குறை தீர் கற்பித்தல் போன்ற செயல்பாடுகளில் பயிற்சியளிக்கப்பட்டது.
Top
* 29.செஞ்சுருள் சங்க துவக்க விழா
விழுப்புரம் : விழுப்புரம் சுவாமி விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு விழா நடந்தது.
கல்லூரி தலைவர் தியாகராஜன் தலைமை தாங் கினார். செயலாளர் பரந்தாமன் முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் கண்ணையா அறிமுகவுரை யாற்றினார். திட்ட அலுவலர் ஸ்ரீவக்சன் வரவேற்றார். மாவட்ட மேலாளர் ஏழுமலை, செஞ்சி அரசு மருத்துவமனை ஆலோசகர் விஜயகுமார் சிறப்புரையாற்றினர். கல்லூரி நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Top
* 30.சிறப்பு பூஜைகள்
விழுப்புரம் : பங்காரு அடிகளாரின் 70வது பிறந்த நாளை முன் னிட்டு சிறப்பு வேள்வி பூஜைகள் நடந்தது.
விழுப்புரம் நாராயண நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை கள் நடந்தது. கலச விளக்கு வேள்வி பூஜை யில் வைத்து பூஜை செய்த குரு கலசம் அடிக ளாரி டம் சக்தி பீடத்தினர் சமர் பித்து அருளாசி பெற்று வந்தனர். பூஜை ஏற்பாடுகளை சக்தி பீட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
Top
* 31.ஆத்திப்பட்டு மாணவர்கள் மாவட்ட பயிற்சிக்கு தேர்வு
செஞ்சி : மாவட்ட விளையாட்டு துறை இலவச பயிற்சி முகாமிற்கு ஆத்திப்பட்டு பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்வாகினர்.
மேல்மலையனூர் ஒன்றியம் ஆத்திப்பட்டு ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள் 9 பேர் திண் டிவனம் கல்வி மாவட்ட அளவில் எறையூர் உயர் நிலைப் பள்ளியில் நடந்த தனித்திறன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் மூன்று பேர் முத லிடமும் , 2 பேர் இரண் டாவது இடமும் பெற்று வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து 9 மாணவர் களும் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் நடக்கும் இலவச பயிற்சி திட்டத் துக்கு தேர்வு செய்யப் பட்டனர். மேலும் 2 மாணவர்கள் வேலூரில் நடக்கும் மண்டல அள விலான விளையாட்டு போட்டிக் கும் தகுதி பெற் றுள்ளனர். இந்த மாணவர் களுக்கு தலைமை ஆசிரியர் அக் சிலியம் பெலிக்ஸ், உதவி ஆசிரியர் ஜார்ஜ் விக்டர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
Top
* 32.பூங்கொத்து பயிற்சி
விழுப்புரம் : அனைவருக்கும் கல்வி இயக்கம் விழுப்புரம் வட் டார வள மையத்தில் புத் தக பூங்கொத்து குறித்த செயற்கை கோள் ஒளிப ரப்பு நிகழ்ச்சி நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் கண்ணப்பன் கருத்துரை வழங்கினார். புத்தக பூங் கொத்து புத்தகத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகள், வாக்கியங்கள், எழுத்துக் கள், படங்கள் குறித்து செயற்கை கோள் மூலம் விளக்கினர். 22 ஒன்றியங் களில் இருந்தும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வை யாளர் விஸ்வநாதன் நிகழ்ச்சி ஏற் பாடுகளை செய்திருந்தார்.
Top
* 33.கண்தானம்
கள்ளக்குறிச்சி : இறந்த மூதாட்டியின் கண்களை அரிமா சங்கத் தினர் தான மாக பெற்றனர்.
தியாகதுருகம் அண்ணா நகர் ரவிச்சந்திரன் தாய் மதுராம்பாள்(85) இயற்கை யாக இறந்தார். அவரது குடும்பத்தினர் சம்மதத் தின்பேரில் டாக்டர் நேரு இறந்தவரின் கண்களை அகற்றினார். அதனை கள் ளக்குறிச்சி அரிமா சங்க தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சுரேஷ்குமார் பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Top
* 34.பணி நிறைவு பாராட்டு விழா
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் மகாலிங்கம் வரவேற்றார். பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் அபுபக்கரை வாழ்த்தி முன் னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி, கவிஞர் சீதா ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Top
* 35.முப்பெரும் விழா
உளுந்தூர்பேட்டை : பாதூர் நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
நமது உலகம் திட்டத் தின்படி நடந்த முப் பெரும் விழாவில் கட் டுரை, பேச்சு மற்றும் வாசகப்போட்டிகளில் வென்ற மாணவர் களுக்கு தலைமை ஆசிரியர் ரோஸ் சான்றிதழ் வழங்கினார். இத்திட்டத் தின் மூலம் 100 மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். நூலகர் சிவக்குமார் நன்றி கூறினார்.
Top
* 36.அந்திலி கோவிலில் சுதர்சன ஹோமம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத் திரத்தை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடந்தது.
அந்திலி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன் னிட்டு காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திரு மஞ்சனம் நடந்தது. இத னையடுத்து சுதர்சன ஹோமம், நரசிம்மர் ஹோமம், லட்சுமி ஹோம மும், பகல் 12 மணிக்கு மூலவருக்கு மகா தீபாரா தனையும் நடந்தது.
Top
பிரச்னைகள்
* 1.மேம்பாலத்தின் சோடியம் விளக்குகள் எரிவதில் சிக்கல் நீடிப்பு
திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்திலுள்ள சோடியம் விளக்குள் நிரந்தரமாக எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள போக்குவரத்து நெரிசல்களை நிரந்தரமாக போக் கும் வகையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 25 கோடி செலவில் சென்னை, கோயம்புத் தூரில் உள்ளது போல் பிரமாண்டமாக மேம்பாலம் கட்டப்பட்டது. நான்கு வழிகளிலிருந்து வரும் வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்கேற்ப பாலம் கட்டப்பட்டதால் நகரத்தில் நீண்ட நாட்கள் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.
மேம்பாலம் கட்டப்பட்ட போது பாலத்தின் நான்கு பக்கமும் 250 சோடியம் விளக்குகள் பொருத் தப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டும் தொடர்ந்து எரிந்த சோடியம் விளக்குகள் அதன் பிறகு எரியவில்லை. மின்சார கட்டணம் யார் கட்டுவது என்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கும், நகராட்சிக்கும் மோதல் ஏற்பட்டதால் சோடியம் விளக்குள் எரியாத நிலை ஏற்பட் டது. இதனால் இரவு நேரத்தில் பாலம் இருளில் மூழ்கியது.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் ஹைமாஸ் விளக்கு அமைக் கப்பட்டது. இந்த விளக்கும் அடிக்கடி பழுதானதால் பழைய படி மேம்பாலப்பகுதி இருளில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டது. அப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் அதிகளவு திருட்டு சம்பவங்கள் நடந்தது.
சோடியம் விளக்குகள் எரியாமல் இருப்பது பற்றி நகராட்சி கமிஷனர் முருகேசனிடம் கேட்டதற்கு" மேம்பாலத்தை நெடுஞ் சாலைத்துறையினர் முறைப்படி நகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை. நகராட்சியிடம் ஒப் படைத்த பிறகு பாலத்திலுள்ள அனைத்து விளக்குகளும் முழு மையாக எரியும்' என்று தெரிவித்தார். சம்பந்தபட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பாலத் தின் அனைத்து விளக்குகளும் எரிய வைக்க வேண்டும்.
Top
* 2.மயான பாதை அமைத்திட களையூர் மக்கள் கோரிக்கை
செஞ்சி : களையூர் கிராம மக்கள் மயானப்பாதை அமைத்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
செஞ்சி தாலுகா களையூர் கிராம பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: களையூர் கிராமத்தில் இருந்து மயானம் 3 கி. மீ., தூரத்தில் உள்ளது. இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல பாதை இல்லாமல் விவசாய நிலங்களின் வழியாகவும், ஏரிக்கரையின் வழியாகவும் அவதியுடன் எடுத்து செல்கின்றோம். தனியார் நிலங்களில் தற்போது தைலம், சவுக்கு மரங்களை பயிரிட்டுள்ளனர். இந்த வழியாக செல் லும் போது இந்த மரங் களை வெட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. மழையின் போது இறந்தவரின் உடலை எடுத்தும் செல் லும் வழியில் சேறும், சகதியும், முள் ளும் மண்டிக்கிடக் கின்றன. இப் பிரச்னையை தீர்க்க களையூரிலிருந்து சங்கராபரணி ஆற்றங் கரை வரை மயானபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Top
சம்பவம்
* 1.மனிதநேய மக்கள் கட்சி மறியல்: 120 பேர் கைது
செஞ்சி : டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மறியல் செய்ய முயன்ற மனித நேய மக்கள் கட்சியினர் 120 பேர் செஞ்சியில் கைது செய்யப்பட்டனர்.
செஞ்சியில் திருவண் ணாமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை யின் எதிரில் மதுக்கடை களை மூட வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. செஞ்சி ஒன்றிய செய லாளர் பக்ருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல்காதர், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தாக்தீன் , அஹமத் சித்திக் பாகாவி, மாவட்ட வர்த்தகர் அணி செயலா ளர் சான்பாஷா ஆகியோர் தமிழகத்தில் மதுக்கடை களை மூட வேண்டுமென வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொருளாளர் அமீர்அப்பாஸ் , ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான், கௌஸ், பாரூக் , அஷ்ரப் உட்பட பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை எதிரில் மறியல் செய்ய முயன்ற 120 பேரை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.
Top
* 2.தீக்குளித்து ஒருவர் பலி
திண்டிவனம் : வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் கசாமியன் தெருவில் வசித்தவர் சாதிக் பாஷா(39). அடிக்கடி வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்த அவர் கடந்த 4ம் தேதி மன முடைந்து உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். புதுச்சேரி ஜிப்மர் மருத் துவ மனையில் சேர்க்கப் பட்ட அவர் சிகிச்சை பல னின்றி நேற்று முன்தினம் இறந் தார். திண்டிவனம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Top
* 3.பிணத்தை ரோட்டில் வைத்து மறியல்
திண்டிவனம் : திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் பிணத்தை ரோட்டில் வைத்து கிராம மக்கள் மறியல் செய்தனர்.
திண்டிவனம் அடுத் துள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் முருகன்(30). இவர் கடந்த பிப். 21ம் தேதி இரவு செஞ்சிரோட்டில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். புதுச்சேரி காலப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன், நினைவு திரும் பாத நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
முருகனின் உடல் பட் டணம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. முருகன் தாக்கப்பட்ட சம் பவம் குறித்து ரோஷணை போலீசில் புகார் கொடுக் கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர். முருகனை தாக்கியவர்களை உடனே கைது செய்யக் கோரி பட்டணம் கிராம பொதுமக்கள் நூறு பேர், திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் சாலை மறியல் செய்தனர். நேற்று காலை 7.30 மணிக்கு முருகனின் பிணம் ரோட்டில் வைக்கப்பட்டு மறியல் நடந்தது. தகவலறிந்த ரோஷணை சப்–இன்ஸ் பெக்டர் நாக ரத்தினம் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் வாபஸ் பெறப்பட்டது.
Top
* 4.பள்ளத்தில் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி
உளுந்தூர்பேட்டை : திருநாவலூர் அருகே கார் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர் இறந்தார்.
திருச்சியை சேர்ந்த வர்கள் கிருஷ்ணசாமி மகன் ராம்தீபக்(23), ஜெயமூர்த்தி மகன் சித்தார்த் அமிர்த ராஜ்(22). இருவரும் சென்னை ஸ்டான்லி மருத்து கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தனர். கடந்த 25ம் தேதி இவர்கள் டொயாட்டோ காரில் திருச்சியிலிருந்து சென்னைக்கு திரும்பினர். காரை ராம்தீபக் ஓட்டினார். திருநாவலூர் அடுத்த பாதூர் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இருவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சித்தார்த்அமிர்த ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருநாவலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Top
* 5.போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி கிராம மக்கள் சாலை மறியல்; கல்வீச்சு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார். பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த தஞ்சாவூர் போலீசார் மதியம் 2.30 மணிக்கு வளவனூர் திருமண மண்டபத்திற்கு சாப்பிட வேன் மூலம் சென்றனர். கோலியனூர் அருகே எதிரே வந்த மொபட் மீது வேன் திடீரென மோதியது. அதே வேன் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் டிப்பர் மீதும் மோதியது. இவ்விபத்தில் மொபட் டில் வந்த அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிராக்டரில் வந்த சாலை அகரத்தைச் சேர்ந்த டிரைவர் வடிவேல், பெண் கூலி தொழிலாளிகள் விசலாட்சி(35), லதா(35), மங் கலட்சுமி ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர்.
இறந்தவரின் உறவினர்கள் வரும் வரை உடலை எடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் போலீஸ் வாகனம் மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களையும் கல்வீசி தாக்கினர். மதியம் 3.27 மணிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் அதிரடிப்படை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் கூட்டத்தில் சிலர் கல்வீசியதால் பதட்டம் ஏற்பட்டது.
மாலை 3.50 மணிக்கு இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முயன்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்கினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு, இறந்தவரின் உடலை ஆம் புலன்சில் ஏற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Top
* 6.இளைஞர் காங்., தேர்தல் விதிமுறை: கட்சியினர் கலக்கம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் காங்., வார்டு உறுப்பினர்களுக் கான தேர்தல் பலத்த கெடுபிடிகளுடன் நடந்தது.
திண்டிவனம் தொகுதியை சேர்ந்த 26 கிராமங்களுக்கான கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு திண்டிவனம் ராஜராஜன் திருமண மண்டபத்தில் துவங் கியது. தொகுதியின் மேலிட தேர்தல் பார்வையாளர் சீனுவாஸ் பீபி தலைமையில் உதவி பார்வையாளர் ரகுநாதரெட்டி உதவியுடன் நடந்த ஓட்டுப்பதிவில் கிராமங்களிலிருந்து வந்திருந்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண் கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
ஓட்டுபோட வந்தவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் பெயர் உள் ளதா, அடையாளம் காண ரேஷன் கார்டு அடுத்து வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனரா என பார்வையாளர்கள் விசாரித்தே ஓட்டு போட அனுமதித்தனர். தேர்தல் கமிஷன் பின்பற்றும் அனைத்து நடைமுறைகளும் கட்சி தேர்தலின் போது நடைமுறைப்படுத் தப்பட்டது. தேர்தல் நடைபெறும் இடத்தில் வாக்கா ளர்கள் தவிர காங்., கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒருவர் கூட மண்டபத்தில் தென்படவில்லை.
இதுபற்றி மண்டபத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமனிடம் கேட்ட போது" தேர் தல் நடக்கும் இடத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லக்கூடாது. மீறி யாராவது உள்ளே சென்று பிரச்னை செய்தால் அந்த நிர்வாகி கட்சியை விட்டு 6 ஆண்டு சஸ் பெண்ட் செய்யப்படுவா கள்' என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் உட்கட்சி தேர்தல் என் றாலே அடி, தடி, ரகளை என்று பார்த்த திண்டிவனம் நகர மக்கள், நேற்று நடந்த காங்., கட்சி தேர்தல் அமைதியாக நடந்ததைக் கண்டு வியந்தனர். இதற்கு காரணமான இளைஞர் காங்., தலைவர் ராகுல் காந்தியை பாராட்டினர்.
Top
* 7.சின்னசேலம் அருகே ஆம்புலன்சில் 'குவா குவா'
சின்னசேலம் : சின்னசேலம் அருகே அரசு ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
சின்னசேலம் அடுத்த கூகையூரைச் சேர்ந்த கருப் பையா மனைவி செல்வி நேற்று அதிகாலை பிரசவ வலியால் அவதிப்பட் டார். இதையடுத்து சின்ன சேலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில், மருத்துவ உதவியாளர் மணி ஆகி யோர் விரைந்து சென்று செல்வியை நைனார் பாளையம் ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவருக்கு ஆம்புலன்சி லேயே பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந் தையும் நைனார்பாளை யம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப் பட்டனர்.
Top
* 8.இரு வாலிபர்கள் பலி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத் தில் இரண்டு வாலிபர்கள் இறந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கனந்தலைச் சேர்ந்த கண்ணன் மகன் மாதேஸ் வரன்(20) தனது நண்பர் அருளுடன் பைக்கில் கச்சிராயப்பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு காரனூர் கைகாட்டி அருகே எதிரே வந்த ஹீரோ ஹோண்டா, பைக் மீது மோதியது. படுகாயமடைந்த மாதேஸ்வரன், அருள் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த ராஜகோபால்(19) ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட் டனர். அங்கு மாதேஸ்வரன் இறந்தார். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜகோபால் இறந்தார்.
Top
* 9.அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வினியோகம் : விழுப்புரத்தில் திடீர் பரபரப்பு
விழுப்புரம் : கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் விழுப்புரத்தில் துண்டு பிரசுரம் வினியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் நடக் கும் நிகழ்ச்சியை கண் டித்து கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் தொண்டர்கள் துண்டு பிரசுரத்தை பெரியார் நகர், கோலியனூர் கூட்ரோடு ஆகிய இடங்களில் விநியோகம் செய்தனர். அவைத் தலைவர் மதுரைக் கண்ணு, மாணவரணி செயலாளர் சசிக்குமார், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நோட்டீசில், ""கருணாநிதியே, கருணாநிதியே இந்த விழா உனக்கு ஒரு கேடா, இலவசம், இலவசம் என்று நாட்டின் பொரு ளாதாரத்தைச் சீரழிக்கும் கருணாநிதியே பதவி விலகு, பதவி விலகு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை நியாயப்படுத் தும் மைனாரிட்டி தி.மு.க., கருணாநிதியே பதவி விலகு என அச்சிட்டுள்ளனர். முதல்வர் விழுப்புரம் வந்த நேரத்தில் வினியோகித்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் 13ம் தேதி கரும்பு விலையை உயர்த்தக் கோரி விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது, அவரை கண்டித்து நகரின் பல பகுதிகளில் தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வினியோகித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோன்று தற்போது கருணாநிதியின் வருகையின் போது அ.தி. மு.க., வினர் நோட்டீசை விநியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment